11TH ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி

Table of Contents

11TH ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி

11TH ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி

  • குப்தர்களின் வீழ்ச்சிக்கு பிறகு தோன்றிய பிரதேச அரசுகள் = சௌராஷ்டிராவில் மைத்ரேயர்கள், அயோத்தியில் மௌகரியர்கள், தக்காணத்தில் வாகடர்கள்.
  • தானேஸ்வரத்தில் புதிய அரசை உருவாக்கியவர்கள் = புஷ்யபூதிகள்.
  • புஷ்யபூதி வம்சத்தின் சிறந்த ஆட்சியாளர் = ஹர்ஷர்.
  • ஹர்ஷர் ஆட்சி செய்த ஆண்டு = பொ.ஆ.606 முதல் பொ.ஆ. 647 வரை.

ஹர்ஷர் ஆட்சிக்கான சான்றுகள்

  • பாணர் எழுதிய நூல் = ஹர்ஷ சரிதம்.
  • சீனப் பயணி யுவான் சுவாங் எழுதிய நூல் = “சியூகி”.
  • மதுபன் செப்புப் பட்டயக் குறிப்புகள்
  • சோன்பட்டு செப்பு முத்திரைக் குறிப்புகள்
  • பன்ஸ்கெரா செப்புப் பட்டயக் குறிப்புகள்
  • நாளந்தா களிமண் முத்திரை குறிப்புகள்
  • ஐஹோல் கல்வெட்டு

முதல் வாழ்க்கை வரலாற்று நூல்

  • ஹர்ஷசரிதம் நூலின் ஆசரியர் = பாணர்.
  • “ஒரு அரசரின் முதல் வாழ்க்கை வரலாற்று நூல்” (the first formal biography of a king) என்று கூறப்படும் நூல் = பாணரின் ஹர்ஷசரிதம்.

புஷ்யபூதிகள்

  • வர்த்தன வம்சத்தை நிறுவியவர் = புஷ்யபூதி.
  • வர்த்தன வம்ச ஆட்சியாளர்களின் தலைநகரம் = தானேஸ்வரம்.
  • புஷ்யபூதி யாரிடம் படைத்தளபதியாக பணிபுரிந்தார் = குப்தர்களிடம்.
  • புஷ்யபூதிக்கு அடுத்து ஆட்சிக்கு வந்தவர் = பிரபாகர வர்த்தனர்.
  • பிராபகர வர்த்தரனரின் பிள்ளைகள் = ராஜ்ய வர்த்தனர், ஹர்ஷ வர்த்தனர், மகள் ராஜ்யஸ்ரீ.
  • பிராபகர வர்த்தரனரின் மகன் ராஜ்யஸ்ரீ யாருக்கு திருமணம் செய்து கொடுக்கப்பட்டார் = கன்னோசியை ஆண்ட மௌகாரி வம்ச அரசன் கிரகவர்மன்.
  • பிராபகர வர்த்தனரின் மறைவிற்கு பிறகு ஆட்சிக்கு வந்தவர் = ராஜ்ய வர்த்தனர்.
  • ராஜ்ய வர்த்தனரை கொன்றவன் = வங்காளத்தை ஆண்ட கௌட அரசன் சசாங்கன்.
11TH ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி
11TH ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி

ஹர்ஷர்

  • ராஜ்ய வர்த்தனரின் மறைவிற்கு பிறகு ஹர்ஷர் ஆட்சிக்கு வந்தார்.
  • ஹர்ஷர் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற ஆண்டு = பொ.ஆ 606.
  • ஹர்ஷர் தனது தலைநகரை தானேஸ்வரத்தில் இருந்து எங்கு மாற்றினார் = கன்னோசி.
  • ஹர்ஷர் யாருடைய அறிவுரையின் படி கன்னோசியின் அரசராக பதவி ஏற்றுக் கொண்டார் = அவலோகிதேஷ்வர போதிசத்வர்.
  • “சிலாதித்யா” என்ற பட்டப்பெயரை ஏற்றுக் கொண்ட அரசர் = ஹர்ஷர்.
  • “ராஜபுத்திரர்” என்று அழைக்கப்பட்ட அரசர் = ஹர்ஷர்.
  • ஹர்ஷரின் சகோதரி = ராஜ்யஸ்ரீ.
  • ஹர்ஷர் தனது சகோதரிக்காக யாரை கொன்றார் = மாளவ அரசர் தேவகுப்தர்.
  • ஹர்ஷர் பௌத்த மதத்திற்கு மாற்றியவர் = அவரின் சகோதரி ராஜ்யஸ்ரீ.

ஹர்ஷரின் படையெடுப்புகள்

  • வங்காளத்தை ஆண்ட கௌட அரசன் சாசாங்கனுக்கு எதிராக ஹர்ஷர் போரினை தொடுத்தார்.
  • காமரூபம் என்பது = இன்றைய அசாம் பகுதி.
  • ஹர்ஷரின் மகள் யாருக்கு திருமணம் செய்து கொடுக்கப்பட்டார்= வல்லபியை ஆண்ட மைத்ரேய அரசன் துருவபட்டர்.
  • ஹர்ஷர் ஆட்சி செய்த மொத்த ஆண்டுகள் = நாற்பத்தி ஒன்று.

சாளுக்கிய அரசன் இரண்டாம் புலிகேசி

  • ஹர்ஷரின் தக்காணப் படையெடுப்பை வெற்றிகரமாக தடுத்தவர் = சாளுக்கிய அரசன் இரண்டாம் புலிகேசி.
  • ஹர்ஷரை தோற்கடித்தவர் = சாளுக்கிய அரசன் இரண்டாம் புலிகேசி.
  • ஹர்ஷரை வெற்றிகொண்டதற்க்காக புலிகேசி சூட்டிக்கொண்ட பட்டப்பெயர் = பரமேஸ்வரர்.
11TH ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி
11TH ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி

ஹர்ஷரின் சீன உறவு

  • ஹர்ஷரின் அவைக்கு தூதுக் குழுவை அனுப்பிய சீனப் பேரரசர் = டாங் பேரரசர் “டாய் சுங்”.
  • ஹர்ஷரின் அவைக்கு சீன தூதுக்குழு வருகை தந்த ஆண்டு = பொ.ஆ. 643 மற்றும் பொ.ஆ. 647.

ஹர்ஷரின் முக்கிய நிர்வாக திகாரிகள்

  1. அவந்தி = அயலுறவு மற்றும் போர் விவகாரங்களுக்கான அமைச்சர்.
  2. சிம்மானந்தா = படைத் தளபதி
  3. குந்தலா = குதிரைப்படைத் தலைவர்
  4. ஸ்கந்தகுப்தர் = யானைப் படைத் தலைவர்.
  5. திர்கத்வஜர் = அரச தூதவர்கள்
  6. பானு = ஆவணப் பதிவாளர்கள்
  7. மஹாபிரதிஹரர் = அரண்மனைக் காவலர்களின் தலைவர்.
  8. சர்வகதர் = உளவுத்துறை அதிகாரி.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

TNPSC WINNERS

ஹர்ஷர் ஆட்சியில் வருவாய் நிர்வாகம்

  • ஹர்ஷர் ஆட்சியில் வசூலிக்கப்பட்ட வரிகள் = பாகா, ஹிரண்யா, பலி.
  • பாகா என்றால் என்ன = விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு பொருளாக செலுத்தப்பட்ட நிலவரி.
  • ஹிரண்யா என்றால் என்ன = விவசாயிகளாலும் வணிகர்களாலும் பணமாக செலுத்தப்பட்ட வரி.
  • ஹர்ஷர் ஆட்சியில் அரசுக்கு சொந்தமான நிலம் எத்தனை பாகங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன = நான்கு.

ஹர்ஷர் ஆட்சியில் நீதி நிர்வாகம்

  • மீமாம்சகர்கள் என்போர் = ஹர்ஷர் ஆட்சிக்காலத்தில் குற்றவியல் சட்டங்களை விசாரித்து நீதி வழங்கியவர்கள்.
  • குப்தர்கள் ஆட்சியைக் காட்டிலும் சட்டங்களும் தண்டனைகளும் கடுமையாக இருந்தன.
11TH ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி
11TH ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி

யுவான் சுவாங்

  • “பயணிகளின் இளவரசர்” என்று அழைக்கப்பட்டவர் = சீனப்பயணி யுவான் சுவாங்.
  • சீனப்பயணி யுவான் சுவாங் எத்தனை ஆண்டுகள் இந்தியாவில் இருந்தார் = பதிமூன்று ஆண்டுகள்.
  • யுவான் சுவாங் எழுதிய நூல் = சி-யூ-கி.
  • யாருடைய ஆட்சிக் காலத்தின் பொழுது யுவான் சுவாங் இந்தியாவிற்கு வருகை தந்தார் = ஹர்ஷர்.
  • யுவான் சுவாங் தனது எந்த வயதில் துறவு பூண்டார் = இருபதாவது வயதில்.
  • இந்தியாவில் இருந்து புத்தரின் நினைவாக யுவான் சுவாங் சீனாவிற்கு எடுத்துச் சென்றது = புத்தரின் நினைவுச் சின்னங்களாக 150 பொருட்கள், தங்கம் வெள்ளி மற்றும் சந்தனத்தால் செய்யப்பட புத்தரின் உருவச் சிலைகள் மற்றும் 657 தொகுதிகள் கொண்ட அறிய கையெழுத்து பிரதிகள்.
  • ஹர்ஷரின் படை எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தன என யுவான் சுவாங் பதிவு செய்துள்ளார் = நான்கு.
  • யுவான் சுவாங் வருகையின் பொழுது நாளந்தா பல்கலைக்கழகத்தின் தலைவராக இருந்தவர் = சிலாபத்ரர்.

படை நிர்வாகம்

  • ஹர்ஷரின் படையில் இருந்த சாதாரண படை வீரர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் = சாடர், பாடர்.
  • “பிரகதிஸ்வரர்” என்போர் யார் = ஹர்ஷர் படையின் குதிரைப்படை அதிகாரிகள்.
  • ஹர்ஷரின் படையில் இருந்த காலாட்படை வீரர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் = பாலதிக்ரிதர், மகாபாலதிக்ரிதர்.

ஹர்ஷரின் மதக் கொள்கை

  • ஹர்ஷர் எந்த ஆண்டு வரை சிவபக்தராக இருந்தார் = பொ.ஆ 631.
  • ஹர்ஷர் புத்த மதத்தை தழுவ காரணமாக இருந்தவர் = ஹர்ஷரின் சகோதரி ராஜ்யஸ்ரீ, யுவான் சுவாங்.
  • ஹர்ஷர் பின்பற்றிய புத்த மதம் = மகாயானா புத்த மதம்.
  • ஹர்ஷர் எத்தனை பௌத்த மதக் கூட்டங்களை நடத்தினார் = இரண்டு.
  • ஹர்ஷர் எங்கு பௌத்த மதக் கூட்டங்களை நடத்தினார் = கன்னோசி, பிரயாகை.
  • கன்னோசி பௌத்த மதக் கூட்டத்தில் எத்தனை அரசர்கள் கலந்துக் கொண்டனர் = காமரூப அரசர் பாஸ்கர வர்மன் உட்பட 20 அரசர்கள்.
  • கன்னோசி பௌத்த மதக் கூட்டத்தில் எத்தனை அடி உயர புத்தரின் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது = மூன்றடி.
  • பிரயாகையில் “மகாமோட்ச பரிஷத்” எனப்படும் பௌத்த மதக் கூட்டத்தை நடத்தியவர் = ஹர்ஷர்.

பெண்களின் நிலை

  • பெண்கள் முகத்திரை அணியும் வழக்கம் வழக்கில் இருந்தன.
  • உடன்கட்டை ஏறும் (சதி) பழக்கம் நடைமுறையில் இருந்தன.
  • ஹர்ஷரின் தந்தை பிரபாகர வர்த்தனர் இறப்பை தொடர்ந்து ஹர்ஷரின் தாய் யசோமதிதேவி உடன்கட்டை ஏறி உயிரை மாய்த்துக் கொண்டார்.

ஹர்ஷர் காலத்தில் கலை இலக்கியம்

  • பாணர் எழுதிய நூல்கள் = ஹர்ஷ சரிதம், காதம்பரி.
  • ஹர்ஷரின் அரசவைக் கவிஞர் = பாணர்.
  • ஹர்ஷர் எழுதிய நூல்கள் = பிரியதர்சிகா, ரத்னாவளி, நாகானந்தா.
11TH ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி
11TH ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி

வங்காளத்தில் பாலர்கள்

  • பழங்கால வங்காளத்தை ஆண்ட முக்கியமான கௌட அரசன் = சசாங்கன்.
  • பால வம்சத்தை தோற்றுவித்தவர் = கோபாலர்.
  • பாலர்களின் தலைநகரம் = பாடலிப்புத்திரம்.
  • பாலர்கள் பின்பற்றிய சமயம் = மகாயான புத்த சமயம்.
  • கோபாலருக்கு பிறகு ஆட்சிக்கு வந்தவர் = அவரின் மகன் தர்மபாலர்.

பால வம்ச ஆட்சியாளர்கள்

  • தர்மபாலர் பெற்ற பட்டங்கள் = பரமேஸ்வரர், பரமபட்டாரகா, மகாராஜாதிராஜா.
  • விக்கிரமசீல பௌத்த மடாலயத்தை நிறுவியவர் = தர்மபாலர்.
  • விக்கிரமசீல பௌத்த மடாலயம் நிறுவப்பட்ட இடம் = பீகாரின் பாகல்பூர் மாவட்டம்.
  • சோமபுரி பௌத்த விகாரத்தை கட்டியவர் = தர்மபாலர்.
  • சோமபுரி பௌத்த விகாரம் அமைந்துள்ள இடம் = தற்போதைய வங்கதேசம்.
  • தர்மபாலர் ஆதரித்த பௌத்த அறிஞர் = ஹரிஷ்பத்ரர்.
  • தர்மபாலரின் மகன் = தேவபாலர்.
  • ராஸ்டிரக்கூட அரசர் அமோகவர்ஷனை வென்ற பால அரசன் = தேவபாலர்.
  • சுவர்ணதீபம் என அழைக்கப்பட்ட நாடு = சுமத்ரா.
  • அரியணையை துறந்து துறவறம் மேற்கொண்ட பால அரசன் = விக்ரமபாலர்.
  • சோழ அரசன் ராஜேந்திர சோழனின் வடஇந்தியப் படையெடுப்பை கங்கையை கடக்க முடியாதபடி தடுத்த பால அரசன் = முதலாம் மகிபாலர்.
  • பால வம்சத்தின் கடைசி சிறந்த அரசன் = ராமபாலர்.
  • 53 ஆண்டுகள் ஆட்சி செய்த பால அரசன் = ராமபாலர்.
  • பால வம்சத்தின் கடைசி அரசன் = மதனபாலர்.
  • பால வம்சத்தின் கடைசி அரசனான மதபாலரை வீழ்த்தி ஆட்சியை பிடித்தவர் = சேனர் வம்சத்தை நிறுவிய விஜயசேனர்.

பாலர்கள் ஆட்சியில் மதம்

  • பாலர்கள் பின்பற்றிய சமயம் = மகாயான பௌத்த சமயம்.
  • பால வம்சத்தின் சிறந்த அரசர்களில் ஒருவரான தர்மபாலரின் ஆன்மீக குறு = பௌத்த அறிஞர் ஹரிபத்ரர்.

பாலர்கள் ஆட்சியில் கலை

  • பாலர்கள் ஆட்சியில் சிறந்து விளங்கிய ஓவியர்கள் = திமான், அவரின் மகன் விடபாலர்.
  • சாரநாத், நாளந்தா, புத்த கயா ஆகிய இடங்களில் புனித வழிபாட்டு இடங்களை சீரமைத்தவர் = முதலாம் மகிபாலர்.
  • பீகாரின் ஓடாண்டபுரியில் புகழ்பெற்ற பௌத்த மடாலயத்தை நிறுவியவர் = கோபாலர்.
  • விக்கிரமசீலா மகாவிகாரத்தை நிறுவியவர் = தர்மபாலர்.
  • சோமபுர மகாவிகாரத்தை நிறுவியவர் = தர்மபாலர்.
  • விக்கிரமசீல பல்கலைக்கழகத்தை நிறுவியவர் = தர்மபாலர்.
  • சோமபுர பல்கலைக்கழகத்தை நிறுவியவர் = தர்மபாலர்.

பாலர்கள் ஆட்சியில் இலக்கியம்

  • “ஆகம சாஸ்திரம்” என்னும் நூலின் ஆசிரியர் = கவுத பாதர்.
  • “நியாய குண்டலி” என்னும் நூலின் ஆசிரியர் = ஸ்ரீதரபட்டர்.
  • “ராமசரிதம்” என்னும் நூலின் ஆசிரியர் = சந்தியாகர் நந்தி.
  • பால வம்ச அரசனான “ராமபாலரின்” வாழ்க்கை வரலாற்று நூல் எது = ராமசரிதம்.
11TH ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி
11TH ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி

ராஸ்டிரக்கூடர்கள்

  • ராஸ்டிரக்கூடர்கள் யாருடன் தொடர்ந்து பகைமையை கொண்டிருந்தனர் = பிரதிகாரர்கள்.
  • எந்த இடத்தை கைப்பற்ற ராஸ்டிரக்கூடர்கள் பிரதிகாரர்களுடன் தொடர்ந்து போரிட்டனர் = கன்னோசி.
  • பிரதிகாரர்களுகும் ராஸ்டிரக்கூடர்களுக்கும் இடையே இருந்த பகையை பதிவு செய்துள்ள அரபுப் பயணி யார் = அல் மாசூத்.
  • ராஸ்டிரக்கூடர்களின் தாய் மொழி = கன்னடம்.
  • ராஸ்டிரக்கூடர்கள் யாரின் வழித்தோன்றல்கள் = ரஸ்திகர் அல்லது ரதிகர்களின் வழித்தோன்றல்.
  • அசோகரின் கல்வெட்டில் ராஸ்டிரக்கூடர்கள் பற்றிய குறிப்பு உள்ளது.

தந்திதுர்கர்

  • ராஸ்டிரக்கூட வம்சத்தின் தலைச்சிறந்த அரசர் = தந்திதுர்கர்.
  • சாளுக்கிய அரசன் இரண்டாம் கீர்திவர்மனை தோற்கடித்தார்.
  • ராஸ்டிரக்கூட அரசர் தந்திதுர்கர் பெற்ற சிறப்புப் பெயர்கள் = மகாராஜாதிராஜர், பரமேஸ்வரர், பரமபட்டாரகர்.
  • பல்லவர்களுடன் திருமண உறவை ஏற்படுத்திக் கொண்ட ராஸ்டிரக்கூட அரசன் = தந்திதுர்கர்.
  • தந்திதுர்கர் தனது மகளை எந்த பல்லவ மன்னனுக்கு திருமணம் செய்து கொடுத்தார் = பல்லவ அரசன் இரண்டாம் நந்திவர்மன்.
  • தந்திதுர்கருக்கு பிறகு ஆட்சிக்கு வந்தவர் = முதலாம் கிருஷ்ணா.

முதலாம் கிருஷ்ணரும் அவருக்கு பின் வந்தவர்களும்

  • மைசூரை ஆண்ட கங்கர்களை வென்ற ராஸ்டிரக்கூட அரசன் = முதலாம் கிருஷ்ணா.
  • எந்த மன்னன் ஆட்சிக்காலத்தில் ராஸ்டிரக்கூட அரசின் புகழ் உச்சியில் இருந்தது = துருவர்.
  • பல்லவ அரசன் நந்திவர்மனை தோற்கடித்த ராஸ்டிரக்கூட அரசன் யார் = துருவர்.
  • கன்னோசி பகுதிக்காக பிரதிகார அரசரையும், பாலர் அரசரையும் தோற்கடித்த ராஸ்டிரக்கூட அரசன் = துருவர்.
  • துருவருக்கு பிறகு ஆட்சிக்கு வந்தவர் = மூன்றாம் கோவிந்தர்.
  • பல்லவ அரசர் தண்டிகரை வீழ்த்திய ராஸ்டிரக்கூட அரசன் யார் = மூன்றாம் கோவிந்தர்.
  • மூன்றாம் கோவிந்தற்கு பிறகு ஆட்சிக்கு வந்தவர் = அமோகவர்ஷர்.
  • அமோகவர்ஷர் எத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தார் = 64 ஆண்டுகள்.
  • கன்னட மொழியில் இயற்றப்பட்ட முதல் கவிதை நூல் = கவிராஜமார்க்கம்.
  • “கவிராஜமார்க்கம்” என்னும் நூலின் ஆசிரியர் = அமோகவர்ஷர்.
  • சோழர்கள் மீது படையெடுத்து வெற்றிபெற்ற ராஸ்டிரக்கூட அரசன் = மூன்றாம் கிருஷ்ணர்.
  • தஞ்சையை கைப்பற்றிய ராஸ்டிரக்கூட அரசன் = மூன்றாம் கிருஷ்ணர்.
  • “தக்கோலம் போர்” நடைபெற்ற ஆண்டு = பொ.ஆ 949.
  • தக்கோலம் போரில் தோற்கடிக்கப்ப்ட்ட சோழ அரசன் = ராஜாதித்யன்.
  • தக்கோலம் போரில் சோழர்களை வென்ற ராஸ்டிரக்கூட அரசன் = மூன்றாம் கிருஷ்ணர்.
  • ராமேஸ்வரத்தில் வெற்றித் தூணை நிறுவிய ராஸ்டிரக்கூட அரசன் = மூன்றாம் கிருஷ்ணர்.

ராஸ்டிரக்கூடர்களின் மதம், இலக்கியம், கலை

  • எல்லோரா கைலாசநாதர் கோவிலை கட்டியவர் = முதலாம் கிருஷ்ணா (ராஸ்டிரக்கூடர்).
  • உஜ்ஜயினியில் “ஹிரண்யகர்ப்ப சடங்கை” நடத்திய ராஸ்டிரக்கூட அரசன் = தந்திதுர்கர்.
  • பிற்கால ராஸ்டிரக்கூட அரசர்கள் சமண சமயத்திற்கு ஆதரவு அளித்தனர்.
  • அமோகவர்ஷர் எழுதிய நூல்கள் = கவிராஜமர்க்கம் (கன்னட மொழியின் முதல் நூல்), பிரஸ்னோத்ரமாலிகா (சமஸ்கிருத நூல்).
  • சமணர்களின் “ஆதிபுராணத்தை” எழுதியவர் = ஜீனசேனர்.
  • சமணர்களின் “மகாபுராணத்தை” எழுதியவர் = இரண்டாம் கிருஷ்ணரின் ஆன்மீக குருவான குணபத்ரர்.
  • பட்டாடக்கல் “லோகேஸ்வரர் ஆலயத்தை” கட்டியவர் = சாளுக்கிய அரசன் இரண்டாம் விக்கிரமாதித்தன்.
  • எலிபெண்டா குகைக் கோவிலை கட்டியவர்கள் = ராஸ்டிரக்கூடர்கள்.

புத்தக வினாக்கள்

  1. பிரபாகர வர்த்தனர் தனது மகள் ராஜ்யஸ்ரீயை _____________ என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார்? = கிரகவர்மன்.
  2. ஹர்ஷர் கன்னோசியின் அரியணையை ___________ இன் அறிவுரையின் படி ஏற்றுக் கொண்டார்? = அவலோகிதேஷ்வர போதிசத்துவர்.
  3. _____________ என்பவர் அயலுறவு மற்றும் போர்கள் தொடர்பான அமைச்சர் ஆவார்? = அவந்தி.
  4. ஹர்ஷரால் எழுதப்பெற்ற நூல் எது? = பிரியதர்சிகா.

 

 

Leave a Reply