11 ஆம் வகுப்பு மனோண்மணீயம்

11 ஆம் வகுப்பு மனோண்மணீயம்

11 ஆம் வகுப்பு மனோண்மணீயம்
11 ஆம் வகுப்பு மனோண்மணீயம்

11 ஆம் வகுப்பு மனோண்மணீயம்

  • நாடகத்தமிழ் நூல்களுள் தலையாய் சிறப்பினையுடையதாக விளங்குவது மனோன்மணீயம்.
  • நாடகக் காப்பியங்களால் சிறப்புப் பெற்று விளங்கும் வடமொழிக்கு ஈடாக நடிப்புப் செவ்வியும் இலக்கியச் செவ்வியும் ஒருங்கே அமையப் பெற்றது நாடகம் = மனோன்மணீயம்
  • இந்நாடகம் லிட்டன் பிரவு என்பார் ஆங்கிலத்தில் எழுதிய “இரகசிய வழி” என்ற நூலைத் தழுவி அமைந்தது.
  • எனினும் இது வழிநூல் என்னாது முதல் நூல் எனவே கொள்ளப்பெறும் சீர்மையுடையது.
  • பெருங்காப்பிய நூல்களுக்குரிய இயற்கை வண்ணனை, கற்பனையெழில், தத்துவச் செறிவு, உலகியல் உண்மை முதலிய கருத்துகள் அமைய எழுதப் பெற்றிருப்பினும் செய்யுள் நடையில் மிடுக்குடனும் நாடகத்தன்மைக்கேற்ற உரையாடற் சிறப்புகளுடனும் இந்நூல் தன்னிகரற்று விளங்குகிறது.
  • அங்கங்களையும் காட்சிகளையும் அமைத்து எழுதுவது நாடக நன்னூல் மரபு.
  • இந்நாடகம் ஐந்து அங்கங்களையும் இருபது காட்சிகளையும் கொண்டு விளங்குகிறது.
  • இடையே சிவகாமி சரிதம் என்னும் துணைக் கதை ஒன்றும் இடம் பெற்றுள்ளது.

 

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

பேராசிரியர் பெ.சுந்தரம்பிள்ளை ஆசிரியர் குறிப்பு

  • பேராசிரியர் பெ.சுந்தரம்பிள்ளை, கேரள மாநிலம் ஆலப்புழையில் பிறந்தவர்.
  • பெற்றோர் = பெருமாள் பிள்ளை, மாடத்தி அம்மையார்.
  • இவர் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
  • இவரின் ஞானாசிரியர் = கோடாக நல்லூர் சுந்தர சுவாமிகள்
  • இவர் இயற்றிய நூல்கள் = நூல் தொகை விளக்கம், திருஞானசம்பந்தர் கால ஆராய்ச்சி, திருவிதாங்கூர்ப் பண்டை மன்னர் கால ஆராய்ச்சி.
  • அந்நாளைய சென்னை மாகாண அரசு இவருக்கு ராவ்பகதூர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.
  • இவரது நீராருங்கடலுடுத்த என்ற தமிழ் வாழ்த்துப்பாடலே தமிழக அரசின் தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்கப்பட்டுள்ளது.

மனோண்மணீயம் கதை

  • மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் ஜீவகன்.
  • அமைச்சர் குடிலன் வஞ்சகம் மிக்கவன்.
  • ஜீவகன் மதுரையை விட்டு திருநெல்வேலியில் கோட்டை அமைத்து அங்கு தங்கினான்.
  • சுந்தர முனிவர் கோட்டையில் தனக்கு ஒரு அறை பெற்று அதில் சுரங்க வழியை அமைத்தார்.
  • ஜீவகனின் மகள் மனோன்மணி. இவள் சேர நாட்டு அரசன் புருடோத்தமனை கனவில் கண்டு காதல் கொள்கிறாள்.
  • அமைச்சன் குடிலனின் மகன் பலதேவனை, சேர அரசனிடம் தூது அனுப்பினான் மன்னன்.
  • பலதேவனின் முறையற்ற பேச்சால் சினம் கொண்ட சேர அரசன் பாண்டிய நாடு மீது போர் தொடுத்தான்.

சொற்பொருள்

  • செந்தழல் = கேள்வியில் மூட்டுகிற நெருப்பு
  • வானோர் = தேவர்கள்
  • நாட்டபிமனம் = நாட்டுப்பற்று
  • இந்தனம் = விறகு
  • உகம் = யுகம்
  • திருந்தலீர் = பகைவர்களே
  • சுவாசம் = மூச்சுக்காற்று
  • செயமாது = (விசயலட்சுமி) வெற்றித்திருமகள்
  • இலக்காய் = குறியாய், அடையாளமாய்
  • போர்க்குறிக்காயம் = போரில் ஈடுபட்டதன் அடையாளமாகிய புண்
  • புகழின் காயம் = புகழுடம்பு
  • அனந்தம் = முடிவற்றது
  • இரந்து கோட்டக்கது = விரும்பிக்கையேந்திநின்று பெறத்தக்கது
  • அறைவீர் = உரைப்பீர்
  • புகழின்கண் = புகழின் அடையாளம்
  • இகழுடம்பு = இகழத்தக்க உடம்பு

இலக்கணக்குறிப்பு

  • செந்தழல், வெந்தழல் = பண்புத்தொகைகள்
  • ஆகுக = வியங்கோள் வினைமுற்று
  • ஆகுக ஆகுக = அடுக்குத் தொடர்
  • தீண்டன்மின் = முன்னிலைப் பன்மை ஏவல் வினைமுற்று
  • போர்க்குறி = ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
  • கணங்கணம் = அடுக்குத்தொடர்
  • என்பவோ = ஓகாரம் வினா
  • 11 ஆம் வகுப்பு மனோண்மணீயம்
  • 11 ஆம் வகுப்பு மனோண்மணீயம்
  • 11 ஆம் வகுப்பு மனோண்மணீயம்
  • 11 ஆம் வகுப்பு மனோண்மணீயம்

 

 

 

Leave a Reply