12 ஆம் வகுப்பு திருக்குறள்

12 ஆம் வகுப்பு திருக்குறள்

12 ஆம் வகுப்பு திருக்குறள்
12 ஆம் வகுப்பு திருக்குறள்

12 ஆம் வகுப்பு திருக்குறள்

  • திருக்குறள் = திரு + குறள்
  • சிறந்த குறள் வெண்பாக்களினால் ஆகிய நூல் ஆதலின் திருக்குறள் எனப் பெயர் பெற்றது.
  • குறள் – இரண்டடி வெண்பா
  • திரு – சிறப்பு அடைமொழி.
  • குறள் என்பது குறட்பாவை உணர்த்தாமல் அப்பாக்களால் ஆகிய நூலை உணர்த்துவதால் ஆகுபெயர்.
  • திருக்குறள் என்பது அடையடுத்த ஆகுபெயர் ஆகும்.
  • இது தமிழில் வழங்கும் பதினெண்கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்று.
  • இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்று பெரும்பிரிவுகளைக் கொண்டது.
  • திருக்குறளில் உள்ள மொத்த இயல்கள் = 9.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

அறத்துப்பால்

  • அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்கள் = 38
  • அறத்துப்பாலில் உள்ள இயல்கள் = 4
  • அறத்துப்பாலில் உள்ள இயல்கள் = பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல்

பொருட்பால்

  • பொருட்பாலில் உள்ள அதிகாரங்கள் = 70
  • பொருட்பாலில் உள்ள இயல்கள் = 3
  • பொருட்பாலில் உள்ள இயல்கள் = அரசியல், அங்கவியல், ஒழிபியல்

காமத்துப்பால்

  • காமத்துப்பாலில் உள்ள அதிகாரங்கள் = 25
  • காமத்துப்பாலில் உள்ள இயல்கள் = 2
  • காமத்துப்பாலில் உள்ள இயல்கள் = களவியல், கற்பியல்.

திருக்குறள் சிறப்புப் பெயர்கள்

  • உலகப் பொதுநூல்
  • அறவிலக்கியம்
  • தமிழர் திருமறை

திருக்குறள் வேறு பெயர்கள்

  • முப்பால்
  • பொய்யாமொழி
  • வாயுறைவாழ்த்து
  • உத்தரவேதம்
  • தெய்வநூல்
  • திருவள்ளுவம்
  • தமிழ்மறை
  • பொதுமறை
  • திருவள்ளுவப்பயன்
  • பொருளுரை
  • முதுமொழி

திருவள்ளுவர் சிறப்புப் பெயர்கள்

  • நாயனார்
  • தேவர்
  • முதற்பாவலர்
  • தெய்வப்புலவர்
  • நான்முகனார்
  • மாதானுபங்கி
  • செந்நாப்போதார்
  • பெருநாவலர்
  • பொய்யில் புலவர்
12 ஆம் வகுப்பு திருக்குறள்
12 ஆம் வகுப்பு திருக்குறள்

திருக்குறள் சிறப்புகள்

  • மனித வாழ்வின் மேன்மைகளை, வாழ்வியல் நெறிகளை மனித நாகரிகம் பிற நாடுகளில் தோன்றும் முன்னரே வகுத்துக் காட்டிய நூல்
  • ஆங்கிலம், இலத்தீன், கிரேக்கம் முதலான உலக மொழிகள் பலவற்றிலும் இந்நூல் மொழிபெயர்க்கப் பெற்றுள்ளது.
  • உலகோர் விரும்பிப் படிக்கும் தமிழ்நூலாக விளங்குகிறது.
  • ஆலும் வேலும், பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி, ‘பழகு தமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில்’ என்னும் பழமொழிகள் இதன் பெருமையை விளக்குவனவாகும்.
    • இவற்றுள் ‘நால்’ என்பது நாலடியாரையும், ‘இரண்டு’ என்பது திருக்குறளையும் குறிக்கும்.

திருக்குறளின் பெருமையை கூறும் தொடர்கள்

  • திருக்குறளின் பெருமையை கூறும் நூல் = திருவள்ளுவமாலை.
  • “என்றும் புலரா தியாணர்நாட் செல்லுகினும் நின்றலர்ந்து தேன்பிலிற்றும் நீர்மையதாய்க் – குன்றாத செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர்போன்ம் மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல்” என்று கூறியவர் = இறையனார்.
  • “என்றும் புலரா தியாணர்நாட் செல்லுகினும் நின்றலர்ந்து தேன்பிலிற்றும் நீர்மையதாய்க் – குன்றாத செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர்போன்ம் மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல்” என்ற அடிகள் இடம் பெற்ற நூல் = திருவள்ளுவமாலை.
  • “மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல்” என்ற அடிகள் இடம்பெற்ற நூல் = திருவள்ளுவமாலை.
  • “மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல்” என்று கூறியவர் = இறையனார்.
  • திருக்குறளின் அழியாத் தன்மையைப் பறைசாற்றுகின்ற நூல் = திருவள்ளுவமாலை.
  • “வள்ளுவன்’ தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என்று கூறியவர் = பாரதியார்.
  • “வள்ளுவனைப் பெற்றதாற் பெற்றதே புகழ் வையகமே” என்று கூறியவர் = பாரதிதாசன்.
  • “தினையளவு போதாச் சிறுபுல் நீர் நீண்ட பனையளவு காட்டும் படித்தால்” என்று திருக்குறளை பாராட்டியவர் = கபிலர்.
  • “வள்ளுவரும் தம் குறள் பாவடியால் வையத்தார் உள்ளுவதெல்லாம் அளந்தார் ஓர்ந்து” என்று திருக்குறளை பாராட்டியவர் = பரணர்.
  • “உள்ளுதோ றுள்ளுதோ றுள்ளம் உருக்குமே வள்ளுவர் வாய் மொழி மாண்பு” என்று திருக்குறளை கூறியவர் = மாங்குடி மருதனார்.
  • “பொய்ப்பால பொய்யேயாய்ப் போயினபொய் யல்லாத மெய்ப்பால மெய்யாய் விளங்கினவே – முப்பாலின் தெய்வத் திருவள் ளுவர்செய் திருக்குறளால் வையத்து வாழ்வார் மனத்து” என்று கூறியவர் = தேனிக்குடி கீரனார்.
  • “பொய்ப்பால பொய்யேயாய்ப் போயினபொய் யல்லாத மெய்ப்பால மெய்யாய் விளங்கினவே” என்று கூறியவர் = தேனிக்குடி கீரனார்.
  • “முப்பாலின் தெய்வத் திருவள் ளுவர்செய் திருக்குறளால் வையத்து வாழ்வார் மனத்து” என்று கூறியவர் = தேனிக்குடி கீரனார்.
  • “முப்பாலின் தெய்வத் திருவள் ளுவர்செய் திருக்குறளால்” என்று கூறியவர் = தேனிக்குடி கீரனார்.
  • “புத்தகம் நூறு புரட்டிக் களைப்புற்றுச் சித்தம் கலங்கித் திகைப்பதேன் – வித்தகன் தெய்வப் புலவர் திருவள் ளுவர்சொன்ன பொய்யில் மொழிஇருக்கும் போது” என்று கூறியவர் = கவிமணி
  • “வித்தகன் தெய்வப் புலவர் திருவள் ளுவர்சொன்ன பொய்யில் மொழிஇருக்கும் போது” என்று பாடியவர் = கவிமணி
  • “செந்தமிழ்ச் செல்வத் திருக்குறளை நெஞ்சமே சிந்தனை செய்வாய் தினம்” என்று கூறியவர் = கவிமணி.
  • “திருக்குறளை நெஞ்சமே சிந்தனை செய்வாய் தினம்” என்று கூறியவர் = கவிமணி
  • “நீதித்திருக்குறளை நெஞ்சாரத் தம் வாழ்வில் ஓதித்தொழுது எழுக ஓர்ந்து” என்று கூறியவர் = கவிமணி.

திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மர்

  • திருக்குறளுக்குத் தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிதி, பரிமேலழகர், திருமலையர், மல்லர், கவிப்பெருமாள், காளிங்கர் ஆகிய பதின்மர் முன்னரே உரை எழுதியுள்ளனர்.
  • அவற்றுள் பரிமேலழகர் உரையே சிறந்தது எனக் கற்றோர் புகழ்வர்.

திருவள்ளுவர் ஆசிரியர் குறிப்பு

  • திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரின் உண்மையான வரலாறு நமக்குக் கிடைத்திலது.
  • ஒவ்வொரு சமயத்தவரும் திருவள்ளுவரைத் தத்தம் சமயத்தைச் சேர்ந்தவரென்று புகழ்ந்து கூறுமளவிற்குத், திருக்குறள் இடமளிக்கின்றது.
  • இறைக் கோட்பாட்டின் பொதுவான நெறியைத் திருக்குறள் காட்டுகிறது.
  • இவருடைய காலம் கி.மு.31 எனக் கொண்டு திருவள்ளுவராண்டு கணக்கிடப்பட்டு வருகின்றது. (திருவள்ளுவர் காலம் கி.பி.இரண்டாம் நூற்றாண்டு எனக் கூறுவார் பலர் உளர்)
  • திருவள்ளுவரை நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப்புலவர், நான்முகனார், மாதானுபங்கி, செந்நாப்போதார், பெருநாவலர், பொய்யில் புலவர் எனப் பல பெயர்களால் பாராட்டுகின்றனர்.

சொற்பொருள்

  • வையகம் = மண்ணுலகம்
  • வானகம் = விண்ணுலகம்
  • ஆற்றலரிது = ஒத்தலரிது; ஈடாகா
  • ஞாலம் = நிலவுலகம்
  • நன்றி = நன்மை; உதவி
  • மாணப்பெரிது = மிகப்பெரிது
  • தூக்கார் = ஆராய்தலிலராய், (பயன் நோக்கார்)
  • நயன் = உதவியாகிய ஈரமுடைமை
  • தூக்கின் = ஆராயின்.
  • தினை = மிகச் சிறிய அளவு (தினை = சிறிய அளவினதாய தானிய வகை)
  • பனை = ஒரு பேரளவு
  • வரைத்து = அளவையுடையது
  • சால்பு = நிறைபண்பு; தகுதி.
  • மாசற்றார் = குற்றமற்றவர்
  • கேண்மை = நட்பு.
  • உள்ளுவர் = நினைப்பர்
  • விழுமம் = துன்பம்
  • துடைத்தவர் = நீக்கினவர்.
  • நன்று = நன்மை (அறன்) ஆகும்
  • நன்றன்று = அறமாகாது.
  • இன்னா = தீங்குகள்
  • உள்ள = நினைக்க
  • கெடும் = இல்லையாகும் (கெடும்)
  • நன்றி = அறம்
  • உய்வு = நீங்கும் வாயில் (பிராயச்சித்தம்)
  • கொன்ற = சிதைத்த.
  • அகழ்வாரை = தோண்டுபவரை
  • தாங்கும் = பொறுத்துக் கொள்ளும்
  • இகழ்வார் = அவமதிப்பார்
  • பொறுத்தல் = மன்னித்தல்
  • தலை = சிறந்த அறமாகும்
  • பொறுத்தல் = மன்னிக்க
  • இறப்பினை = பிறர் செய்த அவமதிப்பை
  • இன்மை = வறுமை
  • ஒரால் = நீக்குதல்
  • வன்மை = வலிமை
  • மடவார் = அறிவிலிகள்
  • பொறை = பொறுத்தல்
  • விருந்து = புதியராய் வந்தவர்.
  • நிறை = சால்பு
  • நீங்காமை = விலகாமை; (நெடுங்காலம் நிற்றலை)
  • ஒறுத்தாரை = தண்டித்தவரை
  • ஒன்றாக = ஒரு பொருளாக
  • பொதிந்து வைப்பர் = இடைவிடாது மனத்துட் கொள்வர்.
  • பொன்றும் = அழியும்
  • பொன்றுந்துணையும் = அழியுமளவும்
  • திறனல்ல = செய்யத்தகாத, கொடியவற்றை
  • நோநொந்து = துன்பத்திற்கு வருந்தி
  • மிகுதியான் = மனச் செருக்கால்
  • மிக்கவை = தீங்குகள்
  • தகுதியான் = பொறுமையான்
  • விடல் – விடுக
  • துறந்தாரின் = பற்றற்றவர் போல
  • இறந்தார் = நெறியைக் கடந்தவரது
  • இன்னா = தீய
  • நோற்கிற்பவர் = பொறுப்பவர்
  • உண்ணாது = உணவைத் தவிர்த்து
  • நோற்பார் = (உற்ற நோயைப்) பொறுப்பவர்
  • அற்றம் = அழிவு; இறுதி
  • செறுவார்க்கு = பகைவர்க்கு
  • அரண் = கோட்டை
  • ஒரீஇ = நீக்கி
  • உய்ப்பது = செலுத்துவது; விடா – விடாமல்
  • மெய்ப்பொருள் = உண்மைப்பொருள்
  • காண்பது = (காணுதல்) காணவல்லது அறிவு
  • எண்பொருளவாக = எளியபொருள் ஆமாறு
  • நுண்பொருள் = நுட்பமான பொருள்
  • செலச்சொல்லி = மனங்கொள்ளச் சொல்லி
  • தழீஇயது = நட்பாக்குவது
  • ஒட்பம் = அறிவுடைமை
  • கூம்பல் = குவிதல், முகம் வாடுதல்
  • மலர்தல் = விரிதல், முகம் மலர்தல்
  • உறைவது = ஒழுகுவது
  • ஆவது = பின்னர் வரக்கூடியது
  • அறிகல்லாதவர் = அறியமாட்டாதார்.
  • பேதைமை = அறிவுஇன்மை
  • அறிவார் = அறிவுடையவர்
  • அஞ்சல் = எண்ணிப் பார்த்து அதனைச் செய்யாது விடுதல். செய்யப் பயப்படுதல் (ஒன்றனைச் செய்யப் பயப்படுதலை அஞ்சல் என்பர்).
  • எதிரது = எதிர்காலத்தில் நேரக்கூடியது
  • அதிர = நடுங்குபடி
  • நோய் = துன்பம்
  • என்னுடையரேனும் = எல்லாம் உடையராயினும்
  • இலர் = இல்லாதவர்
  • திட்பம் = வலிமை
  • மற்றவை = ஒழிந்தவை
  • பிற = திண்மையென்று சொல்லப்படா
  • வினைத்திட்பம் = செயல் செய்வதற்கான மனவலிமை
  • ஊறு = பழுதுபடும் வினை
  • ஒரால் = செய்யாமை
  • ஒல்காமை = தளராமை
  • ஆறு = நெறி
  • கோள் = துணிபு
  • கடை = இறுதியில்
  • கொட்க = புலப்படும்படி
  • எற்றா = நீங்காத
  • விழுமம் = துன்பம்
  • இடைக்கொட்கின் = இடையே வெளிப்படுமாயின்
  • செயல் = செய்தல்
  • வீறு = சிறப்பு
  • எய்தி = பெற்று
  • மாண்டார் = மாட்சிமைப்பட்ட அமைச்சர்
  • உள்ளப்படும் = நன்கு மதிக்கப்படும்
  • ஊறு எய்தி = நல்ல விளைவை எய்து வித்தலால்
  • எண்ணிய = எண்ணப்பட்டவை
  • எய்துப = அடைவர்
  • திண்ணியர் = வலியர்
  • உருவுகண்டு = வடிவின் சிறுமை நோக்கி
  • எள்ளாமை = இகழாதிருத்தல்
  • கலங்காது = மனந்தெளிந்து
  • கண்டவினை = துணிந்த வினையிடத்து
  • துளங்காது = சோம்பலின்றி
  • தூக்கம் = நீட்டித்தல்
  • கழிந்து = ஒழிந்து
  • செயல் = செய்க
  • உறவரின் = மிகுந்து வருமாயினும்
  • துணிவாற்றி = துணிவை நெறியாகக் கொண்டு
  • செய்க = செய்யவேண்டும்
  • பயக்கும் = உண்டாக்கும்
  • வேண்டாரை = கொள்ளாத அமைச்சரை
  • வேண்டாது = விரும்பாது
  • உலகு வேண்டாது = உயர்ந்தோர் நன்கு மதியார்

இலக்கணக்குறிப்பு

  • செய்யாமல் = எதிர்மறை வினையெச்சம்
  • செய்த = இறந்தகாலப் பெயரெச்சம்
  • வையகமும் வானகமும் = எண்ணும்மை
  • வையகம் – பூமிக்குக் காரணப்பெயர்
  • அரிது = ஒன்றன்பால் குறிப்பு வினைமுற்று
  • காலத்தினால் = உருபு மயக்கம்
  • பெரிது = ஒன்றன்பால் குறிப்பு வினைமுற்று
  • ஞாலத்தின் = ‘இன்’ ஐந்தாம் வேற்றுமை உருபு உறழ் பொருளில் வந்துள்ளது
  • தூக்கார் = முற்றெச்சம்
  • தூக்கின் = எதிர்கால வினையெச்சம்
  • செயின் = வினையெச்சம்
  • தெரிவார் = வினையாலணையும் பெயர்
  • பனைத்துணையா = ‘ஆ’ ஆக என்பதன் தொகுத்தல்
  • சால்பு = பண்புப்பெயர்
  • வரைத்து = ஒன்றன்பால் குறிப்பு வினைமுற்று
  • உதவி வரைத்து = குறிப்புப் பெயர்
  • சால்பின் வரைத்து = அஃறிணை ஒன்றன்பால் குறிப்பு வினைமுற்று
  • மறவற்க, துறவற்க = எதிர்மறை வியங்கோள் வினை முற்றுகள்
  • எழுபிறப்பும் = முற்றும்மை
  • துடைத்தவர் = வினையாலணையும் பெயர்
  • நன்றி மறப்பது = இரண்டாம் வேற்றுமைத் தொகை; மறப்பது = தொழிற்பெயர் (மறத்தல் என்னும் பொருள் தருவதால்)
  • உள்ள = வினையெச்சம்
  • கெடும் = செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று
  • செயினும் = ‘உம்’ இழிவு சிறப்பு
  • கொன்றார் = வினையாலணையும் பெயர்
  • கொன்ற = பெயரெச்சம்
  • அகழ்வார், இகழ்வார் = வினையாலணையும் பெயர்கள்
  • பொறுத்தல் = தொழிற்பெயர்
  • மறத்தல் = தொழிற்பெயர்
  • பொறுத்தல் = அல் ஈற்று வியங்கோள் வினைமுற்று
  • நன்று = குறிப்பு வினைமுற்று
  • விருந்து = பண்பாகுபெயர்
  • ஒரால், பொறை = தொழிற்பெயர்கள்
  • நீங்காமை = எதிர்மறைத் தொழிற்பெயர்
  • போற்றி = வினையெச்சம்
  • ஒழுகப்படும் = செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று
  • ஒறுத்தார் = வினையாலணையும் பெயர்
  • பொதிந்து = வினையெச்சம்
  • வையார் = எதிர்மறைப் பலர்பால் வினைமுற்று
  • பொறுத்தார் = வினையாலணையும் பெயர்
  • பொன்றும் = பெயரெச்சம்
  • தற்பிறர் = ஏழாம் வேற்றுமைத் தொகை
  • செய்யினும் = சிறப்பு உம்மை
  • நொந்து = வினையெச்சம்
  • அறன் – ஈற்றுப்போலி
  • செய்தாரை = வினையாலணையும் பெயர்
  • விடல் = அல் ஈற்று வியங்கோள் வினைமுற்று
  • துறந்தார் = வினையாலணையும் பெயர்
  • இன்னாச் சொல் = ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  • நோற்கிற்பவர் = வினையாலணையும் பெயர்
  • உண்ணாது = எதிர்மறை வினையெச்சம்
  • அற்றம் = தொழிற்பெயர்
  • அழிக்கலாகா = ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  • ஒரீஇ = சொல்லிசை அளபெடை
  • உய்ப்பது = வினையாலணையும் பெயர்
  • சென்ற இடத்தால் = உருபு மயக்கம் (ஏழன் உருபு நிற்க வேண்டிய இடத்தில் மூன்றன் உருபு நின்றது)
  • யார் யார் = அடுக்குத்தொடர்
  • எண்பொருள், நுண்பொருள் = பண்புத்தொகைகள்
  • செல = வினையெச்சம்
  • தழீஇ = சொல்லிசையளபெடை
  • மலர்தல், கூம்பல் = தொழிற்பெயர்கள்
  • மலர்தலும் கூம்பலும் = எண்ணும்மை
  • எவ்வதுறைவது = வினையாலணையும் பெயர்
  • அவ்வதுறைவது = தொழிற்பெயர்
  • அறிகல்லாதவர் = வினையாலணையும் பெயர்
  • அஞ்சுவது = வினையாலணையும் பெயர்
  • அஞ்சாமை = எதிர்மறைத் தொழிற்பெயர்
  • அஞ்சல் = தொழிற்பெயர்
  • அறிவார்தொழில் = ஆறாம் வேற்றுமைத்தொகை
  • அதிர = வினையெச்சம்
  • உடையார், இலர் = குறிப்பு வினைமுற்றுகள்
  • வினைத்திட்பம் = நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை; ஏழாம் வேற்றுமைத் தொகை
  • மனத்திட்பம் = ஆறாம்வேற்றுமைத் தொகை
  • பிற = பலவின்பால் வினைமுற்று
  • ஆய்ந்தவர் = வினையாலணையும் பெயர்
  • ஒரால், ஒல்காமை = தொழிற்பெயர்கள்
  • கோள் = முதனிலை திரிந்த தொழிற்பெயர்
  • எற்றா = ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  • கொட்க = செயவென்னெச்சம் (கொட்கு – பகுதி)
  • சொல்லுதல் = தொழிற்பெயர்
  • யார்க்கும் = முற்றும்மை
  • எளிய = குறிப்பு வினைமுற்று
  • செயல் = தொழிற்பெயர்
  • சொல்லிய = பெயரெச்சம்
  • எய்தி = வினையெச்சம்
  • மாண்டார் = வினையாலணையும் பெயர்
  • உள்ளப்படும் = செய்யும் எனும் வாய்பாட்டு வினைமுற்று
  • எண்ணிய = வினையாலணையும் பெயர்
  • எய்துப = பலர்பால் வினைமுற்று
  • எண்ணியாங்கு = எண்ணியவாங்கு என்பதன் தொகுத்தல் விகாரம்
  • கண்டு = வினையெச்சம்
  • எள்ளாமை = தொழிற்பெயர்
  • உடைத்து = குறிப்பு வினைமுற்று
  • பெருந்தேர் = பண்புத்தொகை
  • கலங்காது, துளங்காது, கடிந்து = வினையெச்சங்கள்
  • தூக்கம் = தொழிற் பெயர
  • செய்க = வியங்கோள் வினைமுற்று
  • வேண்டாரை = வினையாலணையும் பெயர்
  • உலகு = இடவாகுபெயர்

Leave a Reply