பல ஜனபதங்களை உள்ளடக்கிய பெரிய அமைப்பாக ‘மகாஜனபதங்கள் உருவாக்கப்பட்டன.
கோசலம், அவந்தி, வத்சம், மகதம், போன்றவை, பரம்பரை மன்னராட்சி மகாஜனபதங்களில் வலிமையானவை.
மகதம் பிற மகாஜன பதங்களை வென்று இறுதியில் பேரரசாக எழுச்சி பெற்றது.
மகாஜனபதங்கள் :
அங்கம்,
மகதம்,
கோசலம்,
காசி,
வஜ்ஜி,
மல்லம்,
கேதி,
வத்சம்,
குரு,
பாஞ்சாலம்,
மத்ஸ்யம்,
சூரசேனம்,
அஸ்மகம்,
அவந்தி,
காந்தாரம்,
காம்போஜம்
தலைநகராக முதலில், ‘சிராஸ்வதி நகரமும் பின்னர், ‘ இராஜகிருகம், என்னும் நகரமும் இறுதியாகப் ‘பாடலிபுத்திரம்‛ என்னும் நகரமும் இருந்தன.
அரியாங்க வம்சத்தைச் சேர்ந்தவர் பிம்பிசாரர்.
பிம்பிசாரரின் மகன் அஜாதசத்ரு தனது தந்தையையே சிறையில் அடைத்து ஆட்சியைக் கைப்பற்றினார்.
அஜாதசத்ரு கோசலம், அவந்தி, வைசாலி ஆகிய மகாஜனபதங்களுடன் நீண்டகாலம் போர் செய்து வெற்றிபெற்று மகதத்துடன் இணைத்தார்.
பாடலிபுத்திரத்தில் பெரிய கோட்டையை அமைத்தவரும் அஜாதசத்ருவே.
அரியாங்க வம்சத்தை வீழ்த்தி சிசுநாகர் ஆட்சியைப் பிடித்தார். சிசுநாகர்களுக்குப் பின் நந்தவம்சத்தினர் ஆட்சிக்கு வந்தனர்.
மகாபத்மநந்தன் என்ற முதல் நந்தமன்னர் விந்திய மலைகளைக் கடந்து தக்காணப் பகுதிகளையும் கைப்பற்றினார். இவர் சிந்துநதி முதல் தக்காணம் வரையில் பரந்துவிரிந்த முதல் இந்தியப் பேரரசாக மகதத்தை உருவாக்கினார்.
நந்தவம்சத்துப் பேரரசர்கள் சமண மதத்தைப் போற்றுபவர்களாக இருந்தனர்.
நந்தமன்னரான தனநந்தனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து, போரில் வென்று மகதப்பேரரசை மௌரியவம்சத்தைச் சேர்ந்த சந்திரகுப்தர் கைப்பற்றி ஆண்டார்.
செலூகஸ் நிகேடார் என்ற கிரேக்க மன்னனையும் தோற்கடித்து ஆப்கானிஸ்தானம், காந்தாரம் போன்ற பகுதிகளையும் தமது பேரரசுடன் இணைத்துக் கொண்டார்.
செலூகஸின் தூதுவரான மெகஸ்தனிஸ் என்ற கிரேக்க அறிஞர் பாடலிபுத்திரத்தில் பல ஆண்டுகள் தங்கி, இந்தியாவைப்பற்றி, ‘இண்டிகா’ என்னும் நூலை எழுதினார்.
சந்திரகுப்த மௌரியர் சமண மதத்தைத் தழுவித் துறவியாகி அரியாணையைத் துறந்து சமண முனிவர் பத்திரபாகு என்பவருடன் தென் இந்தியாவிற்குச் சென்று விட்டார்.
சந்திரகுப்த மௌரியருக்குப்பின் அவர் மகன் பிந்துசாரர் 25 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
பிந்துசாரருகுப்பின், அவரது மகன்களில் ஒருவரான அசோகர் மௌரியப் பேரரசரானார்.
மௌரியப் பேரரசிலிருந்து பிரிந்து சென்ற கலிங்கத்தின் மீது படையெடுத்தார்.
இனி போர் செய்வதில்லை என்று முடிவெடுத்து, படையெடுத்துப் போர் செய்து, வெற்றிபெறும் ‘திக் விஜயத்தை’ வெறுத்தார்.
மக்களிடம் தர்மத்தை வளர்க்க இவர் மேற்கொண்ட இடைவிடாத பயணங்கள், ‘தர்மவிஜயம்’ என்று குறிப்பிடப்படுகின்றன.
மக்களுக்கு உதவுதற்காகவே தர்மமகாமாத்திரர்கள் எனப்பட்ட சிறப்புப் பணியாளர்களை நியமித்தார்.
இந்தியாவில் முதன் முதலில் மக்கள் நல அரசை (றுநடகயசந ளுவயவந) உருவாக்கிய சிறப்பு அசோகரையே சேரும்.
பௌத்த மதத்தை அசோகர் தழுவினார். கபிலவஸ்து, சாரநாத் புத்தகயா போன்ற பௌத்த நினைவிடங்களைச் செப்பனிட்டு விரிவுப்படுத்தினார்.
அசோகர், பாடலிபுத்திரத்தில் மூன்றாவது பௌத்த மாநாட்டைக் கூட்டினார்.
அசோகர், இலங்கையில் பௌத்த மதத்தைப் பரப்பத் தன் மகன் மகேந்திரனை அனுப்பினார்.
சாஞ்சி, சாரநாத், லும்பினி போன்ற இடங்களில் காணப்படும் கலையழகு மிக்க பிரம்மாண்டமான பௌத்த ஷபிகள் காண்போரை வியக்க வைப்பவையாகும்.
அசோகரது கல்வெட்டுகள் பிராகிருத மொழியில் எழுதப்பட்டவை. வடமேற்கு எல்லைப் பகுதியில் கரோஸ்தி என்னும் எழுத்திலும், ஆப்கானிஸ்தான் பகுதிகளில் கிரேக்க எழுத்திலும் பொறிக்கப்பட்டுள்ளன.
வடக்குப் பகுதிக்குத் தட்சசீலமும், மேற்குப் பகுதிக்கு உஜ்ஜயினியும், தெற்குப் பகுதிக்குச் சுவர்ணகிரியும், கிழக்குப் பகுதிக்குத் தோசாலியும் தலை நகரங்களாக இருந்தன.
மையமான மகதம் போன்றவற்றைப் பேரரசரே பாடலிபுத்திரத்திலிருந்து ஆட்சி செய்தார்.
மகாமத்திரர் என்ற உயர் அதிகாரிகள் மாநிலங்களின் அதிகாரிகளாகவும், ஆளுநர்களாகவும் இருந்தனர்.
மக்களது அறவாழ்க்கைக்கு உதவ தரும மகாமாத்திரர்கள் இருந்தனர்.
மௌரிய வம்சத்தின் கடைசி அரசரான பிருகத்திரதன் தன் படைத் தலைவர் புஷ்யமித்ரசுங்கனால் படுகொலை செய்யப்பட்டார்.
குஷானப் பேரரசு
மௌரியர்களின் வீழ்ச்சிக்குப்பின் இந்தியாவில் நிறுவப்பட்ட வலிமையான பேரரசு குஷானப் பேரரசு ஆகும்.
குஷான அரசை முதலாம் காட்பிளஸ் கி.பி.முதல் நூற்றாண்டில் நிறுவினார்.
இரண்டாம் காட்பிஸஸ் (கி.பி. 65-75) பஞ்சாபையும், கங்கைச் சமவெளியையும் கைப்பற்றினார்.
இரண்டாம் காட்பிஸஸ் இறந்தபின் கனிஷ்கர் (கி.பி.78 -101 ) குஷான அரியணையைக் கைப்பற்றினார்.
கனிஷ்கர் குஷான வம்சத்தின் தலைசிறந்த மன்னராக விளங்கினார்.
புருயூபுரம் என்ற பெஷாவரைப் புதுநகராக உருவாக்கித் தன் தலைநகராக ஆக்கினார்.
நான்காவது பௌத்த மாநாட்டைக் காஷ்மீரில் கூட்டினார்.
புகழ்பெற்ற பௌத்த அறிஞர்களான வசுபந்து, அசுவகோயூர், நாகார்ஜூனர் போன்றோர் பங்கேற்றனர்.
இம்மாநாட்டில்தான் மகாயான பௌத்த மதப்பிரிவு தோன்றியது.
இந்திய கிரேக்க நுட்பங்கள் இணைந்த காந்தாரக் கலையினால் புத்தர், பௌத்தத்துடன் தொடர்புடையோரின் புதிய சிற்பங்கள் உருவாக்கப்பட்டன.
பௌத்த மதத்தைப் பரப்ப அவர் மேற்கொண்ட முயற்சிகளாலும் இவர் இரண்டாம் அசோகர் என்று அழைக்கப்பட்டார்.
கனிஷ்கர் பதவிக்கு வந்த ஆண்டினை முதன்மையாக வைத்துச் சகசகாப்தம் என்னும் புதிய காலக்கணக்கீட்டு முறை உருவாயிற்று.
கனிஷ்கர் இறுதியில் அவரது கூடாரத்திலேயே சதிகாரர்களால் கொலை செய்யப்பட்டார்.
குஷானப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு மகதத்தில் பாடாலிபுத்திரத்தைத் தலைநகராகக் கொண்டு உருவான பேரரசு குப்தப் பேரரசு ஆகும்.
குப்தவம்சத்தின் முதல் சுதந்தர மன்னராக முதலாம் சந்திரகுப்தர் (கி.பி. 319-335 ) குறிப்பிடப்படுகிறார்.
சமுத்திர குப்தரது (கி.பி. 335-375) வங்காளத்திலிருந்து சிந்துநதி வரையிலும் இமயமலையிலிருந்து விந்தியமலை வரையிலும் இப்பேரரசு விரிவாக்கப்பட்டது.
அலகாபாத் கல்வெட்டைப் பொறித்தவர் இவரது அமைச்சர் அரிசேனர் ஆவார்.
இரண்டாம் சந்திரகுப்தர் (கி.பி.380-414) புகழ் பெற்ற அரசராகப் போற்றப்படுகிறார்.
இராமாயணம், மகாபாரதம் போன்றவையும் 18 புராணங்களும் தொகுக்கப்பட்டன.
காளிதாசர் – பாசர் – விசாகதத்தர் போன்ற புகழ் பெற்ற வடமொழிப் புலவர்கள் குப்தர்களால் போற்றப்பட்டனர்.
சமஸ்கிருத மொழி, ஆட்சி மொழி ஆயிற்று. விஷ்ணு, சிவன், துர்கை போன்ற இந்து கடவுளருக்குச் சிறு சிறு கோயில்கள் கட்டப்பட்டன.
அஜந்தாவிலுள்ள சில பௌத்த குகைச் சிற்பங்களும், ஓவியங்களும் குப்தர் காலத்தவை.
ஆரியபட்டர் – வராகமிகிரர் போன்ற புகழ் பெற்ற கணித – வானியல் அறிஞர்களும், சரகர், சுசுருதர், தன்வந்திரி முதலிய மருத்துவ அறிஞர்களும் குப்தர் காலத்தவர்களே.
1500 ஆண்டுகளாய்த் துருப்பிடிக்காமல் இன்றும் பொலிவுடன் இருக்கும் மெகரௌலி இரும்புத்தூண் குப்தர் காலத்ததாகும்.
குமாரகுப்தர் காலத்தில், பௌத்தர்களது புகழ்பெற்ற நாளந்தா பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.
குப்தர்களின் காலம் பொற்காலம் எனக் கருதப்படுகிறது.
புகழ்பெற்ற சீனப் பயணி பாகியான், இரண்டாம் சந்திரகுப்தர் (விக்கிரமாதித்யன்) காலத்தில் இந்தியாவின் பௌத்தத் தலங்களைக் காணவந்தார்.
தானேஸ்வரத்தின் அரசர் ஹர்யூவர்த்தனர் (கி.பி. 606- கி.பி.647) ஆவார்.
கன்னோசியே ஹர்யூரது தலைநகராக வியங்கியது.
மாளவம், சிந்து, ஒரிசா பகுதிகளையும் ஹர்யூர் வென்றார்.
சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி இவரைத் தோற்கடித்தார்.
பௌத்தத் துறவியாக மாறிய ராஜஸ்ரீ, சீன அறிஞர் யுவான்சுவாங் ஆகியவர்களால் ஹர்யூர் பௌத்தத்தின்பால் ஈர்க்கப்பட்டார்.
பௌத்தப் பல்கலைக்கழகமான நாளந்தா ஹர்யூரது ஆதரவால் உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகமாக வளர்ச்சி பெற்றது.
இவரது அமைச்சரான பாணர் சமஸ்கிருதமொழி அறிஞராவார். இவர், யூஹர்யூசரிதம்’ என்னும் நூலை இயற்றியுள்ளார்.
இவர் ‘நாகானந்தம்’ ‘ரத்னாவளி’ பிரியதர்சிகா’ என்னும் நூல்களையும் படைத்துள்ளார்.
சீன நாட்டைச் சேர்ந்த பௌத்தத் துறவி யுவான் சுவாங் எழுதிய, ‘சி-யு-கி’ என்னும் பயண நூல் அன்றைய இந்தியாவைப் பற்றியும், பௌத்த மதத்தைப் பற்றியும் பல செய்திகளைத் தருகின்றது.
இசுலாமியர் படையெடுப்பிற்குமுன், வடஇந்தியாவில் இருந்த கடைசிப் பேரரசு ஹர்ஷரது பேரரசாகும்.