கி.பி. 8ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 18ஆம் நூற்றாண்டு வரையிலான காலமே இடைக்காலம் எனப்படுகிறது.
கி.பி. 8ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 13ஆம் நூற்றாண்டு வரை முந்தைய இடைக்காலம் எனவும், கி.பி. 13ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 18ஆம் நூற்றாண்டு வரை பிந்தைய இடைக்காலம்.
இராசபுத்திரர்கள் காலம் (கி.பி647-கி.பி.1200) இராசபுத்திரர்கள் இராமன் (சூரியகுலம்) அல்லது கிருஷ்ணன் (சந்திரகுலம்) வழிவந்தவர்கள்.
பண்டைய சத்திரிய குடும்பங்களைச் சார்ந்தவர்கள்.
சாகர்கள், ஹூணர்கள், குஷானர்கள், கூர்ஜரர்கள் போன்ற வெளிநாட்டு மரபினைச் சார்ந்தவர்கள்.
அக்னி குலத்தவர் என்பனவாகும்.
36 வகை இராசபுத்திரர்கள் வடஇந்தியாவில் ஆட்சி செய்தார்கள். அவர்களில் வலிமைப் பெற்ற இராசபுத்திரர்கள்.
அவந்தியை ஆட்சி செய்த பிரதிகாரர்கள்.
வங்காளத்தை ஆட்சி செய்த பாலர்கள்.
ஆஜ்மீh, டெல்லியை ஆண்ட சௌகான்கள்.
டெல்லியை ஆட்சி செய்த தோமர்கள்.
கனோஜ்பகுதியை ஆட்சி செய்த ரத்தோர்கள்.
மேவார் பகுதியை ஆட்சி செய்த சிசோதியர்கள் அல்லது குகிலர்கள்.
பந்தல்கண்டை ஆட்சி செய்த சந்தேலர்கள்.
மாளவத்தை ஆட்சி செய்த பரமாரர்கள்.
வங்காளத்தை ஆட்சி செய்த சேனர்கள்.
குஜராத்தை ஆட்சி செய்த சோலங்கிகள் ஆவர்.
பிரதிகார்கள் (கி.பி. 8-11 நூற்றாண்டுகள்)
பிரதிகாரர்கள் கூர்ஜர மரபினர். எனவே கூர்ஜரப் பிரதிகாரர்கள் எனவும் அழைக்கப்பட்டனர். இவர்களது காலம் கி.பி. 8-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 11-ஆம் நூற்றாண்டு வரை.
பிரதிகார மரபை தோற்றுவித்தவர் முதலாம் நாகபட்டர் (கி.பி.725-740) ஆவார்.
வத்சராசா, இரண்டாம் நாகபட்டர் ஆகியோர் இப்பேரரசை மேலும் வலிமையுறச் செய்தனர்.
பிரதிகார மன்னர்களில் மிகவும் வலிமையுடன் விளங்கியவர் மிகிரபோசர்.
பிரதிகாரர்களின் பேரரசு, காஷ்மீர் முதல் நர்மதா ஆறு வரையிலும், கத்தியவார் முதல் பீகார் வரையிலும் விரிந்துப்பரந்தது. இவர் சிந்துவின் ஜுனட் முஸ்லீம்களின் படையெடுப்பை முற்றிலும் தடுத்தார்.
மகேந்திர பாலர் (கி.பி.885-908) மிகிரபோசரின் மகன் ஆவார். இம்மரபின் ஆற்றல் மிக்க அரசர்களில் மகேந்திரபாலர் ஒருவராவார்.
பிரதிகார்களின் கடைசி மன்னர் இராஜ்யபாலா ஆவார்.
இவரது ஆட்சியில் பேரரசின் பரப்பளவு குறைந்து கனோஜ்வரை மட்டுமே இருந்தது. கி.பி.1018ஆம் ஆண்டில் முகமது கஜினி, இராஜ்யபாலா மீது போர்தொடுத்தார்.
ஜுனட் முஸ்லீம்கள் (கி.பி.725) முதல், முகமது கஜினி வரையிலான முஸ்லீம்களின் படையெடுப்பிலிருந்து இந்தியாவை பாதுகாக்கும் அரணாக பிரதிகாரர்கள் இருந்தனர்.
பாலர்கள் (கி.பி. 8-12 நூற்றாண்டுகள்)
கோபாலர் (கி.பி.765-769), பாலர் மரபைத் தொடங்கினார்.
இவர் தமது நாட்டின் எல்லையை மகதம் வரை விரிவுபடுத்தினார். இவரது அரசு இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியையும் ஆட்சி செய்தது.
கோபாலருக்கு பின் அவரின் மகன் தருமபாலர் (கி.பி.769- 815) மன்னரானார்.
பௌத்த மதத்தில் பற்றுமிக்க தருமபாலர் பல பௌத்த மடங்களைக் கட்டினார். புகழ்மிக்க விக்ரமசீலா பல்கலைக்கழகத்தை நிறுவியதோடு நாளந்தா பல்கலைக்கழகத்தையும் புதுப்பித்தார்.
தேவபாலர் (கி.பி815-855) தருமபாலரின் மகன் ஆவார்.
மகிபாலர் (கி.பி.998-1038) ஆட்சியேற்றதைத் தொடர்ந்து நாடு மீண்டும் வலிமைபெறத் தொடங்கியது.
மரபின் கடைசி மன்னர் கோவிந்தபாலர் ஆவார்.
பிரதிகார்கள், பாலர்கள், இராஷ்டிரகூடர்கள் ஆகிய மூன்று அரசுகளும் வளம் நிறைந்த கங்கைச்சமவெளிப்பகுதி நிறைந்த கங்கைச்சமவெளிப்பகுதி மற்றும் கனோஜ்பகுதியை, கைப்பற்றுவதிலேயே நோக்கமாக இருந்தனர்.
200 ஆண்டுகள் தொடர்ந்த இப்போராட்டம் மூன்று அரசுகளையுமே வலிமை இழக்கச் செய்தன.
துருக்கியர்களின் இந்திய வெற்றிக்கு இதுவே மறைமுகக் காரணமானது எனலாம்.
இவர்கள் தனியரசை ஏற்படுத்தி டெல்லி நகரை கி.பி.736ல் நிறுவினார்கள். கி.பி.1043ல் மகிபால தோமர், தானேஸ்வரம், ஹான்சி, நாகர்கோட் ஆகிய இடங்களை வென்றார்.
சௌகான்கள்
கனோஜ்பகுதியை ஆண்ட பிரதிகாரர்களுக்குத் திறை செலுத்துபவர்களாக இருந்தவர்களே சௌகான்கள்.
கி.பி.11-ஆம் நூற்றாண்டில் ஆஜ்மீர் பகுதியை சுதந்திர அரசாக அறிவித்த சௌகான்கள் கி.பி.12-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மாளவப் பகுதியை ஆண்ட பரமாரர்களிடமிருந்து உஜ்ஜயினியையும், தோமர்களிடமிருந்து டெல்லியையும் வென்றனர்.
சௌகான் மன்னர்களில் மிக முக்கியமான மன்னர் பிருத்திவிராஜ்சௌகான் ஆவார்.
கி.பி.1090 முதல் 1194 வரையில் ஆண்ட இவர்களில் ஜெயசந்திரன் என்பவரே புகழுடன் ஆட்சி செய்த கடைசி மன்னர் ஆவார். முகமது கோரியுடன் கி.பி.1194ல் நடந்த சந்தவார் போரில் இவர் கொல்லப்பட்டார்.
சந்தேலர்கள்
பிரதிகாரர்களின் ஆட்சியில் இருந்த பந்தல்கண்ட் பகுதியை கி.பி.9ஆம் நூற்றாண்டில் தனியரசாக சந்தேலர்கள் அமைத்தனர்.
மன்னன் யாசோதவர்மன் மகோபாவை தலைநகராக நிறுவினார்.
கடைசி அரசர் பாராமால். இவரை கி.பி.1203ல் குத்புத்தீன் ஐபக் தோற்கடித்தார்.
கலிஞ்சார் கோட்டை இவர்களது முக்கிய கோட்டையாகும்.
கஜூராஹோவில் பல அழகிய கோயில்களை இவர்கள் கட்டினார்கள். இவைகளுள் கந்தர்ய மகாதேவர் ஆலயம் (கி.பி.1050) புகழ் பெற்றதாகும்.
சிசோதியர்கள் அல்லது குகிலர்கள்
சிசோதிய மரபினைத் தொடங்கியவர் பாபாரவால்.
இராணாரத்தன்சிங்கை கி.பி.1307ல் அலாவுதீன் கில்ஜி போரிட்டு தோற்கடித்தார். இராணாரத்தன்சிங்கின் மனைவி இராணி பத்மினி, ஜவ்ஹர் என்ற வழக்கத்தின்படி தீயில் குதித்து இறந்தார்.
ராணா சங்கா, மகாராணா பிரதாப் ஆகியோர் முகலாயர்களை எதிர்த்து வலிமையுடன் போர்புரிந்தார்கள்.
பாமரர்கள் பாமாரர்கள் கி.பி.10ஆம் நூற்றாண்டில் தம்மைச் சுதந்திர அரசாக அறிவித்துக் கொண்டனர். இவர்களது தலைநகரமாக தாரா விளங்கியது.
இராஜாபோஜ் (கி.பி.1018-1069) என்பவர் இம்மரபின் புகழ்மிக்க மன்னராவார்.
போபால் நகரின் அருகில் அழகிய ஏரி (250 சதுர மைல்) ஒன்றை அமைத்தார். தாராவில் சமஸ்கிருத கல்லூரி ஒன்றை நிறுவினார்.
இராசபுத்திரர்களின் சிறப்பியல்புகள்
இராசபுத்திரர்கள் இந்து மதத்தை போற்றி வளர்த்தனர்.
சமணசமயம், புத்த சமயம் ஆகியவைகளும் ஆதரிக்கப்பட்டன.
நாட்டினைப் பல ஜாகிர்களாகப் பிரித்தனர். அதன் தலைவர்களான ஜாகிர்தார்கள், வரிவசூலித்து உரிய பங்கை மன்னரிடம் செலுத்தினர்.
9 இராசபுத்திரர்கள், மொழி, இலக்கியம், கலை மற்றும் கட்டிடக்கலை ஆகிய துறைகளின் வளர்ச்சிக்குப் பெரும் பாடுபட்டார்கள்.
மராத்தி, குஜராத்தி, வங்கமொழி போன்ற வட்டாரமொழிகள் சிறப்பாக வளர்ச்சியடைந்தன.
கல்ஹணர் எழுதிய இராஜதரங்கினி, ஜெயதேவரின் கீதகோவிந்தம், சோமதேவரின் கதா சரித சாகரம் ஆகியன சிறந்த படைப்புகளாகும்.
பிருத்திவிராஜ்சௌகானின் அவைப்புலவரான சந்த்பரிதை எழுதிய பிருத்திவிராஜ்ரசோ என்னும் நூலானது, பிருத்திவிராசனின் படையெடுப்புகளைப் பற்றி விளக்குவதாகும்.
பாஸ்கராச்சாரியா எழுதிய சித்தாந்த சிரோமணியானது ஒரு சிறந்த வானவியல் நூலாகும்.
கற்மூமூமூமூமூபுரமஞ்சரி, பாலஇராமயணம் ஆகியன இராசசேகரனின் சிறந்த படைப்புகளாகும்.
கஜூராஹோ நகரின் ஆலயங்களும், புவனேஸ்வரத்தில் உள்ள லிங்கராசா கோயிலும், கோனார்க்கில் உள்ள சூரியக்கோயிலும், அபுமலையில் கட்டப்பட்டுள்ள தில்வாரா ஆலயமும் இராசபுத்திரர்களின் கோயிற்கட்டிடக்கலையின் சிறப்பான எடுத்துக்காட்டுகளாகத் திகழ்கின்றன.
ஜெய்ப்புர், உதய்புர் நகர அரண்மனைகளும், சித்ஷர், மாண்டு, ஜோத்புர், குவாலியர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கோட்டைகளும், இராசபுத்திரர்களின் கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டுகள்.
8-18 நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலமே இடைக்காலம்.
பிரதிகாரர்கள் மரபினைத் தோற்றுவித்தவர் முதலாம் நாகபட்டர் தர்மபாலர் புகழ்மிக்க பல்கலைக்கழகத்தை விக்ரமசீலம் என்ற இடத்தில் நிறுவினார்.
சௌகான் மன்னர்களில் மிக முக்கியமான மன்னர் பிருத்திவிராஜ் சௌகான்.