பொது தமிழ் பகுதி ஆ நாட்டுபுறப்பட்டு

நாட்டுப்புறப்பாடல்கள்

  • தமிழ் நாட்டுப்புறப் பாடலின் தந்தை = வானமாமலை
  • நாட்டுப்புறப் பாடலுக்கு “நாட்டார் வழக்காற்றியல்” என்ற வேறு பெயரும் உண்டு
  • நாட்டுப்புற பாடல்கள் நிலைத்த அமைப்பு உடையன இல்லை
  • நிலைத்த அமைப்புடைய நாட்டுப்புறப் பாடல் வகை பிசி
  • விடுகதையை தொல்காப்பியர் பிசி என்று கூறுகிறார்
  • தொல்காப்பியர் கூறும் பண்ணத்தி என்பது நாட்டுப்புறப் பாடல்களைக் குறிக்கும் என்கிறார் பேராசிரயர்
  • தொல்காப்பியர் கூறும் புலன் என்ற வனப்பு நாட்டுப்புறப் பாடலைக் குறிக்கும் என்கிறார் அழகப்பன்
  • வள்ளைப்பாட்டு என்பது உலக்கைப் பாட்டு
  • வள்ளைப் பாட்டைத் திருப்பொற்சுண்ணம் என்கிறார் மாணிக்கவாசகர்
  • தோழியர் இருவர் விளையாட்டாகப் பாடுவது திருச்சாழல்
  • தாலாட்டுப் பாடல் நீலாம்பரி ராகத்தில் பாடப்படும்
  • ஒப்பாரிப் பாடலின் வேறு பெயர்கள் = பிலாக்கணம், கையறுநிலை, இரங்கற்பா
  • காதல் சுவை மிகுந்த பாடல் தெம்மாங்கு(தேன்+பாங்கு)
  • பழமொழிப் பதிகம் பாடியவர் திருநாவுக்கரசர்
  • ஏறு தழுவுதல் பற்றி கூறும் ஒரே சங்க நூல்  = கலித்தொகை
  • முதல் நாட்டுப்புறப் பாடல் தொகுப்பு = காற்றிலே மிதந்த கவிதை(மு.அருணாசலம்)
  • முதல் நாட்டுப்புறக் கதைப்பாட்டு = பவளக்கொடி மாலை(கருணானந்த சாமி)

 

Leave a Reply