11 ஆம் வகுப்பு முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்

11 ஆம் வகுப்பு முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்

11 ஆம் வகுப்பு முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்
11 ஆம் வகுப்பு முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்

11 ஆம் வகுப்பு முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்

  • கடவுளரையோ அரசரையோ பிறரையோ குழந்தையாகப் பாவித்து அவர் தம் குழந்தைப் பருவத்தைப் பத்துப் பருவங்களாகப் பகுத்துக் கொண்டு பருவத்துக்குப் பாது ஆசிரிய விருத்தம் அமையப் பாடுவது பிள்ளைத்தமிழ் இலக்கியமாகும்.
  • பிள்ளைத்தமிழ் 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

பிள்ளைத்தமிழ் வகைகள்

  • இது ஆண்பால் பிள்ளைத்தமிழ், பெண்பால் பிள்ளைத்தமிழ் என இரு வகைப்படும்.

ஆண் பால் பிள்ளைத்தமிழ் பருவங்கள்

  • ஆண் பால் பிள்ளைத்தமிழ் பருவங்கள் = காப்பு, செங்கீரை, தாள், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர்.

பெண் பால் பிள்ளைத்தமிழ் பருவங்கள்

  • பெண்பால் பிள்ளைத்தமிழ் பருவங்கள் = காப்பு, செங்கீரை, தாள், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, அம்மானை, நீராடல், ஊசல்.

குமரகுருபரர் ஆசிரியர் குறிப்பு

  • முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் பாடியவர் குமரகுருபரர்.
  • தாமிரபரணி நதிக்கரையில் உள்ள திருவைகுன்டத்தில் பிறந்தார்.
  • பெற்றோர் = சன்முகசிகாமணி கவிராயர், சசிவகாமசுந்தரி.
  • பிறந்தது முதல் ஐந்து ஆண்டுகள் பேசாமல் இருந்தார்.
  • திருச்செந்தூர் முருகப்பெருமானின் அருளால் பேசும் திறம் பெற்றார்.

குமரகுருபரர் இயற்றிய நூல்கள்

  • நூல்கள் = கந்தர் கலிவெண்பா, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக் கலம்பகம், நீதிநெறிவிளக்கம், காசிக் கலம்பகம் முதலான பல நூல்கள்.

செங்கீரைப் பருவம் குறிப்பு

  • செங்கீரைப் பருவம் பிள்ளைத்தமிழில் இரண்டாம் பருவமாகும்.
  • பொருள் தெரியாத ஒலியைக் குழந்தை எழுப்பும் பருவத்தைக் குறிப்பது இது.
  • இளங்குழந்தை ங்க ங்க என்று கூறக்கேட்டுத்தாய் உகக்கும் பருவம் இது, இவ்வொலி மழலையைக் காட்டிலும் இளம் பருவத்தை உடையது.
  • (கீர் – சொல்) தொட்டில் பிள்ளை தலையையுயர்த்திக் கையால் ஊன்றி உடம்பை அசைத்தலைச் செங்கீரையாடுதல் என்பர்.

சொற்பொருள்

  • புலராமே = வறண்டு விடாமல், காயாமல்
  • கம்முதல் = குரல் தேய்ந்து மங்குதல்
  • விரல் = பெருவிரல்
  • கம்மாமே = கம்மிக் கொள்ளாமல்
  • சிவவாமே = சிவக்காமல்
  • அஞ்சனம் = கண்மை
  • கலுழ்தல் = அழுதல்
  • கலுழிப்புனல் = மையைக் கரைத்து வரும் கலங்கற் கண்ணீர்
  • தாள் = கால்
  • செங்கீரை குழந்தை பேசத் தொடங்குமுன் செய்கிற ஒலிக்குறிப்புகள்
  • வயித்தியநாதபுரி = புள்ளிருக்குவேளூர் (வைத்தீசுரன்கோவில்)

இலக்கணக்குறிப்பு

  • மெல்லிதழ், மென்குரல் = பண்புத்தொகை
  • நுண்டுளி = பண்புத்தொகை
  • கண்மலர் = உருவகம்
  • புனலருவி, அருள்மொழி = இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகைகள்
  • பொழி திருமுகம் = வினைத்தொகை
  • ஆடுக = வியங்கோள் வினைமுற்று.

Leave a Reply