12 ஆம் வகுப்பு கம்பராமாயணம்

12 ஆம் வகுப்பு கம்பராமாயணம்

12 ஆம் வகுப்பு கம்பராமாயணம்
12 ஆம் வகுப்பு கம்பராமாயணம்

12 ஆம் வகுப்பு கம்பராமாயணம்

  • கம்பர் தாம் இயற்றிய இந்நூலுக்கு இராமாவதாரம் என்றே பெயரிட்டார்.
  • அதுவே கம்பராமாயணம் என்று வழங்கப்படுகிறது.
  • இராம காதைக்கு ஆதிகாவியம் என்றும் அக்காதைக்கு வடமொழியில் இயற்றிய வான்மீகிக்கு ஆதிகவி என்றும் பெயர் உண்டு.
  • வான்மீகி எழுதிய வடமொழிக் காப்பியத்தை தழுவித் தமிழ் மொழியில் காப்பியம் செய்துள்ளார் கம்பர்.
  • கம்பராமாயணம் வழி நூல் எனப்படுகிறது.
  • கம்பரின் இராமாயணத்தைக் கம்ப நாடகம் எனவும் கம்பசித்திரம் எனவும் அழைப்பர்.
  • கம்பரின் யாப்பு வண்ணங்கள் நூல் முழுவதும் மிளிர்கிறது.
  • “வரமிகு கம்பன் சொன்ன வண்ணமும் தொண்ணுற்றாறே” என்று ஒரு கனன்கீடும் உள்ளது.
  • கம்பர் கூறும் யாப்பு வண்ணங்களின் எண்ணிக்கை = 96.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

காப்பிய வளர்ச்சியில் உச்ச நிலை

  • தமிழ் இலக்கியத்தில் தொடங்கிய காப்பிய வளர்ச்சி கம்பர் படைப்பில் உச்ச நிலையை அடைந்தது.
  • கம்பராமாயணம் 6 காண்டங்களை உடையது.
  • அவை பாலகாண்டம், அயோத்தியாகாண்டம், ஆரண்யகாண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தரகாண்டம், யுத்தகாண்டம்.
  • ஏழாவது காண்டமாகிய உத்தர காண்டம் ஒட்டக்க்கூத்தர் எழுதினார்.
  • காண்டம் = பெரும்பிரிவு
  • படலம் = உட்பிரிவு

சுந்தரகாண்டம் குறிப்பு

சொற்பொருள்

  • ஏந்தல் = சிறந்தோன் (இராமன்)
  • கழல் = திருவடி (கழலணிந்தகால்)
  • முளரி = தாமரை
  • தையல் = (திருமகளாகிய) சீதாப்பிரட்டி
  • வையகம் = தரை
  • வையகம் தழீஇ = தரையில் வீழ்ந்து
  • இறைஞ்சி = வணங்கி
  • திண்டிறல் = (பேராற்றல் மிக்கவனாகிய) இராமபிரான்
  • ஓதி = கூந்தல் (கூந்தலையுடையளாகிய சீதை)
  • தெரிய = (செயலின் நோக்கத்தைத் தேர்ந்து) அறிந்து
  • வலியள் = (உடல், மனம் இரண்டின் உறுதியால் பகைவன் ஊரிலும்) உயிருடன் உள்ளாள், உறுதியள்
  • மற்று = மேலும்
  • துறத்தி = கைவிடுக
  • பன்னுவான் = உரைப்பானாயினான்
  • திரை = அலை
  • மன் = தயரதன்
  • மருகி = மருமகள்
  • தனயை = மகள்
  • கேட்டி = கேட்பாயாகுக
  • தடந்தோள் = அகன்றதோள்
  • இரும்பொறை = வலிய பொறுமை (பெருமைக்குரிய பொறுமை)
  • வீங்கு நீர் = பரந்து பெருகிய கடல் (சூழ்ந்த இலங்கை) வெற்பு = மலை (இலங்கைத் தீவின் ஒரு பகுதி)
  • உம்பி = உன்தம்பி (இலக்குவன்)
  • வேலை = கடல்
  • விண்தோய் = வானளாவிய
  • களி நடம் = ஆனந்த நடனம்
  • கனகம் = பொன்
  • சாலை = பர்ணசாலை
  • பொதுவற = தனித்தனியாக
  • அணங்கு அன்னாள் = தெய்வம் போல்வாள்
  • அலங்கு = அசைதல்; ஒளிமிகுந்த
  • இடைபெறுந்தன்மை = தகுந்த காலம் வாய்க்கும் தன்மை
  • கோறல் = கொல்லுதல்
  • அலங்கல் = மாலை
  • ஏயினன் = ஏவினான்
  • உறைப்ப = அழுத்தமாக
  • சார்த்தும் அளவை = மாட்டும் பொழுது
  • உன்னினள் = நினைந்தனள்
  • புகன்ற போழ்தின் = சொன்ன பொழுது
  • திருக்கம் = வஞ்சனை
  • முறிவு = வேறுபாடு
  • மருந்து = அமிழ்தம்
  • இயம்பலள் = (உணர்ச்சிப் பெருக்கால்) பேச்சொன்றும் பேசினாளல்லள்
  • எய்த்தமேனி = இளைத்த உடம்பு
  • வீங்கினள் = பூரித்தாள்
  • ஆழி = மோதிரம்
  • விண்டாள் = வெளிப்படுத்தினாள்
  • உயிர்ப்புவிண்டாள் = பெருமூச்சு விட்டாள்
  • அடுத்த = நிகழ்ந்தவை
  • வருத்தப்பாடு = துன்பம்
  • உயிர்ப்பு = பெருமூச்சு
  • தோகை = மயில் போலும் சாயலாள் (சீதை)
  • இயைபுளி = பொருத்தமுற, முறையாக
  • திருவுளம் தீர்ந்தபின்னை = மனமில்லையாயின்
  • திங்கள் ஒன்று = ஒரு மாதம்
  • மாமணிக்கரசு = சூடாமணி
  • வித்தக = அறிஞனே
  • காண்டி = காணுக

இலக்கணக்குறிப்பு

  • எய்தினன் = முற்று
  • மொய்கழல் = வினைத்தொகை
  • தொழுகிலன் = எதிர்மறைவினைமுற்று
  • கழல் = தானியாகுபெயர்
  • தழீஇ = சொல்லிசையளபெடை
  • திண்டிறல் நோக்கினான் = பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை
  • வண்டுறை ஓதியும் வலியள் = வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை
  • வலியள் = குறிப்பு வினைமுற்று
  • தெண்டிரை = பண்புத் தொகை
  • அலைகடல் = வினைத்தொகை
  • துறத்தி = (முன்னிலை) ஏவல் வினைமுற்று
  • கேட்டி = முன்னிலை ஏவல் வினைமுற்று
  • பெருந்தடந்தோள் = பண்புத்தொகை
  • வீங்குநீர் = வினைத் தொகை
  • தடந்தோள் = உரிச்சொற்றொடர்
  • பெருந்தவம் = பண்புத்தொகை
  • இற்பிறப்பு = ஏழாம் வேற்றுமைத்தொகை
  • களிநடம் = வினைத்தொகை
  • விரிநகர் = வினைத்தொகை
  • உம்பி = முறைப்பெயர்
  • ஐய = விளி
  • உம்பி = உன்தம்பி என்பதன் மருஉ
  • பொலங்குழை = மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
  • கண்ணின் நீர்க்கடல் = உருவகம்
  • கோறல் = தொழிற்பெயர்
  • சொல்லுமின் = ஏவல் வினைமுற்று
  • அறன் = (அறம்) இறுதிப் போலி
  • எலாம் = எல்லாம் என்பதன் இடைக்குறை.
  • ஆருயிர் = பண்புத்தொகை
  • பொன்னடி = உவமத்தொகை
  • வண்ண மோதிரம் = இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
  • பேர் அடையாளம் = உம்மைத்தொகை
  • உணர்த்தினென் = தன்மை ஒருமை வினைமுற்று
  • நிற்பிரிந்த = இரண்டாம் வேற்றுமைத் தொகை
  • மலரடி = உவமத்தொகை
  • மாமணி = உரிச்சொற்றொடர்
  • கைத்தலம் = இருபெயரொட்டுப் பண்புத்தொகை.

Leave a Reply