உடுமலை நாராயணக்கவி

உடுமலை நாராயணக்கவி

உடுமலை நாராயணக்கவி

உடுமலை நாராயணக்கவி
உடுமலை நாராயணக்கவி
  • இவரின் ஊர் = பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள பூளவாடி
  • இவரின் குரு = உடுமலை முத்துசாமி கவிராயர்
  • நீதிபதி கோகுலக்கிரிஷ்ணன் அவர்கள் தலைமையில் இவருக்கு “சாகித்ய ரத்னாகர் விருது” வழங்கப்பட்டது
  • “கலைமாமணி” விருது பெற்றுள்ளார்

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

  • தமிழக அரசு இவருக்கு அவர் ஊரில் நினைவு மண்டபம் எழுப்பியுள்ளது
  • நாட்டுப்புறப் பாடல் மெட்டுகளைத் திரைப்படத்தில் அறிமுகம் செய்தவர்
  • சீர்திருத்தக் கருத்துக்களைத் முதன் முதலில் திரைப்படத்தில் புகுத்தியவர்
  • இவரை “பகுத்தறிவு கவிராயர்” எனப் போற்றுவர்.
  • முதன்முதலாக கவிதை எழுதிய திரைப்படம் “சந்திர மோகனா அல்லது சமூகத்தொண்டு” ஆகும்.
    விடுதலைப் போராட்டத்தின் போது தேசிய உணர்வு மிக்க பாடல்களை எழுதி மேடை தோறும் முழங்கியவர்.
  • முத்துசாமிக் கவிராயரின் மாணவர்.
  • ஆரம்பத்தில் ஆன்மீகப் பாடல்களை எழுதிய நாராயணகவி, மகாகவி பாரதியாரின் நட்புக்குப்பின் பாமர மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமுதாயப் பாடல்களை எழுதி அதன் மூலம் சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்பியவர்.
  • கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனுக்கு `கிந்தனார்’ கதாகாலட்சேபம் எழுதியதால் கலைவாணரின் குருவாக விளங்கியவர்.
  • இந்திய அரசு உடுமலை நாராயணகவி நினைவைப் போற்றும் வகையில் 31.12.2008 இல் இந்திய அஞ்சல் துறை அஞ்சல்தலை வெளியிட்டுள்ளது.
  • தமிழ்நாடு அரசு இவர் வாழ்ந்த திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் உடுமலை நாராயணகவி நினைவைப் போற்றும் வகையில் மணிமண்டபம் அமைத்துள்ளது.

 

 

Leave a Reply