12 ஆம் வகுப்பு நபிகள் நாயகம்

12 ஆம் வகுப்பு நபிகள் நாயகம்

12 ஆம் வகுப்பு நபிகள் நாயகம்
12 ஆம் வகுப்பு நபிகள் நாயகம்

12 ஆம் வகுப்பு நபிகள் நாயகம்

  • இறைவனின் பதமலர்களை வழுத்துவார் எல்லா நலங்களும் அருளப் பெறுவார் என்று வாழ்த்தும் இப்பாடல் சீறாப்புராணத்தினின்றும் தேர்வு செய்யப்பட்டுள்ளது

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

உமறுப்புலவர் ஆசிரியர் குறிப்பு

  • சீறாப்புராணத்தைத் தமிழ் மரபுக் கேற்பப் பெருங்காப்பியமாகச் செய்தளித்தவர் உமறுப்புலவர் ஆவார்.
  • இவர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த நாகலாபுரம் என்னும் ஊரினர்.
  • இவர் தந்தையார் செய்குமுகமது அலியார் என்னும் சேகு முதலியார் ஆவர்.
  • எட்டயபுரம் மன்னரின் அவைப் புலவராக விளங்கிய கடிகை முத்துப் புலவரின் மாணவராகவும் அவர்மறைவிற்குப்பின் எட்டயபுர அவைப்புலவராகவும் விளங்கியவர்.
  • இவர் காலம் கி.பி. பதினேழாம் நூற்றாண்டு.
  • சீறாப்புராணம் வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளுக்கிணங்கி எழுதப் பெற்றது.
  • நூல் முற்று முன்பே சீதக்காதி மறைந்தமையால் வள்ளல் அபுல் காசிம் என்பார் புரந்தளிக்கச் சீறாப்புராணம் நிறைவு செய்யப்பட்டது.
  • எனினும் அண்ணலார் வரலாறு முழுவதும் சீறாவில் நிறைவு செய்யப்படவில்லை என்பதும் பனுஅகுமது மரைக்காயர் என்பார் எழுதி முடித்தார் என்பதும் ‘அது சின்னச் சீறா’ என்று வழங்கப்படுகிறது என்பதும் குறிக்கத்தக்கன.
  • உமறுப்புலவர் முதுமொழிமாலை, சீதக்காதி நொண்டி நாடகம் முதலிய நூல்களையும் எழுதியுள்ளார்.

திருக்கடைக்காப்பு என்றால் என்ன

  • பாடலின் இறுதியில் மங்கலங்கூறி நிறைவு செய்வதனை “திருக்கடைக்காப்பு” என்பர்.
  • திருக்கடைக்காப்பு என்பதனை “பலச்ருதி” என்றும் கூறுவர்.

சொற்பொருள்

  • பொறி = ஒளிப்பிழம்பு
  • வடிவார் = வடிவினையுடையார்
  • நவியார் = நபிகள் நாயகம்

இலக்கணக்குறிப்பு

  • மெய்ப்பொருள் = இருபெயரொட்டு பண்புத்தொகை
  • சுவர்க்கபதி = இருபெயரொட்டு பண்புத்தொகை

 

Leave a Reply