தேம்பாவணி

தேம்பாவணி

தேம்பாவணி

வீரமாமுனிவர் ஆசிரியர் குறிப்பு

  • பெயர் – வீரமாமுனிவர்
  • இயற்பெயர் – கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி
  • பெற்றோர் – கொண்டல் போபெஸ்கி, எலிசபெத்
  • பிறந்த ஊர் – இத்தாலி நாட்டில் காஸ்திக்கிளியோன்
  • அறிந்த மொழிகள் – இத்தாலியம், இலத்தின், கிரேக்கம், எபிரேயம், தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம்
  • தமிழ்க் கற்பித்தவர் – மதுரைச் சுப்ரதீபக் கவிராயர்
  • சிறப்பு – முப்பதாம் வயதில் தமிழகம் வந்து தமிழ் பயின்று காப்பியம் படைத்தமை.
  • இயற்றிய நூல்கள் – ஞானஉபதேசம், பரமார்த்த குரு கதை, சதுரகராதி, திருக்காவலூர்க் கலம்பகம், தொன்னூல் விளக்கம்
  • காலம் – 1680-1747

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

இஸ்மத் சன்னியாசி எனப்படும் வீரமாமுனிவர்

தேம்பாவணி

  • வீரமாமுனிவர் திருச்சியை ஆண்ட சந்தாசாகிப் என்னும் மன்னரைச் சந்தித்து உரையாடுவதற்காக இரண்டே மாதங்களில் உருது மொழியைக் கற்றுக்கொண்டார்.
  • இவருடைய எளிமையையும், துறவையும் கண்டு வியந்த சந்தாசாகிப் இஸ்மத் சன்னியாசி என்னும் பட்டத்தை வீரமாமுனிவருக்கு அளித்தார்.
  • வீரமாமுனிவருக்கு “இஸ்மத் சன்னியாசி” என்ற பட்டதை வழங்கியவர் = திருச்சியை ஆண்ட சந்தாசாகிப் என்னும் மன்னர்.
  • “இஸ்மத் சன்னியாசி” என்பது பாரசீக சொல்.
  • இந்தப் பாரசீகச் சொல்லுக்குத் “தூய துறவி” என்று பொருள்.

தேம்பாவணி நூல் குறிப்பு

  • தேம்பாவணி = தேம்பா + அணி.
  • தேம்பாவணி = தேன் + பா + அணி (தேன் போன்ற இனிய பாடல்களாலான மாலை)
  • இந்நூலின் தலைவர் இயேசு பெருமானின் வளர்ப்பு தந்தை சூசையப்பர்.
  • இநூலை “கிறித்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம்” என்று சிறப்பிப்பர்.
  • இந்நூலின் 3 காண்டங்களும், 36 படலங்களும், 3615 பாடல்களும் உள்ளன

 

 

 

Leave a Reply