சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் பொங்கல் வழிபாடுநெசவு

பொங்கல் வழிபாடு நெசவு

“நீயன்றி மண்ணுண்டோ, விண்ணுண்டோ,
ஒளியுண்டோ, நிலவுமுண்டோ,
நீருண்டோ, என்னிடம் வாழ்த்துப் பொருளுமுண்டோ?
கதிரவா கனிந்து வருவாய்! கரும்பு மனமும் இனிபாம் உயிரும்
நின்னடி படைத்தது விட்டோம்
கதிரவா! ஏற்று மகிழ்வாய்
உயர்ந்தவா, உயிரின் முதலே!
– ந.பிச்சமூர்த்தி

சொற்பொருள்:

  • திரு – செல்வம்
  • கனகம் – பொன்
  • கோ – அரசன்
  • நிவேதனம் – படையல்அமுது
  • புரவி – குதிரை
  • கடுகி – விரைந்து

ஆசிரியர் குறிப்பு:

  • இயற்பெயர்: ந. வேங்கட மகாலிங்கம்
  • புனைபெயர்: ந. பிச்சமூர்த்தி
  • ஊர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்
  • தொழில்: 1924 – 1938 வரை வழக்கறிஞர், 1938 – 1954 வரை கோவில் நிருவாக அலுவலர்.
  • எழுத்துப்பணி: கதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஓரங்க நாடகங்கள்.
  • காலம்: 15.08.1900 – 04.12.1976

நூல் குறிப்பு:

  • ந. பிச்சமூர்த்தியின் கவிதை நூல்கள் இருபதாம் நூற்றாண்டின் தற்கால இலக்கியத் துறைக்குப் புதிய சிறப்புகளைச் சேர்த்திருக்கின்றன.
  • பாரதிக்குப் பின் கவிதை மரபில் திருப்பம் விளைவித்தவை இவரது படைப்புகள்.
  • “ந. பிச்சமூர்த்தி கவிதைகள்” என்னும் நூலில் 83 கவிதைகள் உள்ளன.

Leave a Reply