12 ஆம் வகுப்பு மாலைக்கால வருணனை

12 ஆம் வகுப்பு மாலைக்கால வருணனை

12 ஆம் வகுப்பு மாலைக்கால வருணனை
12 ஆம் வகுப்பு மாலைக்கால வருணனை

12 ஆம் வகுப்பு மாலைக்கால வருணனை

  • மாலைக்கால வருணனை பாரதியாரின் பாஞ்சாலி சபதத்தில் உள்ளது.
  • மாயச் சூதினுக்கு மனம் இணங்கிய பாண்டவர்கள், அத்தினாபுரிக்குப் பயணம் புறப்படுகிறார்கள்.
  • பயணத்தினிடையே மாலைக்காலத்தில் ஓரிடத்தில் தங்குகிறார்கள்.
  • அப்பொழுது அந்திவானத்தின் அழகுக் காட்சிகளை எல்லாம் அர்ச்சுனன் பாஞ்சாலியிடம் கூறுகிறான்.
  • வானத்தைக் கடலாகவும்
  • மேகக் கூட்டங்களை நீரோடையாகவும் தங்கத் தீவுகளாகவும், பொய்கையாகவும், தோணியாகவும், திமிங்கலங்களாகவும் உருவகித்துக் கூறுகிறார் பாரதியார்.
  • மாலைக்கால வருணனை பாஞ்சாலி சபதத்தின் “அழைப்புச் சருக்கத்தில்” உள்ளது.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

பாஞ்சாலி சபதம் நூல் குறிப்பு

  • வடமொழியில், வியாசர் இயற்றிய மகாபாரதக் கதையில் வரும் பாஞ்சாலி, துரியோதனன் சபையில் செய்த சூளுரையை மையமாகக் கொண்டு, பாரதியார் இக்குறுங்காவியத்தைப் படைத்துள்ளார்.
  • ‘பாஞ்சாலி நம் பாரதத்தாய்
  • துரியோதனக் கூட்டம் நம் நாட்டை அடிமைப்படுத்தியிருந்த வெள்ளையர்
  • பாண்டவர்கள் – அன்றைய பாரத மக்கள் என்று, படிப்பவர் எண்ணுமாறு பாஞ்சாலிசபதம் பாடப்பெற்றுள்ளது.
  • பாஞ்சாலி சபதத்தில் உள்ள சருக்கங்களின் எண்ணிக்கை = ஐந்து.

பாஞ்சாலி சபதத்தில் உள்ள சருக்கங்கள்

  • பாஞ்சாலி சபதத்தில் உள்ள சருக்கங்களின் எண்ணிக்கை = ஐந்து.
    • அழைப்புச் சருக்கம்
    • சூதாட்டச் சருக்கம்
    • அடிமைச் சருக்கம்
    • துகிலுரிதற்சருக்கம்
    • சபதச் சருக்கம்

பாஞ்சாலி சபதத்தில் பாரதியாரின் முன்னுரை

  • பாரதியார் பாஞ்சாலி சபதத்திற்கு எழுதியுள்ள முன்னுரையில், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
    • எளியபதங்கள், எளியநடை, எளிதில் அறிந்து கொள்ளக் கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு, இவற்றினையுடைய காவியமொன்று தற்காலத்திலே செய்து தருவோன்,
    • நமது தாய்மொழிக்குப் புத்துயிர் தருவோனாகின்றான்.
    • ஓரிரண்டு வருஷத்து நூற்பழக்கமுள்ள தமிழ்மக்கள் எல்லோருக்கும் நன்குபொருள் விளங்கும்படி எழுதுவதுடன் காவியத்துக்குள்ள நயங்கள் குறைபடாமலும் நடத்துதல் வேண்டும்.
    • காரியம் மிகப்பெரிது, எனது திறமை சிறிது.
    • ஆசையால் இதனை எழுதி வெளியிடுகின்றேன்.
    • பிறருக்கு ஆதர்சமாக அன்று; வழிகாட்டியாக!”

பாரதியார் ஆசிரியர் குறிப்பு

  • “நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்குழைத்தல் இமைப்பொழுதுஞ் சோரா திருத்தல்” என்று பாடியவர் = மகாகவி பாரதியார்.
  • பாரதியார் 1882 ஆம் ஆண்டு, டிசம்பர்த் திங்கள் 11ஆம் நாள் தூத்துக்குடி மாவட்டத்து எட்டயபுரத்தில் பிறந்தார்.
  • இவர் பெற்றோர் சின்னச்சாமி ஐயர்; இலக்குமி அம்மாள்.
  • பாரதியாரின் இயற்பெயர் சுப்பிரமணியன்.
  • இளமையிலேயே பாப்புனையும் ஆற்றல் பெற்றிருந்தமையால், கலைமகள் என்னும் பொருள் தரும் ‘பாரதி’ என்னும் சிறப்புப் பெயர் பெற்றார்.
  • இளமையிலேய கலைமகள் என்னும் பொருள் தரும்,”பாரதி” என்னும் பட்டதை பெற்றார்.
  • ‘தமிழ் நாட்டில் தமிழ்ப்புலவர் ஒருவன் இல்லையெனும் வசை நீங்க’ வந்து தோன்றியவர் பாரதியார்.
  • அவர், பாட்டுத் திறத்தாலே இந்த வையகத்தைப் பாலித்திடச் செய்தவர்.
  • பண்டிதர்களின் கரடுமுரடான நடையில் தேங்கிக் கிடந்த தமிழைப் பலரும் படித்தறியும் வகையில், எளிய, இனிய பாக்களாக வடித்து உலவவிட்டவர் பாரதியார்.
  • இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட இவர்.
  • இவரின் முப்பெரும் படைப்புகள் = கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு.
  • முப்பெரும் பாடல்களையும், நாட்டுப்பற்றும், மொழிப்பற்றும் சமுதாயச் சீர்த்திருத்த உணர்வும் உணர்வும் ஊட்டுகின்ற நூற்றுக்கணக்கான பாடல்களையும் பாடியதோடு அமையாது ஞானரதம், தராசு முதலான உரைநடை இலக்கியங்களையும் படைத்துத் தமிழன்னைக்கு வளஞ்சேர்ந்தவர் ஆவார்.
  • தமிழ், ஆங்கிலம், சமக்கிருதம், இந்தி, வங்காளம், பிரெஞ்சு, அரபு முதலான பலமொழிகளில் புலமை பெற்றிருந்த இந்த மாக்கவி “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்குங் காணோம்” எனப் பாடித் தமிழ்மொழியின் பெருமையை உலகறியச் செய்தவர். ‘சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே – அதைத்தொழுது படித்திடடி பாப்பா’ எனப் பாப்பாவுக்கு கூறுவதுபோல் பலருக்கும் கூறித் தமிழ்ப்பற்றை வளர்த்த மாபெருங் கவிஞராவார்.

தமிழ்ப் பாவலர் பாரதியார்

  • இவர் ‘தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்’ எனவும் ‘தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்’ எனவும் தமிழ்மொழி பரவிட விழைந்த தமிழ்ப் பாவலர் ஆவார்.

விடுதலைக் கவிஞர் பாரதியார்

  • ஆன்மீக விடுதலை, பெண்விடுதலை, சமுதாய விடுதலை, முதலான விடுதலைகளை உள்ளடக்கிய நாட்டுவிடுதலையை விழைந்த விடுதலைக் கவிஞர் ஆவார்.

சொற்பொருள்

  • பரிதி – சூரியன்
  • வண்ணம் – அழகு
  • முகில் – மேகம்
  • பொய்கை – நீர்நிலை
  • இருட்கடல் – நீலக்கடல்
  • களஞ்சியம் – தொகுப்பு

இலக்கணக்குறிப்பு

  • படர்முகில் – வினைத்தொகை
  • செழும்பொன் – பண்புத்தொகை
  • தங்கத்தீவு – உருவகம்
  • பொற்கரை – உருவகம்
  • சுடரொளி – வினைத்தொகை
  • 12 ஆம் வகுப்பு மாலைக்கால வருணனை
  • 12 ஆம் வகுப்பு மாலைக்கால வருணனை
  • 12 ஆம் வகுப்பு மாலைக்கால வருணனை
  • 12 ஆம் வகுப்பு மாலைக்கால வருணனை

 

 

Leave a Reply