சிற்றிலக்கியங்கள்

சிற்றிலக்கியங்கள்

சிற்றிலக்கியங்கள்

சிற்றிலக்கியங்கள்

  • சிற்றிலக்கியம் அளவில் (பாடல் எண்ணிக்கை அல்லது அடிகளின் எண்ணிக்கை) சுருங்கியதாக அமைவது.

சிற்றிலக்கிய இலக்கணம்

  • சிற்றிலக்கியம் அளவில் (பாடல் எண்ணிக்கை அல்லது அடிகளின் எண்ணிக்கை) சுருங்கியதாக அமைவது.
  • அகப்பொருள், அல்லது புறப்பொருளில் ஏதேனும் ஒரு துறையைப் பற்றியதாக அமையும். (கோவை போன்ற சில சிற்றிலக்கியங்கள் பல துறைகளைக் கொண்டு அமைவதும் உண்டு.)
  • பாடப்பெறும் கடவுள் அல்லது மன்னன் அல்லது வள்ளல் ஆகியோருடைய வாழ்வின் ஒரு சிறு கூறு மட்டுமே விளக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக: உலா இலக்கியம் தலைவன் உலாவரும் காட்சியை மட்டுமே சிறப்பித்துப் பாடப்படுவது.
  • அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கு உறுதிப் பொருள்களுள் ஏதேனும் ஒன்றைத் தருவதாக அமைவது சிற்றிலக்கியம்.

சிற்றிலக்கியங்கள்

  • நாயக்கர் காலமே “சிற்றிலக்கிய காலம்”
  • சிற்றிலக்கியதிற்கு பிரபந்தம் என்ற பெயரும் உண்டு.
  • பிரபந்தம் என்ற வடமொழி சொல்லுக்கு “நன்கு கட்டப்பட்டது” என்று பொருள்.
  • பிரபந்தம் என்ற சொல்லை முதலில் தமிழில் கொண்டுவந்தவர் = நாதமுனிகள்
  • அணைத்து சிற்றிலக்கியங்களும் தொல்காப்பியரின் “விருந்து” என்னும் வகையுள் அடக்குவர்.
  • சிற்றிலக்கியங்களில் இலக்கணத்தைக் கூறும் நூல்கள் = பட்டியல் நூல்கள்
  • சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தை தெளிவாக கூறும் நூல் = பன்னிரு பாட்டியல்
  • சிற்றிலக்கிய வகை = 96
  • சிற்றிலக்கியம் 96 வகை என முதலில் கூறிய நூல் = பிரபந்த மரபியல்

பிள்ளைக் கவிமுதல் புராணம் ஈறாகத்

தொண்ணூற் றாறுஎன்னும் தொகையதுஆம்

  • பிள்ளைத் தமிழ் என்ற இலக்கிய வகை முதலாகப் புராணம் ஈறாகத் தொண்ணூற்றாறு வகைப்பட்டது பிரபந்தம் என்பது இதன் பொருள் ஆகும்.
  • 96 வகை சிற்றிலக்கியங்களின் பெயரை முதலில் கூறிய நூல் = வீரமாமுனிவரின் சதுரகராதி

சிற்றிலக்கியங்கள்

  • சிவந்தெழுந்த பல்லவன் உலா என்ற நூலில், தொண்ணூற்றாறு கோலப் பிரபந்தங்கள் கொண்ட பிரான் (கோலம் = அழகு; பிரான் = தலைவன்) என்ற தொடர் இடம் பெறுகின்றது.
  • பாட்டியல் நூல்களுள் காலத்தால் முற்பட்டது = பன்னிரு பாட்டியல்
  • வெண்பாப் பாட்டியலின் வேறு பெயர் = வச்சணந்தி மாலை
  • நவநீதப் பாட்டியலின் வேறு பெயர் = கலித்துறைப் பாட்டியல்
  • வரையறுத்தப் பாட்டியலின் வேறு பெயர் = சம்பந்த பாட்டியல்
  • மங்கலப் பொருத்தத்தை மட்டும் வரையறுத்துக் கூறும் நூல் = வரையறுத்தப் பாட்டியல்
  • சிற்றிலக்கிய வகைகளைக் கூறாத பாட்டியல் நூல் = வரையறுத்தப் பாட்டியல்
  • முழுமையாகச் செய்யுள் இலக்கணங்களையும் பாட்டியல் கருத்துகளையும் கூறும் நூல் = சிதம்பர பாட்டியல்
  • சிற்றிலக்கிய வேந்தர் = குமரகுருபரர்

சிற்றிலக்கிய வகைகள்

 

சிற்றிலக்கியங்கள்

  1. அகப்பொருட்கோவை
  2. அங்கமாலை
  3. அட்டமங்கலம்
  4. அரசன்விருத்தம்
  5. அலங்காரபஞ்சகம்
  6. அனுராகமாலை
  7. ஆற்றுப்படை
  8. இணைமணி மாலை
  9. இயன்மொழி வாழ்த்து
  10. இரட்டைமணிமாலை
  11. இருபா இருபது
  12. உலா
  13. பவனிக்காதல்
  14. உலாமடல்
  15. உழத்திப்பாட்டு
  16. உழிஞைமாலை
  17. உற்பவமாலை
  18. ஊசல்
  19. ஊர் நேரிசை
  20. ஊர்வெண்பா
  21. ஊரின்னிசை
  22. எண்செய்யுள்
  23. ஐந்திணைச் செய்யுள்,
  24. ஒருபா ஒருபது
  25. ஒலியந்தாதி
  26. கடைநிலை
  27. கண்படைநிலை
  28. கலம்பகம்
  29. காஞ்சிமாலை
  30. காப்புமாலை
  31. குழமகன்
  32. குறத்திப்பாட்டு
  33. கேசாதிபாதம்
  34. கைக்கிளை
  35. கையறுநிலை
  36. சதகம்
  37. சாதகம்
  38. சிறுகாப்பியம்
  39. சின்னப்பூ
  40. செருக்களவஞ்சி
  41. செவியறிவுறூஉ
  42. தசாங்கத்தயல்
  43. தசாங்கப்பத்து
  44. தண்டகமாலை
  45. தாண்டகம்
  46. தாரகைமாலை
  47. தானைமாலை
  48. எழுகூற்றிருக்கை
  49. தும்பைமாலை
  50. துயிலெடை நிலை
  51. தூது
  52. தொகைநிலைச்செய்யுள்
  53. நயனப்பத்து
  54. நவமணிமாலை
  55. நாமமாலை
  56. நாழிகைவெண்பா
  57. நான்மணிமாலை
  58. நானாற்பது
  59. நூற்றந்தாதி
  60. நொச்சிமாலை
  61. பதிகம்
  62. பதிற்றந்தாதி
  63. பரணி
  64. பல்சந்தமாலை
  65. பன்மணிமாலை
  66. பாதாதிகேசம்
  67. பிள்ளைக்கவி
  68. புகழ்ச்சி மாலை
  69. புறநிலை
  70. புறநிலைவாழ்த்து
  71. பெயர் நேரிசை
  72. பெயரின்னிசை
  73. பெருங்காப்பியம்
  74. பெருமகிழ்ச்சிமாலை
  75. பெருமங்கலம்
  76. போர்க்கெழுவஞ்சி
  77. மங்கலவள்ளை
  78. மணிமாலை
  79. முதுகாஞ்சி
  80. மும்மணிக்கோவை
  81. மும்மணிமாலை
  82. முலைப்பத்து
  83. மெய்க்கீர்த்திமாலை
  84. வசந்தமாலை
  85. வரலாற்று வஞ்சி
  86. வருக்கக் கோவை
  87. வருக்கமாலை
  88. வளமடல்
  89. வாகைமாலை
  90. வாதோரணமஞ்சரி
  91. வாயுறைவாழ்த்து
  92. விருத்தவிலக்கணம்
  93. விளக்குநிலை
  94. வீரவெட்சிமாலை
  95. வெட்சிக்கரந்தைமஞ்சரி
  96. வேனில் மாலை

 

 

 

 

Leave a Reply