11 ஆம் வகுப்பு கடவுள் வாழ்த்து

11 ஆம் வகுப்பு கடவுள் வாழ்த்து

11 ஆம் வகுப்பு கடவுள் வாழ்த்து
11 ஆம் வகுப்பு கடவுள் வாழ்த்து

11 ஆம் வகுப்பு கடவுள் வாழ்த்து

  • தொடங்கும் செயல் இனிதே நிறைவுற இறைவனை வாழ்த்தும் மரபின்படி, இறைவாழ்த்து பாடப்படுகிறது.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

தாயுமானவர் ஆசிரியர் குறிப்பு

  • தாயுமானவர் பாடல்கள் என்னும் தொகைநூலில் 1452 பாடல்கள் உள்ளன.
  • இவர் வேதாரண்யம் என்னும் திருமறைக்காட்டில் கேடிலியப்ப பிள்ளைக்கும், கெசவல்லி அம்மைக்கும் மகனாகப் பிறந்தார்.
  • திருச்சியில் உள்ள தாயுமானவர் அருளால் பிறந்தமையால் இவருக்கு தாயுமானவர் எனப் பெயரிடப்பட்டது.
  • கேடிலியப்ப பிள்ளை திருச்சிராப்பள்ளியை ஆண்ட விசயரங்க சொக்கநாத நாயக்கர் என்ற அரசரிடம் கணக்கராகப் பணிபுரிந்து வந்தார்.
  • அவர் மறைவுக்குப் பின்னர்த் தாயுமானவர் அப்பணியை ஏற்றார்.
  • விஜயரங்க சொக்கநாதர் ஆட்சியிலும், அவர் மனைவி இராணி மீனாட்சி ஆட்சியிலும் கணக்கராகப் பணிபுரிந்தார்.
  • இவரின் மனைவி மட்டுவார்குழலி.
  • தாயுமானவரின் குரு = திருமூலர் மரபில் வந்த மௌனகுரு.
  • இவர் முக்தி அடைந்த இடம் இராமநாதபுரம் மாவட்டம் இலட்சுமிபுரம்.
  • காலம் பதினெட்டாம் நூற்றாண்டு.

தமிழ்மொழியின் உபநிடதம்

  • தாயுமானவர் பாடல்கள் “தமிழ் மொழியின் உபநிடதம்” எனப் போற்றப்படுகிறது.

சொற்பொருள்

  • ஆரமிர்தே = அரிய அமிழ்தே
  • பூரணமாய் = முழுமையாய்
  • புனிதம் = தூய்மை
  • விழுப்பொருள் = மேலானப்பொருள்

இலக்கணக்குறிப்பு

  • பழச்சுவை = ஆறாம் வேற்றுமைத் தொகை
  • தரும் பொருளே = செய்யும் என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சம்
  • காலமும் தேசமும் = எண்ணும்மை
  • உயிர்த்திரள் = ஆறாம் வேற்றுமைத் தொகை
  • விழுப்பொருள் = உரிச்சொற்றொடர்

 

Leave a Reply