Skip to content
விஜயநகர, பாமினி அரசுகள்
டெல்லி துல்தானிய வீழ்ச்சிக்கு பிறகு முதலில் வங்காளமும், முல்தானும் வெளியேறி தமது சுதந்திரத்தை அறிவித்துக் கொண்டனர்.
தக்காணம் மற்றும் தென்னந்தியாவில் விஜயநகரம், பாமினி பேரரசு ஆகியன அரசியல் முக்கியத்துவமும் பெற்றன.
ஹரிஹரர் புக்கர் கி.பி. 1336-இல் துங்கபத்ரா ஆற்றங்கரையில் விஜயநகர அரசினை உருவாக்கினார்.
இதன் தலைநகரம் ஹம்பியாகும்.
இந்தப் பேரரசு சங்கம, சாளுவ, துளுவ, அரவீடு என்ற நான்கு முக்கிய மரபினர்களால் ஆளப்பட்டது.
கி.பி.1336ல் ஆட்சிப்பொறுப்பேற்ற முதலாம் ஹரிகரன் மைசூரையும், மதுரையையும் வென்றார்.
விஜயநகர பேரரசின் முக்கிய மன்னர்கள் இரண்டாம் ஹரிகரர், முதலாம் தேவராயர், இரண்டாம் தேவராயர், கிருஷ்ண தேவராயர் ஆகியோர் ஆவார்.
துளவ மரபைச் சேர்ந்தவர் கிருஷ்ண தேவராயர்.
‘கிருஷ்ண தேவராயர் முழுநிறைவான அரசர்’ என்று வரலாற்று அறிஞர் டோமினிக் பயஸ் குறிப்பிட்டு;ள்ளார்.
கிருஷ்ண தேவராயர் நீர்பாசன வசதிக்காக பெரிய ஏரிகளையும், வாய்க்கால்களையும் ஏற்படுத்தினார். இவர் கப்பல் கட்டுமானத்தையும் மேம்படுத்தினார்.
கிருஷ்ணதேவராயர் சிறந்த கல்விமான் ஆவார். இவரது அவையில் அஷ்டதிக்கஜங்கள் எனப்படும் எட்டு அறிஞர்கள் இடம் பெற்றிருந்தனர்.
அஷ்டதிக்கஜங்கள்: அல்லசாணி பெத்தண்ணா, நந்தி திம்மண்ணா, தெனாலிஇராமன், பட்டுமூர்த்தி, புனவீரபத்திரன், துர்ஜதி, மல்லண்ணா, மற்றும் பனாஜி சூரானா ஆகியோர்.
இவரது காலத்தில் விஜயநகரப் பேரரசின் புகழ் உச்ச நிலையை அடைந்தது.
கி.பி.1565-ல் தலைக்கோட்டை போரில் விஜயநகர பேரரசு வீழ்ந்தது.
மகாநாயக்காச்சாரியார் என்னும் மைய அரசின் அதிகாரியால் கிராம நிர்வாகங்கள் அனைத்தும் கண்காணிக்கப்பட்டன.
படைப்பிரிவில் காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை ஆகியன பெரும்பங்கு வகித்தன.
வழக்குகள் இந்து நெறிமுறைகளின் அடிப்படையில் விசாரிக்கப்பட்டன.
பெண்களின் நிலை மேம்பட்டிருந்தது. அரசியல், சமுதாயம், இலக்கியம் போன்றவற்றில் பங்கு கொண்டனர்.
ஆயுதமேந்துதல், மல்யுத்தம் தற்காப்பு கலைகளிலும் ஆர்வம் காட்டினர்.
நியுனஸ் என்கிற அறிஞர் ‘பெண் சோதிடர்கள், எழுத்தர், கணக்காளர், காவலர், மல்யுத்த வீராங்கனைகள் ஆகியோர் அரசவையில் இடம் பெற்றிருந்தனர்’ எனக்குறிப்பிட்டுள்ளார்.
குழந்தைத் திருமணமும், பலதார மணமும், உடன்கட்டை ஏறுதலும் நடைமுறையில் இருந்தன.
வெளிநாட்டுக்கப்பல் போக்குவரத்துக்கு, கோவா, டையூ, கொல்லம், கொச்சி முதலியன முக்கிய துறைமுகங்களாக விளங்கின.
கோயிற்கட்டுமானக் கலைக்கு, ஹசரா ராமசாமி கோயிலும், விட்;டலசாமி ஆலயமும் ஊலோக உருக்குக்கலை சிறப்பிற்கு கிருஷ்ணதேவராயர் சிலையும் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
வேதங்களுக்கான உரையை சாயனா எழுதினார்.
கிருஷ்ணதேவராயர் தெலுங்கில் ஆமுக்த-மால்யதா என்னும் நூலை எழுதினார். மேலும் உஷாபரிநயம், ஜாம்பவதி கல்யாணம் ஆகிய சமஸ்கிருத நூல்களையும் எழுதியுள்ளார்.
பாமினி அரசு
ஹசன்கங்கு பாமினி என்பவர் கி.பி.1347ல் இவ்வரசைத் தோற்றுவித்தார். இவர் தேவகிரியை சேர்ந்த துருக்கிய அலுவலர்.
இவரது தலைநகரம் குல்பர்கா ஆகும்.
முதலாம் முகமது ஷா சிறந்த போர் வீரரும் நிர்வாகியுமாவார்.
இரண்டாம் முகமது ஷா அமைதியை விரும்பினார். பல மசூதிகளையும், மதராஸா என்ற கல்விக்கூடங்களையும், மருத்துவமனைகளையும் கட்டினார்.
பெரோஸ்ஷா பாமினி தமது நிர்வாகத்தில் இந்துக்களுக்கும் இடமளித்தார்.
அகமது ஷா கொடுங்கோலனாகவும், இரக்கமற்றவனாகவும் இருந்தார். தமது தலைநகரை குல்பர்காவிலிருந்து பீடாருக்கு மாற்றினார்.
முகமது கவான் நிதித்துறையை சீரமைத்தார். வரிமுறையில் மாற்றங்களை உண்டாக்கினார். படைத்துறையில் ஊழலை ஒழித்து ஒழுங்கு செய்தார்.
மூன்றாம் முகமது ஷா பட்டமேற்ற போது அவருக்கு வயது ஒன்பது. அவருக்கு முகமது கவான் பாதுகாவலராக இருந்து ஆட்சி செய்தார்.
இக்காலத்தில் பாமினி அரசின் எல்லையாக இரு கடல்களும், தபதி-துங்கபத்ரா நதிகளும் இருந்தன.
பாமினி அரசு ஐந்து சிறு நாடுகளாக சிதறுண்டது. அவை பீஜப்புர், அகமதுநகர், பீரார், பீடார், கோல்கொண்டா ஆகியவனவாகும்.
பாமினி அரசின் நிர்வாகம் நிலமானிய முறையில் அமைந்தது.
உருதுமொழி வளர்ச்சியுற்றது.
முகமதுகவான் கட்டிய மதரசா மற்றும் பீஜப்புரில் உள்ள கோல்கும் பாஸ் கட்டிடம் ஆகியன அவர்களின் கட்டிடகலைக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
பீஜப்புரில் உள்ள கோல்கும்பா கட்டடம் ‘முணுமுணுக்கும் அரங்கம்’ என்ற சிறப்பை பெற்றது.
விஜயநகர பேரரசு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு கி.பி.1336.
ஹரிகரர், புக்கர் சகோதரர்கள் பணியாற்றிய ஹொய்சாள அரசர் மூன்றாம் வீர பல்லாளர் ஆவார்.
விஜய நகர பேரரசின் புகழ்மிக்க அரசர் கிருஷ்ண தேவராயர் ஆவார்.
1347ல் தக்காணத்தில் ஏற்படுத்தப்பட்ட முஸ்லிம் பேரரசு பாமினி மூன்றாம் முகமது ஷா வின் பாதுகாவலராக முகமது கவான் இருந்தார்.
Like this: Like Loading...
Related
Post navigation