12 ஆம் வகுப்பு தேம்பாவணி

12 ஆம் வகுப்பு தேம்பாவணி

12 ஆம் வகுப்பு தேம்பாவணி
12 ஆம் வகுப்பு தேம்பாவணி

12 ஆம் வகுப்பு தேம்பாவணி

  • தேம்பாவணி நூலின் ஆசிரியர் = வீரமாமுனிவர்.
  • தேம்பாவணியில் உள்ள காண்டங்களின் எண்ணிக்கை = மூன்று.
  • தேம்பாவணியில் உள்ள படலங்களின் எண்ணிக்கை = முப்பத்தாறு.
  • தேம்பாவணியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை = 3615.

தேம்பாவணி பெயர்க்காரணம்

  • தேம்பா + அணி = தேம்பாவணி. வாடாத மாலை எனப் பொருள்.
  • தேன் + பா + அணி = தேம்பாவணி. தேன் போன்ற பாக்களை அணியாக உடைய நூல் எனப் பொருள் கொள்வர்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

தேம்பாவணி நூலின் பாட்டுடைத்தலைவன்

  • தேம்பாவணி நூலின் பாட்டுடைத்தலைவன் = இயேசு பெருமானின் வளர்ப்புத் தந்தை சூசை மாமுனிவர்.
  • கத்தோலிக திருச்சபையின் கொள்கைகளும் அறிவுரைகளும் கதை வடிவில் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

கிறித்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம்

  • “கிறித்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம்” என்று அழைக்கப்படும் நூல் = தேம்பாவணி.

வீரமாமுனிவர் ஆசிரியர் குறிப்பு

  • வீரமாமுனிவரின் இயற்பெயர் = கொன்ஸ்டான் ஜோசப்பெஸ்கி.
  • இத்தாலி நாட்டை சேர்ந்தவர் வீரமாமுனிவர்.
  • கொன்ஸ்டான் என்னும் இத்தாலி மொழி சொல்லுக்கு அஞ்சாமை எனப் பொருள்.
  • இவர் தம் பெயரை “தைரியநாதசாமி” என மாற்றிக்கொண்டார்.
  • தமிழ்ச் சான்றோர் இவரை “வீரமாமுனிவர்” எனப் அழைத்தனர்.
  • வீரமாமுனிவர் தமிழகம் வந்த ஆண்டு = 1710.
  • 1710ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு வந்த இப்பெரியார் 37 ஆண்டுகள் சமயப் பணியும் தமிழ்ப்பணியும் புரிந்து 1747ஆம் ஆண்டில் அம்பலக்காடு என்னும் இடத்தில இயற்கை எய்தினார்.
  • வீரமாமுனிவர் இயற்கை எய்திய இடம் = அம்பலக்காடு.

வீரமாமுனிவரின் தமிழ்ப்பணி

  • சிற்றிலக்கியங்கள், உரைநடை, அகராதி, மொழிபெயர்ப்பு, இலக்கணம், பெருங்காப்பியம் என்று தமிழ் இலக்கிய வரலாற்றில் மிகப்பெரும் பணியை செய்துள்ளார்.

வீரமாமுனிவரின் நூல்கள்

  • வீரமாமுனிவரின் படைப்புகள் = திருக்காவலூர் கலம்பகம், கித்தேரியம்மாள் அம்மானை, வேதியர் ஒழுக்கம், பரமார்ர்த்த குரு கதை, செந்தமிழ் இலக்கணம், கொடுந்தமிழ் இலக்கணம், தொன்னூல் விளக்கம், சதுரகராதி போன்ற பல நூல்களை இயற்றியுள்ளார்.
  • திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால் இரண்டையும் இலத்தீன் மொழியில் மொழி பெயர்த்துள்ளார்.

வளன் செனித்த படலம்

  • காப்பியத் தலைவனான வளன் என்னும் சூசை மாமுனிவர் தாவீது மன்னனின் அரச மரபில் தோன்றிய வரலாற்றை கூறுவதே வளன் செனித்த படலம் ஆகும்.
  • யோசேப்பு என்றும் சூசை என்றும் ஒலிபெயர்க்கப்பட்ட ஜோசப் என்னும் பெயரை வீரமாமுனிவர் வளன் என்று தமிழ்ப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
  • வளங்களை வளரச் செய்பவன் என்னும் பொருளுடைய எபிரேய மொழியில் சூசை என்னும் பெயர் வழங்கி வருகிறது.
  • அதன் நேரிய மொழி பெயர்பே தமிழில் வளன் ஆகும்.

கதை சுருக்கம்

  • யூதேயா நாட்டு மன்னன் சவுல்.
  • பிலித்தையர் என்பார் திருமறையை பழித்தும் கடுவுளை இகழ்ந்தும் வந்தனர்.
  • அரக்கன் கோலியாத் இச்ரேயால் மக்களை இகழ்ந்து, அவர்களுள் ஒருவனை போருக்கு அழைத்தான்.
  • தாவீதன் என்னும் சிறுவன் அவனிடம் போர் புரிந்து அவனை கொன்றான்.

சொற்பொருள்

  • வேலியால் = வேலியாக அமைந்த மதிலினால் (சூழ்ந்த)
  • கதுவிடா = (பகைவர்கள்) கைப்பற்றமுடியாத
  • மாலி = சூரியன்
  • கதிர் வகுத்த = ஒளிவீசிய
  • நாப்பண் = நடுவில்
  • ஆலி = மழை நீர்
  • கரிந்து = கருகி
  • உருக்கொடு = உருவங்கொண்டு
  • வேய்ந்த = கருமையை அணியாகப் போர்த்திக் கொண்ட மேகம்போல் கரிய மேனியைஉடையவன் என்க
  • புடை = இடையின் ஒருபக்கம்
  • நெருங்கி = இறுகக்கட்டி
  • மாண்ட = சிறந்த
  • வியன்வட்டம் = அகன்ற கேடயம்
  • பொறுத்து = சுமந்துகொண்டு
  • அளித்த = ஒளிமிகுந்த
  • கீண்டு = கிழித்து
  • அளாவு = நிறைந்த
  • கிளர்ப்ப = நிறைய
  • எதிர்ந்தான் = முன்னின்றான்
  • கூர்த்த = ஆற்றல்மிக்க
  • நான் அவன் = நானும் அவனும்
  • தோர்த்தபாங்கினர் = தோல்வியுற்றவர்
  • தொழும்பர் = அடிமைகள்
  • ஆர்த்த = அழைத்த
  • ஓகையால் = களிப்பினால்
  • இகழ்வு அறைந்து = இகழ்ச்சியாயப் பேசி
  • பேயதோ = பேயோ
  • உரிய தொன்றிலா உரு = எதனோடும் ஒப்பிட்டுக் கூறமுடியாத உருவம்
  • வெருவி = அஞ்சி
  • கண்டுளி = கண்டபோது
  • கதத்த = சினமிக்க
  • நடுக்குறி = நடுக்கமுற்று
  • கல்நெடுங்குவடு = மலைச்சிகரம்
  • செருக்கு = தான் என்னும் அகங்காரம்; அகந்தை
  • கடுத்து = சினந்து
  • தாங்குவார் = தன்னைக் காப்பவர்
  • நிருபன் = அரசன்
  • அயரும்= சோர்வுறும்
  • இரிந்தபின் = கழிந்தபின்
  • துன்ன= நெருங்க
  • கிளர்திறநெஞ்சு = இயல்பாகவே கிளர்ச்சி மிக்க நெஞ்சம்
  • விளி = சாவு
  • எரியை ஈட்டல் ஆம் என = நெருப்பை ஒரு சேரக் கொட்டியது போல
  • கைவயம் = தோள்வலிமை
  • மெய்வயம் = உடல்வலிமை
  • புகைந்த = சினந்த
  • விரி = விரிந்த
  • ஒளி அளாவு = ஒளி பொருந்திய
  • திரிய = சுமந்து திரிய
  • ஆய்முற = பயன்படுத்தும் முறை
  • ஐஞ்சிலை = ஐந்து கற்கள்
  • கால்ஒலி = காற்றின் ஓசை
  • ஓதை = ஓசை
  • உயிர்ப்பிட = பெருமூச்சுவிட
  • மருகி = சுழன்று
  • வெல் = வெல்லத்தக்க
  • வைவேல் = கூரியவேல்
  • மிடல் = வலிமை
  • எல்வை = தக்கசமயம்
  • வல்கை = வலிமை மிக்க கரங்கள்
  • ஒல்செய்வேன் = விரைந்து செயற்படுவேன்
  • ஒல்லை = விரைவாக
  • செல் = மேகம்
  • சிலைநுதல் = கல்போன்ற நெற்றி
  • எல்லை = கதிரொளி
  • கடையுகம் = உலக முடிவுநாள்
  • உருமு = இடி
  • மருங்கு = இடுப்பு
  • சிரம் = தலை
  • அசனி = இடி
  • கூச = நாணுற
  • நாமவேல் = அச்சந்தரும்வேல்

இலக்கணக்குறிப்பு

  • கதுவிடா = ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  • அகல்முகில் = வினைத்தொகை
  • கருமுகில், வெஞ்சுடர் = பண்புத்தொகைகள்
  • கூடினர் = வினையாலணையும்பெயர்
  • நான்அவன் = உம்மைத் தொகை
  • அறைந்ததறைந்து = அடுக்குத்தொடர்
  • கதத்த = குறிப்புப்பெயரச்சம்
  • கேட்டனர் = வினையாலணையும் பெயர்
  • தொடர்ந்தனன் நகைப்பான் = முற்றெச்சம்
  • அளிக்குவென் = தன்மை ஒருமை வினைமுற்று
  • அஞ்சினர் = வினையாலணையும் பெயர்
  • கேட்ட வாசகம் = பெயரெச்சம்
  • கைவயம், மெய்வயம் = ஆறாம் வேற்றுமைத் தொகைகள்
  • அரிய ஆண்மை = குறிப்புப்பெயரெச்சம்
  • இரிந்த பாலன் = பெயரெச்சம்
  • கருமுகில், பேரிடி = பண்புத்தொகைகள்
  • மதம்பொழி கரி = வினைத்தொகை
  • வைவேல் = உரிச்சொற்றொடர்
  • காண்கிலர் = எதிர்மறை வினைமுற்று
  • உணர்மின் = ஏவல் வினைமுற்று
  • பொழிமறை = வினைத்தொகை
  • நாமவேல் = உரிச்சொற்றொடர்

 

 

 

 

 

Leave a Reply