11 ஆம் வகுப்பு கலிங்கத்துப்பரணி

11 ஆம் வகுப்பு கலிங்கத்துப்பரணி

11 ஆம் வகுப்பு கலிங்கத்துப்பரணி
11 ஆம் வகுப்பு கலிங்கத்துப்பரணி

11 ஆம் வகுப்பு கலிங்கத்துப்பரணி

  • பரணி என்பது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
  • போர் முனையில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றி கொண்ட வீரனைப் பாடுவதைப் பரணி என்றனர்.

ஆணை ஆயிரம் அமரிடை வென்ற

மாண வனுக்கு வகுப்பது பரணி

–    இலக்கண விளக்கப் பாட்டியல்

  • பரணி இலக்கியத்தின் இலக்கணம் கூறும் நூல் = இலக்கண விளக்கப் பாட்டியல் நூல்.
  • பரணி என்ற நாள்மீன் காளியையும் யமனையும் தன் தெய்வமாகப் பெற்றது என்றும் அந்நாள்மீனால் வந்த பெயரே நூலுக்கும் பெயராக வந்தது என்றார் உ.வே.சா
  • தோற்றவர் பெயரில் பரணி நூல் வழங்கப்பெறும்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

கலிங்கத்துப்பரணி நூல் குறிப்பு

  • தமிழின் முதல் பரணி நூல் இது.
  • இந்நூல் 509 தாழிசைகள் கொண்டது.
  • இந்நூலை ஒட்டக்கூத்தர், “தென்தமிழ் தெய்வப்பரணி” என்று சிறப்பித்துள்ளார்.
  • இன்றைய ஒரிசா மாநிலம் பண்டு கலிங்கம் என்று வழங்கப்பட்டது.
  • அந்நாட்டின் மீது போர் தொடுக்க முதல் குலோத்துங்கச்சோழன் தன் படைத்தளபதி கருணாகரத் தொண்டைமான் என்பவரி அனுப்பி வெற்றிபெற்றதை இந்நூல் கூறுகிறது.

செயங்கொண்டார் ஆசிரியர் குறிப்பு

  • கலிங்கத்துப்பரணி பாடியவர் செயங்கொண்டார்.
  • இவர் முதல் குலோத்துங்கசோழனின் அவைப்புலவர்.
  • இவரின் காலம் 11ஆம் நூற்றாண்டு அல்லது 12ஆம் நூற்றாண்டின் முற்பகுதி.
  • பலபட்டடைச் சொக்கநாதர் இவரைப் “பரணிக்கோர் செயங்கொண்டார்” எனப் புகழ்ந்துள்ளார்.

சொற்பொருள்

  • வரை = மலை
  • சேர = முற்றும்
  • மாசை = பழிப்பை
  • எற்றி = உண்டாக்கி
  • வன்தூறு = வலிய புதர்கள்
  • குறை = எஞ்சியுள்ள அனைத்து மயிரையும்
  • அரை = இடுப்பு
  • கலிங்கம் = ஆடை
  • கலிங்கர் = கலிங்க வீரர்கள்
  • உரிப்புண்ட = களையப்பட்ட
  • அமணர் = சமணர்
  • முந்நூல் = முப்புரி நூலான பூணூல்
  • சிலை = வில்
  • நாண் = (வில் முனையில் கட்டப்படும்) கயிறு
  • இட்டு = தரித்து
  • கரந்தேம் = மறைந்தோம்
  • அரிதனை = பகையை
  • அநேகர் = பலர்
  • மடி = இறந்த
  • களம் = போர்க்களம்
  • கும்பிட்டு அடி = அடிகளில் வீழ்ந்து வணங்கி
  • பாணர் = ஆடிப்பாடி வாழும் இசை வாணர்கள்
  • இவர்கள் மேல் = இவர்களைத் தவிர
  • எழு கலிங்கம் = ஏழு பிரிவுகளைக் கொண்ட கலிங்க நாடு
  • அன்றி = அல்லாமல்
  • அடைய = முழுமையும்.
  • எறிந்து = அழித்து
  • சயத்தம்பம் = வெற்றித்தூண்
  • நாட்டி = நிறுத்தி
  • கடகரி = மதயானை
  • வயமா = குதிரை
  • அபயன் = முதற்குலோத்துங்க சோழன்
  • அருளினோடும் = அருளாலும்
  • வண்டையர் கோன் = கருணாகரத் தொண்டைமான்

இலக்கணக்குறிப்பு

  • மாசை எற்றி = இரண்டாம் வேற்றுமை விரி
  • வன்தூறு = பண்புத்தொகை
  • வெஞ்சிலை = பண்புத்தொகை
  • போந்து = வினையெச்சம்
  • களம் கண்டோம் = இரண்டாம் வேற்றுமைத் தொகை
  • கும்பிட்டு, எறிந்து, நாட்டி, கொண்டு = வினையெச்சங்கள்
  • கடற்கலிங்கம் = இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை
  • அருளினோடும் = உருபு மயக்கம்
  • தமை = இடைக்குறை
  • பறித்தமயிர் = பெயரெச்சம்.

Leave a Reply