11 ஆம் வகுப்பு திருக்குறள்

11 ஆம் வகுப்பு திருக்குறள்

11 ஆம் வகுப்பு திருக்குறள்
11 ஆம் வகுப்பு திருக்குறள்

11 ஆம் வகுப்பு திருக்குறள்

  • “குறள்” என்பது இரண்டடி வெண்பாவைக் குறிக்கும்.
  • திருக்குறள் என்பது அடையடுத்த கருவியாகு பெயர்.
  • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று திருக்குறள்.
  • திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் மூன்று பெரும் பிரிவுகளை கொண்டது.
  • 133 அதிகாரங்களையும், அதிகாரத்திற்கு பத்து பாடல வீதம் மொத்தம் 1330 குறட்பாக்கள் உள்ளன.
  • அறத்துப்பால் முப்பத்தி எட்டு அதிகாரங்களை உடையது. அது பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என்னும் நான்கு இயல்களை கொண்டுள்ளது.
  • பொருட்பால் எழுபது அதிகாரங்களையும், அரசியல், அங்கவியல், ஒழிபியல் என்னும் மூன்று இயல்களையும் கொண்டுள்ளது.
  • காமத்துப்பால் 25 அதிகாரங்களையும், களவியல், கற்பியல் என்ற இன்டு இயல்களையும் உடையது.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

திருக்குறள் வேறு பெயர்கள்

  • “தமிழ் மாதின் இனிய உயிர்நிலை” என்று உலகோரால் பாராட்டப்படும் நூல் திருக்குறள்.
  • திருக்குறள் “தமிழர் திருமறை” ஆகும்.
  • “உலகப் பொதுமறை” என்று அழைக்கபப்டும் நூல் = திருக்குறள்.
  • தெய்வநூல்
  • முப்பால்
  • வாயுறை வாழ்த்து
  • உத்தரவேதம்
  • பொய்யாமொழி

திருக்குறள் சிறப்புகள்

  • “திருவள்ளுவன் வாய் விளைத்தவற்றுள் இல்லாததில்லை இணையில்லை முப்பாலுக் கிந்நிலத்தே” என்று தமிழரை விம்மித முறவைப்பது இத்தெய்வநூல்.
  • இந்நூலுட் கூறப்பட்டுள்ள கருத்துகள் யாவர்க்கும் எக்காலத்திற்கும் பொருந்துவனவாக விளங்குகின்றன.
  • உலகப் பெருமொழிகள் பலவற்றிலும் மொழி பெயர்க்கப்பட்டு பலராலும் படிக்கப்பெற்று வருகிறது.
  • உலகம் முழுவதும் ஒப்பக் கூடிய சிறந்த கருத்துகளைக் கொண்டுள்ள இந்நூல் உலகப் பொதுமறையாகப் போற்றப்படுகிறது.
  • திருக்குறளையோ அதன் கருத்துகளையோ எடுத்தாளாத அறிஞர் பெருமக்கள் இலர் என்று கூறுமளவிற்குப் பெருமை பெற்றுள்ளது.
  • “அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்” என்று திருக்குறளை புகழ்ந்தவர் = ஔவையார்.
  • திருக்குறளையும் திருவள்ளுவரையும் பழந்தமிழ்ப் புலவர்கள் பாராட்டிப் பாடிய நுால் திருவள்ளுவ மாலை என்று அழைக்கப்படுகிறது.

திருவள்ளுவர் ஆசிரியர் குறிப்பு

  • இத்தகைய பெருநூலை நமக்கு இயற்றித் தந்தவர் தெய்வப்புலவர் திருவள்ளுவர் ஆவர்.
  • இவர் கடைச்சங்க காலமாகிய கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்பர்.
  • திருவள்ளுவரைப் பற்றிய உண்மை வரலாறு புலப்படவில்லை.
  • செவிவழிச் செய்திகளே உள்ளன.
  • திருவள்ளுவர் வாழ்ந்த காலம் பற்றிக் கருத்து வேறுபாடுகள் உண்டு.
  • இவர் கி.மு. 31-இல் தோன்றியவரென்று அறிஞர் சிலர் கூறுவர்.
  • இதைக் கணக்கில் சேர்க்கவும் கொண்டு திருவள்ளுவராண்டு முறை வழங்கி வருகிறது.

திருவள்ளுவர் சிறப்பு பெயர்கள்

  • முதற்பாவலர்
  • பொய்யில் புலவர்
  • பெருநாவலர்
  • செந்நாப்போதார்
  • நாயனார்
  • தேவர்
  • மாதானுபங்கி

சொற்பொருள்

  • அடக்கம் = மனம் மொழி மெய்கள் தீயவழிகளிற் செல்லாது அடங்குதல்
  • அமரருள் = தேவர் உலகம் (சுவர்க்கம்)
  • உய்க்கும் = செலுத்தும்
  • ஆரிருள் = நரகம்
  • பொருளா = உயர்ந்த பொருளாகக் கருதி
  • காக்க = கடைப்பிடித்து ஒழுகுக
  • அதனின் ஊங்கு = அவ் அடக்கத்தைவிடவும்
  • செறிவு = அடக்கம்
  • சீர்மை = விழுப்பம், சிறப்பு
  • அறிவறிந்து = அடங்கியிருத்தலே அறிவாவது என்றறிந்து
  • ஆற்றின் =நேரியவழியில்
  • நிலையின் = (இல்லறநெறியாகிய) நிலையின் நின்று
  • திரியாது = நிலைபிறழாது
  • தோற்றம் = உயர்வு
  • மாண = மிகவும்
  • நன்று ஆம் = நன்மைதருவதே ஆம்
  • பணிதல் = அடங்குதல்
  • செல்வந்தகைத்து = செல்வம் எனத்தகும் சிறப்பினையுடைத்து.
  • ஐந்து = ஐம்பொறிகள்
  • ஒருமை = ஒரு பிறப்பு
  • எழுமை = ஏழு பிறப்பு
  • ஏமாப்பு= பாதுகாப்பு.
  • யா = எவற்றை (எல்லாவற்றையும்)
  • சோகாப்பர் = துன்புறுவர்
  • சொல்இழுக்கு = சொற்குற்றம்
  • பொருட்பயன் = பொருளால் விளைவது
  • உண்டாயின் = உண்டாவது ஆயின்
  • நன்றாகாது ஆகிவிடும் = தீதாகிவிடும்
  • நாவினால் = கடுஞ்சொற்களால்
  • வடு = தழும்பு
  • கதம் = சினம்
  • காத்து = அடக்கி
  • செவ்வி = தகுந்த காலம்
  • அறம் = அறக்கடவுள்
  • ஆற்றின் = அடையும் வழியில்
  • கைம்மாறு = எதிர்பார்த்துச் செய்யும் உதவி
  • கடப்பாடு = கடமையாய்க் கொண்டு செயல்படல்
  • மாரி = மழையைத் தரும் மேகம்
  • தந்த = ஈட்டிய
  • தக்கார்க்கு = தகுந்தவர்க்கு
  • தாளாற்றி = மிக்க முயற்சி செய்து
  • வேளாண்மை = உதவி
  • புத்தேள் உலகம் = தேவர் உலகத்தும்
  • ஈண்டும் = இவ்வுலகத்தும்
  • ஒப்புரவின் = ஒப்புரவைக் காட்டிலும்
  • நல்லபிற = நல்லனவாய பிறசெயல்கள்
  • ஒத்தது = உலகநடையறிந்து அதற்கிசையச் செய்வது
  • செத்தாருள் வைக்கப்படும் = இறந்தாருள் ஒருவனாக் கருதப்படுவான்
  • ஊருணி = ஊர் மக்கள் உண்ணுநீர்க்குளம்
  • உலகுஅவாம் = உலக நடையை விரும்பிச் செய்யும்
  • திரு = செல்வம்
  • அற்று = போலும்
  • பயன்மரம் = பயன்படும்மரம்
  • உள்ளூர் = ஊர்நடுவே
  • நயனுடையான் – நல்ல உள்ளமுடையவன் (ஒப்புரவாளன்)
  • மருந்தாகி = மருந்தாய்
  • தப்பா = தப்பாத
  • மரத்தற்று = மரத்தை ஒப்பது.
  • இடம் = செல்வம்
  • இடனில் பருவம் = வறுமையுற்றகாலம்
  • ஒல்கார் = தளரார்
  • கடன் = முறைமை
  • காட்சியவர் = அறிவுடையார்.
  • நயனுடையான் = ஒப்புரவாளன்
  • நல்கூர்ந்தானாதல் = வறுமை வாய்ப்படுதல்
  • செய்யாது = செய்யப்பெறாது.
  • கேடு = பொருள்கேடு
  • கோள்தக்கது = கொள்ளத்தக்கது
  • கூகை = இரவில் இயங்கும் பறவைகளுள் ஒன்று (கோட்டான்)
  • இகல் = பகை
  • பொழுது = தகுந்தகாலமும் சூழலும்
  • பருவத்தோடு = காலத்தோடு
  • ஒட்ட = இசைய
  • தீராமை = நீங்காமல்
  • ஆர்க்கும் = பிணிக்கும்
  • அருவினை = அரிய செயல்
  • உளவோ = உண்டோ (இல்லை)
  • கருவியான் = காலமறிந்து
  • கருதினும் = நினைப்பினும்
  • கைகூடும் = கையகத்ததாகும்.
  • கலங்காது = தவறாது.
  • ஊக்கம் உடையான் = மனவெழுச்சி உடையவன்
  • ஒடுக்கம் = அடங்கியிருத்தல்
  • தகர் = ஆட்டுக்கிடாய்
  • தாக்கற்கு = தாக்குவதற்காக
  • பேரும் = பின்னே கால் வாங்கும்
  • தகைத்து = தன்மைத்து
  • பொள்ளென = உடனடியாக
  • புறம்வேரார் = வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளமாட்டார்
  • உள்வேர்ப்பர் = பகைமையை உள்ளே வைத்திருப்பர்
  • ஒள்ளியவர் = அறிவுடையவர் (அறிவுடைய அரசர்).
  • செறுநர் = பகைவர்
  • சுமக்க = பணிக
  • இறுவரை = (அழிவிற்கான) இறுதி நாள் வந்தபோது
  • கிழக்காம் = விழுவதாம்
  • இயைந்தக்கால் = கூடிவரும்பொழுது
  • செயல் = செய்க
  • கூம்பு பருவத்து = வினைமேற் செல்லாதிருக்கும் காலத்து
  • கொக்கு ஒக்க = கொக்குப் போல் இருக்கவும்
  • சீர்த்த விடத்து = வினைமேற் சென்ற இடத்து
  • குத்தொக்க = அலகு கொண்டு குத்துவது போலத் தாக்குக.
  • வினைவலி = தான் செய்யக்கருதிய செயலின் வலிமை
  • மாற்றான் = பகைவர்
  • துணை = தனக்கும் பகைவர்க்கும் துணையாயினார்
  • தூக்கி = சீர் தூக்கி
  • செயல் = செயற்படுக
  • ஒல்வது =தம்மாலியன்றது
  • அறிவது = அறிய வேண்டிய வலிமை
  • செல்வார்க்கு = பகைமேற்செல்வார்க்கு
  • உடைத்தம் = தம்முடைய
  • இடைக்கண் = நடுவிலேயே
  • ஊக்கம் = மன எழுச்சி
  • ஊக்கி = செயலைத் தொடங்கி
  • முரிந்தார் = அழிந்தவர் (தோற்றவர்)
  • ஆங்கு அமைந்து ஒழுகான் = அயல் வேந்தரோடு பொருந்தி ஒழுகாது
  • அளவறியான் = தன்வலிமையின் அளவை அறியாது
  • தன்னைவியந்தான் = தானே தன்னை உயர்வாகக் கருதிச் செருக்குறுபவன்.
  • பீலி = மயில்தோகை
  • சாகாடு = வண்டி
  • இறும் = முரியும்
  • பெயின் = ஏற்றினால்
  • கொம்பர் = இறுதிப்போலி
  • நுனிக்கொம்பர் = கிளையின்நுனி
  • ஆறு = நெறி
  • ஆற்றின் = கொடுக்கும் நெறியில்
  • அளவு அறிந்து = தமக்குள்ள பொருளின் எல்லையை அறிந்து
  • ஆகு ஆறு = பொருள் வரும் வழி
  • இட்டிது = சிறியது
  • போகு ஆறு = செலவழியும் வழி
  • அகலாக்கடை = பெருகாதாயின்
  • ஆகுபோகு ஆறு = செலவழியும் வழி
  • உளபோல = உள்ளன போல
  • உளவரை = தனக்குள்ள பொருளின் அளவு
  • தூக்காத = ஆராய்ந்து பார்க்காத
  • வல்லை = விரைவில்
  • வளவரை = செல்வத்தின் எல்லை

இலக்கணக்குறிப்பு

  • அடங்காமை = எதிர்மறைத் தொழிற்பெயர்
  • ஆரிருள் = பண்புத்தொகை
  • காக்க = வியங்கோள் வினைமுற்று
  • பொருளா = (பொருளாக என்பதன்) தொகுத்தல்விகாரம்
  • அதனினூஉங்கு = இன்னிசையளபெடை
  • பெறின் = செயின் என்னும் வாய்பாட்டு வினையெச்சம்
  • அடங்கியான் = வினையாலணையும் பெயர்
  • மலையினும் = உயர்வு சிறப்பும்மை
  • எல்லார்க்கும் = முற்றும்மை
  • பணிதல் = தொழிற்பெயர்
  • தகைத்து = குறிப்பு வினைமுற்று
  • நன்றாம் = (நன்றாகும்) தொகுத்தல் விகாரம்
  • செல்வர்க்கே = தேற்றேகாரம்
  • உடைத்து = குறிப்பு வினைமுற்று
  • எழுமை, ஐந்து = ஆகுபெயர்கள்
  • காவாக்கால் = எதிர்மறை வினையெச்சம்
  • பொருட்பயன் = மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
  • ஆனும் = ஆயினும் என்பதன் விகாரம்
  • நன்று – (நன்மை) பண்புப்பெயர்
  • சுட்ட புண், சுட்ட வடு = பெயரெச்சங்கள்.
  • அடங்கல் = தொழிற்பெயர்
  • ஆற்றுவான் = வினையாலணையும் பெயர்
  • வேண்டாக்கடப்பாடு = ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  • உலகு = இடவாகுபெயர்
  • தந்தபொருள் = பெயரெச்சம்
  • பொருட்டு = குறிப்பு வினைமுற்று
  • நல்ல = பலவின்பால் வினையாலணையும் பெயர்
  • பெறல் = தொழிற்பெயர்
  • ஈண்டும் = உம்மை எண்ணுப் பொருள்.
  • அறிவான், வாழ்வான் = வினையாலணையும் பெயர்
  • மற்றையான் = குறிப்பு வினையாலணையும் பெயர்கள்
  • பேரறிவு = பண்புத்தொகை
  • ஊருணி = காரணப்பெயர்
  • பயன்மரம் = இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
  • உள்ளூர் = ஊருள் என்பது முன்பின்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத்தொகை
  • தப்பாமரம் = ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  • பெருந்தகை = பண்புத்தொகை.
  • கடனறிகாட்சி = வினைத்தொகை
  • ஒல்கார் = வினையாலணையும் பெயர்
  • இல்பருவம் = பண்புத்தொகை
  • ஆதல் = தொழிற்பெயர்
  • நீர = பலவின்பாற் பெயர்
  • செயும் = செய்யும் என்பதன் தொகுத்தல் விகாரம்
  • கேடு, கோள் = முதனிலை திரிந்த தொழிற்பெயர்கள்.
  • பகல்வெல்லும் = ஏழாம் வேற்றுமைத் தொகை
  • இகல்வெல்லும் = இரண்டாம் வேற்றுமைத் தொகை
  • ஒழுகல் = தொழிற் பெயர்
  • தீராமை ஆர்க்கும் = எதிர்மறை வினையெச்சம்
  • அருவினை = பண்புத்தொகை
  • உளவோ = ஓகாரம் எதிர்மறை
  • செயின் = வினையெச்சம்
  • கருதுபவர் = வினையாலணையும் பெயர்
  • ஒடுக்கம் = தொழிற் பெயர்
  • பொருதகர் = வினைத்தொகை
  • பேரும் = பெயரும் என்பதன் மரூஉ
  • பொள்ளென = குறிப்புமொழி (விரைவுக் குறிப்பு)
  • ஒள்ளியவர் = வினையாலணையும் பெயர்
  • சுமக்க = வியங்கோள் வினைமுற்று
  • எய்தக்கால் = காலீற்று வினையெச்சம்
  • செயல் = அல்லீற்று உடன்பாட்டு வியங்கோள் வினைமுற்று
  • ஒக்க = வியங்கோள் வினைமுற்று.
  • வினைவலி, துணைவலி = ஆறாம்வேற்றுமைத்தொகைகள்
  • செயல் = வியங்கோள்வினைமுற்று
  • செல்வார் = வினையாலணையும் பெயர்
  • அறியார் = எதிர்மறைவினையாலணையும் பெயர்
  • ஒழுகான், அறியான் = (முற்றுகள் எச்சப் பொருளில் வந்தன) முற்றெச்சம்.
  • பெய்சாகாடு = வினைத்தொகை
  • சாலமிகுத்து = உரிச்சொற்றொடர்
  • மிகுத்து = மிகுந்து என்பதன் பிறவினை.
  • கொம்பர் = ஈற்றுப்போலி
  • நுனிக்கொம்பர் = முன்பின்னாகத் தொக்க ஆறாம்வேற்றுமைத் தொகை.
  • ஈக = வியங்கோள் வினைமுற்று
  • வழங்கும் நெறி = பெயரெச்சத்தொடர்
  • ஆகாறு, போகாறு = வினைத் தொகைகள்
  • அகலாக் கடை = ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  • கேடு = முதனிலை திரிந்த தொழிற்பெயர்.
  • தோன்றாக்கெடும் = செய்யா எனும் வாய்பாட்டு வினையெச்சம்
  • வாழ்க்கை = தொழிற் பெயர்.
  • 11 ஆம் வகுப்பு திருக்குறள்
  • 11 ஆம் வகுப்பு திருக்குறள்
  • 11 ஆம் வகுப்பு திருக்குறள்
  • 11 ஆம் வகுப்பு திருக்குறள்
  • 11 ஆம் வகுப்பு திருக்குறள்
  • 11 ஆம் வகுப்பு திருக்குறள்
  • 11 ஆம் வகுப்பு திருக்குறள்
  • 11 ஆம் வகுப்பு திருக்குறள்
  • 11 ஆம் வகுப்பு திருக்குறள்

 

 

Leave a Reply