இடைக்காலத்தில் தோன்றிய பக்தி இயக்கமானது இந்தியா முழுவதும் பரவி, பல நூற்றாண்டுகளுக்கு இம்மண்ணில் நின்று நிலவியது.
தென்னிந்தியாவில் ஆட்சி செய்த பண்டைய அரசுகளான, பல்லவர், சோழர், பாண்டியர் காலத்தில் மக்கள் சைவம், வைணவம் ஆகிய சமய வழிபாடுகளை கொண்டிருந்தனர்.
பக்தி இயக்கம் முதலில் தென்னிந்தியாவிலேயே தொடங்கப்பட்டது. கபீர் அதனை மக்களிடையே பிரபலமடையச் செய்தார்.
சைவ சமயத்தை பரப்பிய 63 நாயன்மார்களில் திருநாவுக்கரசர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் முதன்மையானவர்களாவர்.
முதலில் சமண சமயத்தை சார்ந்திருந்த திருநாவுக்கரசர் என்கிற அப்பர் தனது தமக்கை திலகவதி அம்மையாரின் தாக்கத்தினால் சிவபக்தரானார்.
இவர் 49000-க்கும் மேற்பட்ட பதிகங்கங்களை எழுதியுள்ளார். எனினும் 311 பதிகங்களே இதுவரை கிடைத்துள்ளன.
ஒரே கடவுள் என்ற கோட்பாட்டையுடைய மாணிக்கவாசகர் திருவாசகம் என்கிற நூலை எழுதியுள்ளார்.
சம்பந்தர் 16,000 பதிகங்களை பாடினார். எனினும் 384 பதிகங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
சேக்கிழாரின் பெரியபுராணம் (நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்று நூல்) மற்றும் தேவாரம், திருவாசகம் திருமறை ஆகிய நூல்கள் இக்காலக்கட்டத்தில் எழுதப்பட்ட முக்கிய நூல்கள் ஆகும்.
இந்நூல்களில் தத்துவம், இலக்கியம், பக்தி ஆகியவை நிறைந்து காணப்படுகின்றன.
ஆழ்வார்களில் நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
ஆழ்வார்கள் பாடிய சுமார் 4000 பாடல்களை நாதமுனி என்பார் நாலாயிரத் திவ்யபிரபந்தம் என்னும் நூலாகத் தொகுத்தார்.
பழங்காலத்தில் தென்னிந்தியாவில் பக்தி இயக்கத்தை தொடங்கி வைத்தவர் சங்கராச்சாரியார். இவர் கேரளாவில் காலடி என்ற இடத்தில் பிறந்தார்.
இராமானுஜர் பக்தி இயக்கத்தை பரப்பியவர்களில் குறிப்பிடத்தக்கவர்.
கி.பி.12ஆம் வாழ்ந்த வைணவப்பெரியார் ஆவார்.
பக்தியின் மூலம் முக்தியைப் பெறலாம் என்பது இவரது கொள்கை.
கீழ்க்குடிகள் வைணவ மார்க்கத்தை பின்பற்றுவதை இவர் வரவேற்றார்.
இராமானுஜரின் சீடர் இராமானந்தர் ஆவார்.
வல்லபாச்சாரியார், கிருஷ்ணரை வழிபட்டார்.
சிவனை வழிபட்ட பசவரை பின்பற்றியோர் வீரசைவர் அல்லது லிங்காயத்துகள் எனப்பட்டனர்.
சைதன்யர், கிருஷ்ண வழிபாட்டை பிரபலப்படுத்தினார்.
கபீர், இராமானந்தரின் சீடராவார். இந்து முஸ்லீம் ஒற்றுமையை முதன்முதலாக வலியுறுத்தியனார்.
இவரைப்பின்பற்றிறோர் கபீர்பந்த் எனப்பட்டனர்.
கபீரின் போதனைகளின் தொகுப்பு பிஜகா எனப்படுகிறது.
இவரது பாடல்களில் தோகா வகைப்பாடல்கள் மக்களிடையே தாக்கத்தையும் ஈர்ப்பினையும் ஏற்படுத்தின.
கபீர் இராமானும், இரகீமும் ஒருவரே என்றார். சிலை வழிபாட்டையும், சாதிமுறைகளையும் இவர் கண்டித்தார்.
குருநானக் சீக்கிய மதத்தை நிறுவினார். இவர் கபீரின் உற்ற சீடர் ஆவார்.
மேவார் நாட்டு மன்னர் ரதோர் ரத்ணாசிங் என்பவரின் மகளும், உதய்புர் மன்னரின் மனைவியுமான மீராபாய் கி.பி.1498ல் பிறந்தார்.
கிருஷ்ணரின் பக்தையான இவர் பக்தியியக்கத்தின் முக்கிய ஷணாக விளங்கினார். பஜன் வகையிலமைந்த இவரது பாடல்கள் இராஜஸ்தான் பகுதியில் புகழ்பெற்றவையாகும்.
இக்காலக்கட்டத்தில் பல துறவிகள் மகாராட்டிர பகுதியில் உருவாயினர். ஞானதேவர், நாமதேவர், ஏக்நாத், துக்காராம், துளசிதாசர், ராமதாசர் ஆகியோர் அதில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.
ஞானதேவர் பகவத்கீதைக்கு எழுதிய உரை நூலானது ஞானேஸ்வரி எனப்பட்டது.
ஏக்நாத் சாதிமுறையை எதிர்த்தார்.
குருராமதாசர், தசபோதா என்ற நூலையும், துளசிதாசர், இராமசரிதமானஸ் என்ற நூலையும் எழுதினர்.
பாரசீகத்தில் தொடங்கப்பட்ட சூஃபி இயக்கம் என்கின்ற இஸ்லாமிய சீர்திருத்த இயக்கம் கி.பி. 12ம் நூற்றாண்டில் இந்தியாவிலும் பரவியது.
முகமது நபியே உண்மையானவர் அவரது கோட்பாடுகளே முழுமையானது என்று சூஃபி இயக்கம் கருதியது.
சூஃபி இயக்கத்தினர் தம்மை பல குழுக்களாக வகுத்து கொண்டனர். குழு தலைவர் அரபி மொழியில் nயூக் என்றும் பாரசீக மொழியில் பீர் அல்லது முர்ஷித் என்றும் அழைக்கப்பட்டனர்.
இக்குழுக்கள் சில்சிலா என்ற 12 தொகுப்புகளாக செயல்பட்டனர். ‘சில்சிலா’ என்றால் தொடர் சங்கிலி என்று பொருள்.
சூஃப் என்றால் முரட்டு கம்பளி ஆடையை அணிந்து, எளிமையை வெளிப்படுத்தும் துறவி என்பது பொருள்.
குவாஜா மொய்ன்-உத்;-தீன்-சிஸ்டி கி.பி.1192ல் இந்தியாவுக்கு வந்து அஜ்மீரில் தங்கியிருந்தார். மக்கள் இவரை ஏழைகளின் காப்பாளர் என்ற பொருளில் ‘கரிப்நவாஜ்’ என்று அன்புடன் அழைத்தனர்.
குவாஜா மொய்ன்-உத்தீன்-சிஸ்டியின் சீடர் பாபாஃப்ரித் ஆவார். இவர் பஞ்சாபி மொழியில் பல பாடல்களை எழுதினார். டெல்லி சுல்தானாக விளங்கிய பால்பன், பாபாஃபரித்தின் பக்தர் ஆவார்.
நிஜாம்-உத்-தீன்-அவுலியா ஒரு புகழ் பெற்ற இஸ்லாமியத் துறவியாவார். இவரை கடவுளின் அன்பைப் பெற்றவர் என்று பொருள்படும் மெஹபூம்-இ-இலாஹி என புகழ்ந்தனர்.
கி.பி. 16ஆம் நூற்றாண்டை சேர்ந்த நாகூர் ஆண்டவர், மீரான் சாகிப் என்றும் குவாதிர் வாலி என்றும் மக்களால் புகழப்பட்டார். தமிழகத்திலுள்ள, நாகூரில் இவரின் கல்லறை உள்ளது.
நாகூரில் நடைபெறும் கந்ஷரி உருஸ் என்னும் விழாவில் அனைத்து மதத்தினரும் பங்கேற்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
nயூக் அல்லது துறவியின் கல்லறையானது (தர்கா) அவரைப் பின்பற்றுவோரது வழிபாட்டு தலமாக விளங்குகிறது.
சூஃபி இயக்கங்கள், மதவாதிகளின் கட்டுப்பாட்டிலிருந்து மக்களை பிரித்து எளிமைப்படுத்தின.
18 சூஃபி இயக்கத்துறவிகள், கடவுள் ஒருவரே என்றும், மக்கள் அனைவரும் அவரது பிள்ளைகள் என்றும் போதித்தனர்.
பக்தி, சூஃபி இயக்கத்துறவிகளால், இந்தி, பஞ்சாபி, வங்காளம், தெலுங்கு, கன்னடம், தமிழ் ஆகிய வட்டார மொழிகளின் இலக்கியங்கள் மேலும் வளர்ச்சியடைந்தன.
இடைக்காலத்தில் தோன்றிய பக்தி இயக்கமானது இந்தியா முழுவதும் பரவியது.
சங்கராச்சாரியார் கேரளாவில் காலடி என்ற இடத்தில் பிறந்தார்.
குருநானக் நிறுவிய மதம் சீக்கியமதம் துளசிதாசர் எழுதிய நூல் இராசரிதமானஸ் சூஃபி இயக்கம் ஆரம்பமான இடம் பாரசீகம்