பண்டைய தமிழகமானது சேர, சோழ, பாண்டியநாடு என முப்பெரும் அரசுகளை கொண்டிருந்தது. அக்காலம் சங்ககாலம் எனப்பட்டது, பின்னர் களப்பிரர்கள் கி.பி.300 முதல் 600 ஆம் ஆண்டு வரையில் ஏறக்குறைய மூன்று நூற்றாண்டுகள் தமிழகத்தை ஆண்டனர்.
பல்லவர்கள்
பல்லவர்கள், பாரசீகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தொண்டை மண்டலத்தைத் தாயகமாகக் கொண்டவர்கள் என்றும் கூறுவர்.
சிம்மவிஷ்ணுவின் தலைமையில் பல்லவர்கள், களப்பிரர்களை தோற்கடித்து வட தமிழ்நாடாகிய தொண்டை மண்டலத்தில் தமது ஆட்சியை நிறுவினர்.
பல்லவர்களின் தலைநகரம் காஞ்சிபுரம் பிற்காலப் பல்லவ அரசர்களில் முதன்மையானவர் சிம்ம விஷ்ணு.
சிம்ம விஷ்ணு, அவணிசிம்மன் அதாவது உலகின் சிங்கம் எனப் புகழப்பட்டார்.
மகேந்திரவர்மன் தொடக்கத்தில் சமணமதத்தை பின்பற்றினார். பின்னர் சைவக்குரவர் அப்பர் என்பவரால் சைவத்திற்கு மாற்றப்பட்டார்.
இவர் அமைத்த குடைவரைக் கோயில்கள், மண்டகப்பட்டு, பல்லாவரம், மாமண்டூர், மகேந்திரவாடி, தளவானூர், திருச்சிராப்பள்ளி, சீயமங்கலம் ஆகிய இடங்களில் உள்ளன.
இவர் மகேந்திரமங்கலம், மகேந்திரவாடி என்ற இரண்டு நகரங்களை நிறுவினார்.
முதலாம் மகேந்திரவர்மனின் மகன் முதலாம் நரசிம்மவர்மன் ஆவார். இவரை ‘மாமல்லன்’ என்றும் அழைப்பர். மற்போரில் சிறந்தவன் என்பது இதன் பொருளாகும்.
11 முதலாம் நரசிம்மவர்மன் ‘வாதாபிகொண்டான்’ எனவும் புகழப்பட்டார்.
நரசிம்மவாமன் ஆட்சியின் போதுதான் சீனப்பயணி யுவான்சுவாங், தலைநகர் காஞ்சிக்கு வருகை தந்தார்.
நரசிம்மவர்மன் சிறந்த கட்டிடக்கலை நிபுணராகவும் விளங்கினார். மாமல்லபுரத்தில் உள்ள ஒற்றைக்கல் ரதங்கள் இவரது கட்டட கலைக்குச் சான்றாகும்.
இரண்டாம் நரசிம்மவர்மன் ஆட்சிக்காலத்தில் பல்லவநாடு, அமைதியும், வளமும் கொண்டு விளங்கியது.
காஞ்சிபுரத்தில் கைலாசநாதர் கோயில், மாமல்லபுரத்தில் கடற்கரைக் கோயில், பனைமலையில் தாளகிரிஸ்வரர் கோயில் உட்பட பல ஆலயங்களை இவர் கட்டினார்.
இவரது அரசவையில் தண்டி என்ற வடமொழி அறிஞர் தண்டி அலங்காரம் என்னும் சமஸ்கிருத இலக்கண நூலை எழுதினார்.
இரண்டாம் நரசிம்மவர்மன் ஆட்சியில் சீனாவுடன் வணிக உறவு ஏற்பட்டது.
சிம்மவிஷ்ணுவின் தம்பியும் இரண்யவர்மனின் மகனுமான இரண்டாம் நந்திவர்மன் பல்லவ அரசராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாம் நந்திவர்மன் விஷ்ணுபக்தர் ஆவார்.
காஞ்சியில் கைலாசநாதர் கோயிலைக் கட்டினார்.
திருமங்கை ஆழ்வார் இவரின் சமக்காலத்தவராவர்.
பல்லவ மன்னர்களில் குறிபிடத்தக்க மன்னர் மூன்றாம் நந்திவர்மன். இவரை தெள்ளாறு எறிந்த நந்திவர்மன் என்று நந்திக்கலம்பகம் புகழ்கின்றது.
கடைசி பல்லவ அரசர் அபராஜிதன் ஆவார்.
பல்லவ நாடு பல ‘ராஷ்டிரம்’ எனக்கூடிய மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டது.
உரிமையியல், குற்றவியல் ஆகிய நீதிமன்றங்களும் இருந்தன.
நிர்வாகத்தின் அடிப்படை அலகு கிராமம் ஆகும்.
கிராமத்தை நிர்வகிக்க ‘ஊர் அவை’ இருந்தது. இருபது வாரியங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
முதலாம் மகேந்திரவர்மன் மத்தவிலாச பிரகசனம், பகவதவிபூகம் நூல்களை எழுதினார் பாரவி ‘கீர்தார்சுனியம்’ என்ற நூலை எழுதினர். தண்டி என்பார் அவந்தி சுந்தரி கதாசாரம் என்னும் நூலையும், பெருந்தேவனார் பாரத வெண்பாவையும் எழுதினர்.
ஆழ்வார்களும். நாயன்மார்களும் எழுதிய பாடல்களில் பல, பல்லவர் காலத்தைச் சேர்ந்ததாகும். நந்திக்கலம்பகமும் இக்காலகட்டத்தில் எழுதப்பட்டது.
திராவிட பாணியிலான கட்டிடக்கலை பல்லவர்கள் காலத்தில் தொடங்கப்பட்டது.
இவர்களது கட்டிடக்கலையை நான்கு விதமாக பிரிக்கலாம்.
முதலாவதாக பாறைக்குடைவு கோயில்கள், முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் ஏற்படுத்தப்பட்டன.
இரண்டாவதாக ஒற்றைக்கல் இரதங்கள், மண்டபங்கள் ஆகியன உள்ளன.
மூன்றாவது அமைப்பு இராஜசிம்மன் வகையிலானது.
கைலாசநாதர் கோயில், மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோயில் ஆகிய இதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.
நான்காவது வகையானது காஞ்சியில் முக்தீஸ்வரர் ஆலயம், வைகுந்த பெருமாள் கோயில் போன்ற கட்டுமான கோயில்கள் ஆகும்.
இசையில் வல்லவராய் திகழ்ந்ததால் முதலாம் மகேந்திரவர்மன் ‘சங்கீரணசாதி’ அவரது ஓவிய ஆற்றலால் ‘சித்திரக்காரப்புலி’ என்றும் புகழப்பட்டார்.
பல்லவர்காலத்து அழகிய ஓவியங்கள் காஞ்சி கைலாசநாதர் கோயிலில் காணப்படுகின்றன.
சோழப்பேரரசு
சோழர்களின் அன்றைய தலைநகராமாக உறைபூர் விளங்கியது.
சோழர்களின் இலட்சினையாக ‘புலி’ உருவம் இடம் பெற்றது.
முற்காலச் சோழர்களில் கரிகாலசோழன் புகழ்பெற்றவர் ஆவார்.
பின்னர் தஞ்சாவூர் இவர்களின் தலைநகரமானது.
தென்னிந்தியாவின் பெரும் பகுதியையும், இலங்கை, கடாரம் (சுமத்ரா, மலேசிய பகுதிகள்) ஆகிய பகுதிகளையும் வென்றதால் பேரரசு சோழர்கள் என அழைக்கப்பட்டனர்.
விஜயாலய சோழனின் மகன் முதலாம் ஆதித்த சோழன் தொண்டை மண்டலம், கொங்கு நாடு உள்ளிட்ட பகுதிகளை வென்றார்.
ஆதித்த சோழனின் மகன் முதலாம் பராந்தகன், பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரையை வென்றதால் ‘மதுரை கொண்டான்’ என்று புகழப்பட்டார்.
சோழமரபில் ஆட்சிசெய்த மன்னர்களில் மிகச் சிறந்த ஆட்சியாளர் முதலாம் இராஜராஜசோழன்.
முதலாம் இராஜராஜசோழன் பொலனருவினை வென்று அங்கு ஒரு சிவன் கோயிலையும் கட்டினார். முந்நீர் பழந்தீவுகள் எனப்பட்ட மாலத்தீவுகளையும் வென்றார்.
மும்முடிசோழன், ஜெயங்கொண்டான், சிவபாதசேகரன் போன்ற பல சிறப்பு பெயர்களை இராஜராஜன் பெற்றிருந்தார்.
இவர் சைவ சமயத்தைப் பின்பற்றினார். இவரது காலத்தில்தான் தேவாரம் தொகுக்கப்பட்டது.
கி.பி.1010 ஆம் ஆண்டில் தஞ்சாவூரில் பிரகதீஸ்வரர் கோயிலைக் கட்டினார்.
இராஜராஜசோழனின் மகனான இராஜேந்திரசோழன் வங்காளத்தின் மீது படையெடுத்து வென்றார்.
இவ்வெற்றியின் நினைவாக ‘கங்கை கொண்ட சோழபுரம்’ என்ற நகரை நிறுவினார்.
பல பகுதிகளை கடல்கடந்து போரிட்டு வென்றது இவரது மிகச்சிறந்த செயலாகும்.
இராசேந்திரன் காலத்தில் சோழப் பேரரசானது புகழின் உச்சநிலையை எய்தியது.
முதலாம் இராஜேந்திர சோழனின் மகளான அம்மங்கா தேவி என்பாரின் மகனே முதலாம் குலோத்துங்க சோழன்.
முதலாம் குலோத்துங்கன் சிறந்த நிர்வாகியாக விளங்கினார். இவர் சுங்கவரி நீக்கி வணிகத்தை எளிமைபடுத்தியதால் சுங்கம் தவிர்த்த சோழன் என் போற்றப்பட்டார்.
இவர் ஜெயங்கொண்டார், ஒட்டக்கூத்தர், புகழேந்தி, கம்பர் முதலிய புலவர்களை ஆதரித்தார்.
சோழநாட்டின் கடைசி அரசனாக மூன்றாம் இராசேந்திரன் விளங்கினார்.
சோழநாட்டின் நிர்வாக அடிப்படை அலகு ‘ஊர்’ ஆகும்.
முதலாம் பராந்தக சோழன் காலத்தைச் சார்ந்த உத்திரமேரூர் கல்வெட்டு, கிராம நிர்வாகத்தைப் பற்றி விரிவாக விளக்குகிறது.
கிராமசபை உறுப்பினர்கள் குடவோலை முறையின்படி 30 உறுப்பினார்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சோழர்கால சமூகத்தில் சாதிமுறை வழக்கில் இருந்தது. சதி, தேவதாசி போன்ற வழக்கங்கள் நடைமுறையில் காணப்பட்டன.
12 பெண்கள் ‘சிறுபாடு’ என்னும் சிறுசேமிப்பு பழக்கத்தை கொண்டிருந்தனர்.
இராஜராஜன் காலத்தில் வரிவிதிப்புக்கான கணக்கெடுப்புப்ப பணி சேனாதிபதி குரவன் என்பவரால் மேற்கொள்ளப்பட்டது.
இவர்கள் காலத்தில் நெசவு, உலோக உருக்குத் தொழில்கள் மேன்மையுற்றன.
சீனா, சுமத்ரா, ஜாவா, அரேபியா ஆகிய நாடுகளுடன் வணிக உறவு ஏற்பட்டிருந்தது.
சைவ நூலான பன்னிரு திருமுறைகளை நம்பியாண்டார் நம்பியும், வைணவ நூலான நாலாயிர திவ்யபிரபந்தத்தை நாதமுனியும் தொகுத்தனர்.
மூவருலா, குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ், தக்கயாபரணி ஒட்டக்கூத்தர் எழுதினார்.
உரையாசிரியர்கள் இளம்புரனார், நச்சினார்கினியார், பரிமேலழகர் சோழர் காலத்தவரே.
பிரகதீஸ்வரர் ஆலயம் உலகத்தொன்மையான சின்னங்களுள் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோயிலின் விமானத்தின் உயரம் 216 அடியாகும். விமானம் 13 அடுக்குகளாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலில் உள்ள நடராசர், அர்த்தநாரிஸ்வரர் உலோகச் சிலைகள், சோழர் கலையம்சத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
சோழர்களது சுவரோவியங்கள் தஞ்சாவூர், திருமயம், காஞ்சி கைலாசநாதர் கோயில், நார்தாமலை விஷ்ணுகோயில் ஆகிய இடங்களில் எழிலுற அமைந்துள்ளன.
நுண்கலை எனப்படும் இசைக்கலையானது வளர்ச்சி பெற்ற காலம் சோழர்கள் காலமாகும்.
சோழர்கள் கி.பி. 850ல் தொடங்கி கி.பி. 1279 வரையில் சுமார் 430 ஆண்டுகள் ஆட்சி செய்தனர்.
பாண்டியப் பேரரசு
மெகஸ்தனிஸ், பிளினி, கிரேக்க எழுத்தாளர்கள், சமஸ்கிருத இலக்கண அறிஞர் கத்யாயணர் ஆகியோரது குறிப்புகளிலும், யுவான்-சுவாங், மார்க்கோபோலோ, இஸ்லாமிய வரலாற்றாளர் வாசஃப் ஆகிய வெளிநாட்டவரின் செய்தி குறிப்புகளிலும் பாண்டியரின் வரலாற்றுச் செய்திகளை அறியலாம்.
முற்காலப் பாண்டியர்கள் தமிழை வளர்க்க தமிழ்ச்சங்கங்கள் அமைத்து பெருமை பெற்றவர்கள்.
பாண்டியர்களின் தலைநகரம் மதுரை, இலச்சினை மீன் பாண்டிய மன்னன் கடுங்கோன், களப்பிரர்களை வென்று கி.பி. 6ஆம் நூற்றாண்டின் இறுதியில் பாண்டியர்களின் ஆட்சியை மலரச் செய்தார். இக்காலகட்டத்தையே முதலாம் பாண்டியப் பேரரசு காலம் என்பர்.
முதலாம் மாறவர்மன் சுந்தரப்பாண்டியன் தான் வென்ற சோழ நாட்டை மீண்டும் குலோத்துங்கனிடமே கொடுத்து விட்டதால் ‘சோணாடு வழங்கியருளிய சுந்தரப் பாண்டியன்’ என்று புகழப்பட்டார்.
முதலாம் சடையவர்மன் மகன் முதலாம் மாறவர்மன் குலசேகரன் ஆட்சியின்போது பாண்டியப் பேரரசு மேலும் வலுப்பெற்றது.
கில்ஜி மரபினருக்குப்பின் வந்த துக்ளக் மரபினர், தங்களின் ஆதிக்கத்தை தென்னிந்தியாவில் நிலைநிறுத்தி பாண்டியப் பேரரசை தங்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தனர்.
வேளாண் தொழில் செய்வோர் ‘புமி புத்திரர்கள்’ என்று அழைக்கப்பட்டனர்.
பாண்டியநாடு முத்துக்குளிக்கும் தொழிலில் சிறந்து விளங்கியது.
கொற்கை, தொண்டி ஆகியன சிறந்த துறைமுகங்களாக விளங்கின.
திருவாசகம் மாணிக்கவாசகரால் எழுதப்பட்டது. ஆண்டாள், திருப்பாவையையும்; நம்மாழ்வார், திருப்பல்லாண்டையும்; வில்லிபுத்ஷரார், மகாபாரதத்தையும்; அதிவீரராம பாண்டியன் நைடதம் என்னும் நூலையும் எழுதினர்.
சேபூர் முருகன் உலா மற்றும் இரத்தினகிரிஉலா ஆகிய நூல்களை ஸ்ரீகவிராயர் எழுதினார்.
பாண்டியர்கள் உருவாக்கிய குடைவரை கோயில் திருப்பரங்குன்றம், ஆனைமலை, கழுகுமலை, திருச்சிராப்பள்ளி, குன்றக்குடி, சித்தன்னவாசல் ஆகிய இடங்களில் உள்ளது.
ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன் காலத்து சுவரோவியத்தை, சித்தன்னவாசல் குடைவரையில் காணலாம்.
பல்லவ அரசர் சிம்மவிஷ்ணு களப்பிரர்களை வீழ்த்தி, பல்லவர் ஆட்சியை தொண்டை மண்டலத்தில் தொடங்கி வைத்தார்.
முதலாம் நரசிம்மவர்மனின் பட்டப் பெயர் வாதாபி கொண்டான் காவிரி ஆற்றின் குறுக்கே கல்லணையைக் கட்டியவர் கரிகால சோழன் முதலாம் ஆதித்த சோழனின் மகன் முதலாம் பராந்தகன், பாண்டிய மன்னரை தோற்கடித்ததால் மதுரைகொண்டான் என்ற பட்டப்பெயரைப் பெற்றார்.
பாண்டிய பேரரசானது, பாண்டிய மண்டலம் என அழைக்கப்பட்டது.