பொங்கல் வழிபாடு நெசவு
“நீயன்றி மண்ணுண்டோ, விண்ணுண்டோ, ஒளியுண்டோ, நிலவுமுண்டோ, நீருண்டோ, என்னிடம் வாழ்த்துப் பொருளுமுண்டோ? கதிரவா கனிந்து வருவாய்! கரும்பு மனமும் இனிபாம் உயிரும் நின்னடி படைத்தது விட்டோம் கதிரவா! ஏற்று மகிழ்வாய் உயர்ந்தவா, உயிரின் முதலே! – ந.பிச்சமூர்த்தி |
சொற்பொருள்:
- திரு – செல்வம்
- கனகம் – பொன்
- கோ – அரசன்
- நிவேதனம் – படையல்அமுது
- புரவி – குதிரை
- கடுகி – விரைந்து
ஆசிரியர் குறிப்பு:
- இயற்பெயர்: ந. வேங்கட மகாலிங்கம்
- புனைபெயர்: ந. பிச்சமூர்த்தி
- ஊர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்
- தொழில்: 1924 – 1938 வரை வழக்கறிஞர், 1938 – 1954 வரை கோவில் நிருவாக அலுவலர்.
- எழுத்துப்பணி: கதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஓரங்க நாடகங்கள்.
- காலம்: 15.08.1900 – 04.12.1976
நூல் குறிப்பு:
- ந. பிச்சமூர்த்தியின் கவிதை நூல்கள் இருபதாம் நூற்றாண்டின் தற்கால இலக்கியத் துறைக்குப் புதிய சிறப்புகளைச் சேர்த்திருக்கின்றன.
- பாரதிக்குப் பின் கவிதை மரபில் திருப்பம் விளைவித்தவை இவரது படைப்புகள்.
- “ந. பிச்சமூர்த்தி கவிதைகள்” என்னும் நூலில் 83 கவிதைகள் உள்ளன.