10 ஆம் வகுப்பு நற்றிணை

10 ஆம் வகுப்பு நற்றிணை

10 ஆம் வகுப்பு நற்றிணை
10 ஆம் வகுப்பு நற்றிணை

10 ஆம் வகுப்பு நற்றிணை

  • மிளை என்னும் ஊரில் பிறந்தவராதலால், மிளைகிழான் நல்வேட்டனார் என்னும் பெயர் பெற்றார்.
  • இவர், ஐந்திணைகளைப் பற்றியும் பாடல் இயற்றியுள்ளார்.
  • இவர் பாடியனவாக் நற்றிணையில் நான்கு பாடலும் குறுந்தொகையில் ஒன்றாக ஐந்து பாடல் உள்ளன.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

நற்றிணை நூல் குறிப்பு

  • பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் சங்கநூல்கள் எனப் போற்றப்படுவன.
  • எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக வைத்து எண்ணப்படுவது = நற்றிணை
  • ‘நல்’ என்று அடைமொழி கொடுத்துப் போற்றப்படும் நூல் = நற்றிணை.
  • இஃது அகத்திணை நூலாகும்.
  • நற்றிணை பல்வேறு காலங்களில், புலவர் பலரால் பாடப்பெற்ற பாடல்களைக் கொண்ட தொகுப்பு நூல்.
  • ஓரறிவு உயிர்களையும் விரும்பும் உயரிய பண்பு, விருந்தோம்பல், அறவழியில் பொருளீட்டல் முதலிய தமிழர்தம் உயர் பண்புகளைத் தெள்ளத்தெளிவாக எடுத்தியம்பும் நூலிது.
  • இதில், ஐந்திணைக்குமான பாடல்கள் உள்ளன.
  • இதிலுள்ள பாடல்கள், ஒன்பது அடிச் சிற்றெல்லையும் பன்னிரண்டு அடிப் பேரெல்லையும் கொண்டவை.
  • இப்பாடல்களைத் தொகுப்பித்தவர் பன்னாடு தந்த மாறன் வழுதி.
  • நற்றிணைப் பாடல்கள் = நானூறு.
  • நற்றிணை பாடல்களை பாடினோர் எண்ணிக்கை = இருநூற்றெழுபத்தைவர்.

10 ஆம் வகுப்பு நற்றிணை

சொற்பொருள்

  • அரி – நெற்கதிர்
  • செறு – வயல்
  • யாணர் – புதுவருவாய்
  • வட்டி – பனையோலைப் பெட்டி
  • நெடிய மொழிதல் – அரசரிடம் சிறப்புப் பெறுதல்.

இலக்கணக்குறிப்பு

  • சென்ற வட்டி – பெயரெச்சம்
  • செய்வினை – வினைத்தொகை
  • புன்கண், மென்கண் – பண்புத்தொகை
  • ஊர – விளித்தொடர்

பிரித்தறிதல்

  • அங்கண் = அம் + கண்
  • பற்பல = பல + பல
  • புன்கண் = புன்மை + கண்
  • மென்கண் = மேன்மை + கண்

 

 

Leave a Reply