9TH தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்

Table of Contents

9TH தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்

9TH தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்

  • .மு மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்பே தமிழ் பண்பாடு உருவாகி விட்டது.
  • தமிழகத்து வணிகர்களும் கடலோடிகளும் கடல் கடந்த நாடுகளுடன் வணிகத் தொடர்புகளையும் பண்பாட்டுத் தொடர்புகளையும் கொண்டிருந்தனர்.
தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்
9TH தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்

செவ்வியல் தமிழ் இலக்கியங்கள்

  • தமிழின் பழமையான இலக்கண நூல் = தொல்காப்பியம்.
  • தொல்காப்பியத்தின் எந்த பகுதி மக்களின் சமூக வாழ்க்கைக்கான இலக்கணத்தை கூறுகிறது = மூன்றாவது பகுதி.
  • பதினெண்மேல்கணக்கு நூல்கள் = பத்துப்பாட்டு + எட்டுத்தொகை நூல்கள்.
  • தமிழில் தோன்றிய இலக்கியங்களில் காலத்தால் முற்பட்ட இலக்கியங்கள் = பதினெண் மேல்கணக்கு நூல்கள்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

TNPSC WINNERS

எட்டுத்தொகை நூல்கள் யாவை

  1. நற்றிணை
  2. குறுந்தொகை
  3. பரிபாடல்
  4. பதிற்றுப்பத்து
  5. ஐங்குறுநூறு
  6. கலித்தொகை
  7. அகநானூறு
  8. புறநானூறு

பத்துப்பாட்டு நூல்கள் யாவை

  1. திருமுருகாற்றுப்படை
  2. பொருநராற்றுப்படை
  3. பெரும்பாணாற்றுப்படை
  4. சிறுபாணாற்றுப்படை
  5. முல்லைப்பாட்டு
  6. நெடுநல்வாடை
  7. மதுரைக் காஞ்சி
  8. குறிஞ்சிப் பாட்டு
  9. பட்டினப்பாலை
  10. மலைப்படுகடாம்

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்

  • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் முதன்மையானது = திருவள்ளுவரின் திருக்குறள்.
  • திருக்குறளில் உள்ள பிரிவுகளின் எண்ணிக்கை = மூன்று.

ஐம்பெருங்காப்பியங்கள் யாவை

  1. சிலப்பதிகாரம்
  2. மணிமேகலை
  3. சீவக சிந்தாமணி
  4. வளையாபதி
  5. குண்டலகேசி
9TH தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்
9TH தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்

தமிழ் பிராமி கல்வெட்டுகள்

  • தமிழ் பிராமி கல்வெட்டுகள் காணப்படும் இடங்கள் = கற்பாறைகள், குகை வாழிடங்கள் (சமணத் துறவிகள் வாழ்ந்த வாழிடங்கள்).
  • தமிழ் பிராமி கல்வெட்டுகள் காணப்படும் குகை வாழிடங்கள் = மாங்குளம், முத்துப்பட்டி, புகலூர், அரச்சலூர், கொங்கர்புளியங்குளம், ஜம்பை, மதுரை.
  • பாறைப்படுக்கை உள்ள இடம் = கொங்கர்புளியங்குளம்.
  • பெரும்பாலான குகை வாழிடங்கள் _________ வழிகளில் அமைந்துள்ளன? = வணிக.

நடுகற்கள்

  • வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவாக நடுகற்கள் நடப்பட்டன.
  • முல்லை நில மக்களின் சிறப்பான செல்வ வளம் = கால்நடைகள் (ஆநிரை).
  • நடுகற்கள் நடப்படுவதற்கான வழிமுறைகள் குறித்து விரிவாக கூறும் சங்க இலக்கிய நூல் = தொல்காப்பியம்.
  • தமிழ்நாட்டில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட நடுகற்கள் காணப்படும் இடம் = தேனி மாவட்டத்தின் புலிமான் கோம்பை (புள்ளிமான் கோம்பை) மற்றும் தாதப்பட்டி, புதுக்கோட்டை மாவட்டத்தின் பொற்பனைக்கோட்டை.
  • சங்ககால நடுகற்களில் உருவம் பொறிக்கப்படவில்லை.
  • பல்லவர் காலத்தில் நடப்பட்ட நடுகற்கள் அதிகம் காணப்படும் இடம் = திருவண்ணாமலை மாவட்டத்தின் செங்கம். இந்த நடுகற்களில் வீரர்களின் பெயரும், உருவமும் பொறிக்கப்பட்டுள்ளன.
9TH தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்
9TH தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்

புலிமான் கோம்பை நடுகற்கள்

  • தென் மாவட்டத்தின் வைகை ஆற்றுப் பள்ளத்தாக்கில் அமைந்த ஊர் = புலிமான்கோம்பை.
  • புலிமான்கோம்பையில் கண்டெடுக்கப்பட்ட நடுகல்லில் “கூடல்ஊர் ஆகோள் பெடு தீயன் அந்தவன் கல்” என்று பொறிக்கப்பட்டுள்ளது.
  • “கூடல்ஊர் ஆகோள் பெடு தீயன் அந்தவன் கல்” என்பதன் பொருள் = கூடலூரில் ஆநிரை கவர்ந்த போது நடந்த பூசலில் கொல்லப்பட்ட தீயன் அந்தவனின் கல்”.
9TH தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்
9TH தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்

சுடுமண் கால எழுத்துப் பொறிப்புகள்

  • சுடுமண் கால எழுத்துப் பொறிப்புகளின் காலம் = வரலாற்றின் தொடக்க காலம்.
  • தமிழ்நாட்டில் சுடுமண் பொறிப்புகள் காணப்படும் இடங்கள் = அரிக்கமேடு, அழகன்குளம், கொடுமணல், கீழடி.
  • எந்த வெளிநாடுகளில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட சுடுமண் கலங்கள் கிடைத்துள்ளன = பெரோனிகே (எகிப்து), குசேர் அல் காதிம் (எகிப்து), கோர் ரோரி (ஓமன்).
  • தமிழ்நாட்டில் கப்பல் உருவம் பொறிக்கப்பட்ட சுடுமண் கலம் கிடைத்த இடம் = அழகன்குளம்.
  • தமிழ்நாட்டில் சங்ககால மக்கள் பயன்படுத்திய உறைக்கிணறு கண்டுபிடிக்கப்பட்ட இடம் = அரிக்கமேடு.
  • சங்ககால மக்களின் வாழ்க்கை முறைக்கான பலவகையான தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ள இடங்கள் = அரிக்கமேடு, அழகன்குளம், கொடுமணல், கீழடி, உறையூர், கரூர், காஞ்சிபுரம், காவிரிப்பூம்பட்டினம், கொற்கை, வசவசமுத்திரம்.
  • கேரளாவின் எந்த இடத்தில் சங்ககால மக்களின் வாழ்க்கை முறைக்கான பலவகையான தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன = பட்டணம்.
  • 10 மி.மீ அளவு கொண்ட செதுக்கு வேலைப்பாடுகள் கொண்ட அணிகலன் கிடைத்த இடம் = பட்டணம் (கேரளா).
9TH தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்
9TH தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்

அரிக்கமேடு

  • புதுச்சேரிக்கு அருகே உள்ள அரிக்கமேடு = ஒரு சங்ககால துறைமுக பட்டிணம் ஆகும்.
  • சரக்குக் கிடங்கு, தொட்டிகள், உறை கிணறுகள், தெரு ஆகியவற்றை உள்ளடக்கிய திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட நகரம் அரிக்கமேட்டில் இருந்ததை தொல்லியல் அறிஞர்கள் உறுதி செய்துள்ளனர்.
  • 9TH தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்

தொல்லியல் சட்டங்கள்

  • இந்திய புதையல் சட்டம் 1878.
  • பழங்காலப் பொருட்கள் மற்றும் கலைக் கருவூலங்கள் சட்டம் 1972.
  • பழமை வாய்ந்த நினைவுச்சின்னங்கள், தொல்லியல் ஆய்வுக் களங்கள் மற்றும் எஞ்சியப் பொருட்கள் சட்டம் 1958.

பழங்கால நாணயங்கள்

  • முதன் முதலாக செலவானிக்கு உரிய பொருளாக நாணயங்கள் புழக்கத்திற்கு வந்த காலம் = சங்க காலம்.
  • தமிழ்நாட்டில் முத்திரை பொறிக்கப்பட்ட நாணயங்கள் கிடைத்துள்ள இடங்கள் = கொடுமணல், போடிநாயக்கனூர்.
  • தமிழ்நாட்டின் எந்த மண்டலத்தில் ரோமானிய நாணயங்கள் அதிகளவு கிடைத்துள்ளன = கோயம்புத்தூர் மண்டலம்.

அர்த்த சாஸ்திரம்

  • அர்த்த சாஸ்திரம் நூலின் ஆசிரியர் = கௌடில்யர் (சாணக்கியர்).
  • “பாண்டிய காவாடகா” என்ற குறிப்பு உள்ள நூல் = சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம்.
  • பாண்டிய காவாடகா என்பதன் பொருள் = பாண்டிய நாட்டின் முத்துக்கள், கடல் பொருட்கள்.

மகாவம்சம்

  • இலங்கை புத்த நூல்.
  • எந்த மொழியில் மகாவம்சம் நூல் எழுதப்பட்டது = பாலி.
  • தென்னிந்தியா, தமிழ்நாட்டு வணிகர்கள் பற்றி குறிப்பிட்டுள்ள நூல் = மகாவம்சம்.
  • தமிழ்நாட்டில் இருந்து இலங்கை சென்று வாணிபம் செய்த தகவலை குறிப்பிடும் நூல் = மகாவம்சம்.
  • தமிழ்நாட்டில் இருந்த “குதிரை வணிகர்கள்” குறித்து குறிப்பிட்டுள்ள நூல் = மகாவம்சம்.
  • 9TH தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்

எரித்திரியன் கடலின் பெரிப்ளிஸ்

  • கிரேக்க நூல்.
  • “பெரிப்ளஸ்” என்பதன் பொருள் = கடல் வழிகாட்டி.
  • தமிழகத்தின் முசிறி, தொண்டி, குமரி, கொற்கை ஆகிய துறைமுகங்கள் பற்றி குறிப்பிட்டுள்ள நூல் = எரித்திரியன் கடலின் பெரிப்ளிஸ்.
  • சேர, சோழ, பாண்டிய அரசர்கள் பற்றிய குறிப்புகள் காணப்படும் வெளிநாட்டு நூல் = எரித்திரியன் கடலின் பெரிப்ளிஸ்.
9TH தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்
9TH தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்

பிளினியின் “இயற்கை வரலாறு”

  • ரோமானியரான “மூத்த பிளினி” எழுதிய நூல் = இயற்கை வரலாறு.
  • லத்தின் மொழியில் எழுதப்பட்டுள்ள நூல் இது.
  • இந்தியாவுடன் நடைபெற்ற மிளகு வணிகம் குறித்து பதிவு செய்துள்ள நூல் = பிளினியின் “இயற்கை வரலாறு”.
  • சரியான பருவக் காற்று வீசினால் ஆப்ரிக்காவின் ஓசலிஸ் துறைமுகத்தில் இருந்து நாற்பது நாட்களில் இந்தியாவை அடைந்து விடலாம் என குறிப்பிட்டவர் = பிளினி.
  • கேரளக் கடற்கரையில் இருந்த “பக்காரே” துறைமுகத்தை மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததை தனது நூலில் குறிப்பிட்டுள்ளார் மூத்த பிளினி.
  • இந்தியாவுடன் நடைபெற்ற மிளகு வணிகத்தால் ரோமானிய செல்வங்கள் கரைந்து போகின என்று “இயற்கை வரலாறு” நூலில் குறிப்பிட்டுள்ளார் மூத்த பிளினி.
  • 9TH தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்

தாலமியின் புவியியல்

  • இரண்டாம் நூற்றாண்டின் ரோமானியப் பேரரசின் புவியியல் அமைப்பை நிலப்படமாக எழுதியவர் = தாலமி.
  • “புவியியல்” என்னும் நூலின் ஆசிரியர் = தாலமி.
  • தாலமியின் “புவியியல்” நூலில் குறிப்பிடப்பட்டுள்ள பண்டைய தமிழக துறைமுக நகரங்கள் = காவிரிப்பூம்பட்டினம் (Khaberis Emporium), கொற்கை (Korkoi), கன்னியாகுமரி (Komaria), முசிறி (Muziris).
9TH தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்
9TH தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்

பியூட்டிங்கேரியன் அட்டவணை

  • ரோமானியப் பேரரசின் சாலைகள் குறித்த விளக்கமான நிலப்படம் = பியூட்டிங்கேரியன் அட்டவணை.
  • பியூட்டிங்கேரியன் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள பண்டைய தமிழக துறைமுக நகரம் = முசிறி.
  • பியூட்டிங்கேரியன் அட்டவணையில் இலங்கை எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது = Taprobane.

வியன்னா பாப்பிரஸ்

  • வியன்னா பாப்பிரஸ் எந்த நாட்டின் ஆவணம் = கிரேக்கம்.
  • முசிறியில் நடைபெற்ற வணிகம் தொடர்பான குறிப்புகள் எதில் உள்ளது = வியன்னா பாப்பிரஸ்.
  • வணிகர்களுக்கு இடையேயான எழுத்துப்பூர்வமான உடன்படிக்கை = வியன்னா பாப்பிரஸ்.
  • வியன்னா பாப்பிரஸ் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ரோமானியக் கப்பல் = ஹெர்மாபோலோன் (Hermapollon).
  • 9TH தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்

சங்க காலம்

  • சங்க காலம் என்பது = வரலாற்றுத் தொடக்கக் காலம்.
  • சங்க காலம் என்பது = கி.மு மூன்றாம் நூற்றாண்டில் இருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரை.
  • சங்க கால செய்யுள்கள் எதன் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளன = திணை.

ஐவகை நிலங்கள்

  • மலையும் மலை சார்ந்த இடம் = குறிஞ்சி.
  • காடும் காடு சார்ந்த இடமும் = முல்லை.
  • வயலும் வயல்வெளி சார்ந்த இடமும் = மருதம்.
  • கடலும் கடல் சார்ந்த இடமும் = நெய்தல்.
  • வறண்ட நிலப்பகுதி = பாலை.
9TH தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்
9TH தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்

சேரர்கள்

  • அசோகரின் கல்வெட்டுகளில் கேரளபுத்திரர்கள் என்று குறிக்கப்பட்டுள்ளவர்கள் = சேரர்கள்.
  • சேரர்களின் தலைநகரம் = வஞ்சி.
  • சேரர்களின் துறைமுகம் = முசிறி, தொண்டி.
  • சேரர்களின் மாலை = பனம்பூ.
  • சேரர்களின் இலச்சினை = வில்லும் அம்பும்.
  • சேர அரசர்கள் பற்றியும், அவர்களின் நாட்டின் எல்லைகளை பற்றியும் கூறும் சங்க இலக்கிய நூல் = பதிற்றுப்பத்து.
  • எங்கு கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளில் சேர மன்னர்களின் மூன்று தலைமுறையினர் பற்றிய குறிப்புகள் உள்ளன = கரூர் அருகே புகளூர்.
  • சேரர்களின் நாணயம் அதிகளவு கிடைத்துள்ள இடம் = கரூர்.
  • சேரர்கள் நாணயத்தில் இடம் பெற்றிருந்த உருவங்கள் = ஒருபுறத்தில் யானையும், மற்றொரு புறத்தில் அங்குசமும், வில்லும் அம்பும்.

சோழர்கள்

  • சோழர்களின் தலைநகரம் = உறையூர்.
  • காவிரி ஆறு வங்கக்கடலில் கலக்கும் இடம் = காவிரிப்பூம்பட்டினம்.
  • சோழர்களின் துறைமுக நகரம் = காவிரிப்பூம்பட்டினம்.
  • சோழர்களின் இலச்சினை = புலி.
  • காவிரிபூம்பட்டினம் குறித்து எழுதப்பட்ட சங்க கால நூல் = பட்டினப்பாலை.
  • பட்டினப்பாலை நூலின் ஆசிரியர் = கடியலூர் உருத்திரங்கண்ணனார்.
  • சதுர வடிவிலான செப்பு நாணயங்களை வெளியிட்ட தமிழ் மன்னர்கள் = சோழர்கள்.
  • சோழர்கள் வெளியிட்ட நாணயத்தில் இடம்பெற்றிருந்த உருவங்கள் = முன்புறத்தில் புலி உருவம். பின்புறத்தில் யானை மற்றும் புனிதச் சின்னங்கள்.
  • 9TH தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்

பாண்டியர்கள்

  • மாங்குளத்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் பிராமி கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் சங்ககால பாண்டிய அரசன் = பாண்டியன் நெடுஞ்செழியன்.
  • பாண்டியர்களின் தலைநகரம் = மதுரை.
  • பாண்டியர்களின் இலச்சினை = மீன்.
9TH தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்
9TH தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்

சங்ககாலச் சமூகம்

  • சங்க காலத்தில் குலம் அடிப்படையிலான சமுதாயங்கள் தோன்றின.
  • சாதி அமைப்புகள் தமிழகத்தில் இல்லை.
  • ஐவகை நிலம் மற்றும் செய்யும் தொழில் அடிப்படையில் மக்கள் குழுக்களாகப் காணப்பட்டனர்.
  • சங்ககாலத்தில் பெண்களின் நிலை உயர்வாகவே இருந்தது.

சங்ககாலப் பொருளாதாரம்

  • வேளாண்மை முதல் இடத்தில் இருந்தது.
  • தமிழகத்தில் எங்கு நடைபெற்ற அகழாய்வுகளில் “தாழிகளுடன் கூடிய நெல்லும்” கிடைத்துள்ளது = ஆதிச்சநல்லூர், பொருந்தல்.
  • “புனம்” என்றால் என்ன = சங்ககாலத்தில் வனப்பகுதிகளில் இடம்விட்டு இடம்விட்டு இடம் மாறி சாகுபடி செய்யும் முறை “புனம்” எனப்பட்டது.
  • “கலம் செய்கோ” என்றால் என்ன = மக்களின் அன்றாட வாழ்விற்கு தேவையான மண் பாண்டங்களை செய்வோர் “கலம் செய்கோ” எனப்பட்டனர்.
  • தமிழகத்தில் எங்கு நடைபெற்ற அகழாய்வில் “இரும்பு உருக்கு ஆலைகள்” கண்டுபிடிக்கப் இடங்கள் = கொடுமணல், குட்டூர்.
  • சங்க காலத்தில் இரும்பினால் செய்யபப்ட்ட வாள், கத்தி, ஈட்டி போன்ற கருவிகள் தமிழகத்தில் எங்கு கிடைத்துள்ளது = புதுச்சேரி.
  • சங்க காலத்தில் “பொன்னை” (தங்கம்) உருக்கும் ஆலை இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ள இடம் = கேரளத்தின் பட்டணம்.
  • பெருங்கற்காலத்தை சேர்ந்த அகழாய்வு களங்கள் = சுத்துக்கேணி, ஆதிச்சநல்லூர், கொடுமணல்.
  • சங்க காலத்தில் கண்ணாடி மணிகள் செய்யும் தொழிலகங்கள் இருந்த இடம் = அரிக்கமேடு மற்றும் கடலூருக்கு அருகே குடிக்காடு.
  • எங்கு நடைப்பெற்ற அகழாய்வின் பொழுது “முத்து” கிடைத்துள்ளது = கீழடி.
  • நெல்மணிகளை பதித்து அடையாளமிட்ட சுடுமண்ணில் செய்யபப்ட்ட அச்சு எங்கு கிடைத்துள்ளது = கீழடி.
  • 9TH தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்

சங்ககால வணிகம்

  • சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட நூல் நூற்கும் கதிர்களும் துண்டுத் துணிகளும் கிடைத்துள்ள இடங்கள் = கொடுமணல் மற்றும் கேரளத்தின் பட்டணம்.
  • தமிழகத்தில் துணிகள் நெய்யப்பட்டது குறித்து தகவல்களை பதிவு செய்துள்ள வெளிநாட்டு குறிப்பு = எரித்திரியன் கடலின் பெரிப்ளிஸ்.
  • செம்மணிக்கற்கள் பதித்த வெண்கலத்தால் ஆன புலி பொம்மை கிடைத்த இடம் = கொடுமணல்.
  • தமிழகத்தில் பெருங்கற்காலத்தை சேர்ந்த வெண்கலக் கிண்ணம் கிடைத்த இடம் = புதுச்சேரி (ஆரோவில்).
  • தமிழகத்தில் எங்கு பண்டைய கால கண்ணாடி மணிகள் கிடைக்கப்பெற்றுள்ளது = பொருந்தல்.
  • தமிழ் பிராமி எழுத்துக்களில் “வணிகத்தை” குறிக்கும் சொற்கள் = வணிகன், நிகமா.
  • உப்பு வணிகர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் = உமணர்கள்.
  • கடற்பயணத்திற்கு உதவிய கப்பல்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன = கலம், பஃறி, ஓடம், தோணி, தெப்பம், நாவாய்.
  • நன்கு வடிவமைக்கப்பட்ட யவனர்களின் கப்பல்தங்கம், பிற உலோகக் காசுகளுடன் முசிறித் துறைமுகத்திற்கு வந்த மிளகை ஏற்றிச் சென்றதாக குறிப்பிட்டுள்ள சங்க இலக்கிய நூல் = அகநானூற்றின் 149 வது செய்யுள்.
  • எந்த வேளிர் அரசரின் நாணயங்கள் மிக அதிகளவு கிடைத்துள்ளன = மலையமான் காரி.
9TH தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்
9TH தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்

யவனர்கள்

  • கிரேக்க, ரோமானிய, மேற்கு ஆசிய மக்கள் உள்ளிட்ட மேற்கத்தியர்கள் “யவனர்” என்று அழைக்கப்பட்டனர்.
  • யவனர் என்னும் சொல் எங்கிருந்து வந்தது = கிரேக்கப் பகுதியான “அயோனியா” என்பதில் இருந்து.
  • 9TH தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்

தமிழ்நாட்டில் இருந்து செங்கடல் கரைக்கு

  • எந்த துறைமுகத்தில் ஏழரை கிலோ மிளகு இருந்த இந்தியப் பானையும், தேக்கு மரப்பலகை துண்டுகளும், தமிழ் பிராமி எழுத்துகள் பொறித்த (தமிழக) பானை ஓடு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது = செங்கடல் கடற்கரையில் உள்ள “பெர்னிகே” துறைமுகம்.
  • மிளகு இருந்த தமிழகப் பானைகள் எங்கு கண்டுக்கப்பட்டன = செங்கடல் கடற்கரையில் உள்ள “பெர்னிகே” துறைமுகம்.
  • எந்த துறைமுகத்தில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட “மூன்று சுடுமண் பாண்டத் துண்டுகள்” கண்டெடுக்கப்பட்டது = செங்கடல் கடற்கரையில் உள்ள “குசேர் அல் காதிம்” துறைமுகம்.
  • எந்த துறைமுகத்தில் பனை ஓறி, கண்ணன் (கணன்), சாத்தன் (சாதன்) என்று தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட சுடுமண் பாண்டத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன = செங்கடல் கடற்கரையில் உள்ள “குசேர் அல் காதிம்” துறைமுகம்.
  • கண்ணன் (கணன்) எனப் பொறிக்கப்பட்ட சுடுமண் பாண்டத் துண்டு எங்கு கண்டெடுக்கப்பட்டது = செங்கடல் கடற்கரையில் உள்ள “குசேர் அல் காதிம்” துறைமுகம்.
  • சாத்தன் (சாதன்) எனப் பொறிக்கப்பட்ட சுடுமண் பாண்டத் துண்டு எங்கு கண்டெடுக்கப்பட்டது = செங்கடல் கடற்கரையில் உள்ள “குசேர் அல் காதிம்” துறைமுகம்.
9TH தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்
9TH தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்

பெரும் பத்தன் கல்

  • “பெரும் பத்தன் கல்” என எழுதப்பட்டுள்ள அறிய கல் எங்கு கண்டெடுக்கப்பட்டது = தாய்லாந்து நாட்டின் “குவான் லுக் பாட்” என்னுமிடத்தில்.
  • பெரும்பத்தன் ஒரு பொற்கொல்லராக இருக்க வேண்டும் என்றும், இக்கள் தங்கத்தின் தரத்தை அறிய உதவும் உரைகல் எனவும் கூறப்படுகிறது.
  • 9TH தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்

சங்ககால நகரங்களின் தோற்றம்

  • சங்க காலத்தில் கிழக்கு கடற்கரையில் அமைந்த முக்கிய துறைமுக நகரங்கள் = அரிக்கமேடு, காவிரிப்பூம்பட்டினம், அழகன்குளம், கொற்கை, பட்டணம் (கேரளா).
  • சங்ககாலத்தில் உள்நாட்டு வணிக மையங்களாக அமைந்த முக்கிய நகரங்கள் = காஞ்சிபுரம், உறையூர், கரூர், மதுரை, கொடுமணல்.
9TH தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்
9TH தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்

கொடுமணல்

  • கொடுமணல் பகுதி தமிழ்நாட்டின் ஈரோடுக்கு அருகில் உள்ளது.
  • கொடுமணல் பற்றி குறிப்பிட்டுள்ள சங்க இலக்கிய நூல் = பதிற்றுப்பத்து.
  • பெருங்கற்கால முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ள இடம் = கொடுமணல்.
  • தமிழகத்தில் எங்கு குதிரைச் சேணத்தில் பயன்படும் இரும்பு வளையங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது = கொடுமணல்.
  • சங்கு வேலைப்பாடுகள் அமைந்த வளையல்கள் எங்கு கிடைத்துள்ளன = கொடுமணல்.
  • தமிழகத்தில் எங்கு தமிழ் பிராமி எழுத்துக்கள் கொண்டு குடுவை கண்டெடுக்கப்பட்டது = கொடுமணல்.
  • செம்மணிக்கல்லால் ஆன மணிகள் எங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது = கொடுமணல்.
  • சங்க கால மனிதனின் எலும்புக்கூடு எங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது = கொடுமணல்.
9TH தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்
9TH தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்

கீழடி நாகரிகம்

  • கீழடி எங்குள்ளது = மதுரை அருகே சிலைமான் என்னும் ஊருக்கு அருகில்.
  • எந்த நதிக்கரையில் கீழடி நகரம் அமைந்துல்லதுஹ் = வைகை நதி.
  • கீழடியில் எங்கு அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டது = பள்ளிச் சந்தைத்திடல்.
  • எங்கு நடைபெற்ற அகழாய்வில் செங்கல் கட்டுமானங்கள் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளது = கீழடி.
  • எங்கு நடைபெற்ற அகழாய்வில் கண்ணுக்கு மை தீட்டும் செப்புக் கம்பி கிடைத்துள்ளது = கீழடி.
  • நடைபெற்ற அகழாய்வில் படிகத்தால் ஆன காதணிகள் கிடைத்துள்ளது = கீழடி.
  • கீலடி அகழாய்வுகள் மூலம் தமிழகத்தில் நகரமயமாக்கல் எப்பொழுது துவங்கியுள்ளது எனப் கண்டறியப்பட்டுள்ளது = கி.மு. ஆறாம் நூற்றாண்டு.
9TH தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்
9TH தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்

பட்டணம் (கேரளா)

  • பட்டணம் எங்குள்ளது = கேரளத்தின் எர்ணாகுளம் மாவட்டத்தில்.
  • மேலை நாடுகளோடும் வணிகத் தொடர்பு கொண்டிருந்த பழங்காலத் துறைமுகம் = பட்டணம்.
  • பச்சை கலந்த நீலவண்ண ஆடிப்பூச்சு உள்ள மேற்காசிய பானை ஓடுகள் எங்கு கிடைதுள்ளது = பட்டணம் (கேரளா).
  • ஒரே மரத்தால் ஆன படகின் பகுதிகள் எங்கு கிடைத்துள்ளது = பட்டணம் (கேரளா).
9TH தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்
9TH தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்

தமிழ்ப் பண்பாட்டின் தொட்டில்

  • தமிழ்ப் பண்பாட்டின் தொட்டில் எனப்படும் நாகரிகம் = பொருநை நாகரிகம்.
  • பொருநை நாகரிகம் எவ்வாறு அழைக்கப்படுகிறது = தாமிரபரணி பண்பாடு.
  • தமிழ்நாட்டின் ஒரே வற்றாத நதி = பொருநை (தாமிரபரணி) ஆறு.
  • 1876ல் ஆதிச்சநல்லூரில் அகழாய்வு நடத்தியவர் = ஜெர்மனியை சேர்ந்த டாக்டர் ஜாகோர்.
  • 1899 முதல் 1905 வரை ஆதிச்சநல்லூரில் அகழாய்வு செய்தவர் = இங்கிலாந்தின் அலெக்சாண்டர் ரீ.
  • தமிழக அரசின் தொல்லியல் துறையினரால் ஆதிச்சநல்லூரில் அகழாய்வு நடத்தப்பட்ட ஆண்டு = 1968.
  • உமி நீங்கிய நெல்மணிகள் எங்கு கிடைத்துள்ளன = ஆதிச்சநல்லூர் அருகே “சிவகளை” என்னும் இடத்தில்.
  • பொருநை நாகரிகம் (தாமிரபரணி பண்பாடு) எத்தனை ஆண்டுகள் பழமையானது = 3200 ஆண்டுகள் பழமையானது.

ஆதிச்சநல்லூரில் கிடைத்துள்ள பொருட்கள்

  • எலும்புகளுடன் கண்டெடுக்கபப்ட்ட ஈமத் தாழிகள்.
  • பொன்தகட்டால் செய்யபப்ட்ட “நெற்றிப்பட்டங்கள்” எங்கு கிடைத்துள்ளன = ஆதிச்சநல்லூர்.
  • சிந்துவெளி அகழ்வில் கிடைத்துள்ளதைப் போலவே சுடுமண் பெண் உருவங்கள் கொண்ட பொம்மைகள் கிடைத்துள்ள இடம் = ஆதிச்சநல்லூர்.
  • ஆதிச்சநல்லூரில் எத்தனை விதமான இரும்பினால் ஆன கருவிகள் கிடைத்துள்ளன = 32.
  • ஆதிச்சநல்லூரில் கிடைத்த செங்கற்கட்டுமானம் எத்தனை வரிசையில் உள்ளது = 29.
  • சங்கு வளையல் தொழிற்கூடம் இருந்துள்ள இடம் = கொற்கை.

புத்தக வினாக்கள்

  1. சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட எழுத்துமுறை யாது? = தமிழ் – பிராமி
  2. தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குச் சென்ற வியாபாரிகளையும் குதிரை வணிகர்களையும் பற்றிக் குறிப்பிடுகின்ற, இலங்கையின் பாலி மொழி வரலாற்று நூல் எது? = மகாவம்சம்.
  3. காடாக இருந்த இடங்களை வேளாண் நிலங்களாக மாற்றுதல், நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்துதல் ஆகிய பெருமைகளுக்கு உரிய சோழ அரசன் யார்? = கரிகாலன்.
  4. சேரர்களை பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டு எது? = புகலூர்.
  5. கற்கள், செப்பேடுகள், நாணயங்கள், மோதிரங்கள் ஆகியவற்றின் மீது பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் ____________ ஆகும்? = கல்வெட்டு சான்றுகள்
  6. கடந்தகாலச் சமூகங்கள் குறித்து அறிந்து கொள்வதற்கான சான்றுகளாக உள்ள சில பொருட்களை மீட்டெடுப்பதற்கு மீட்டெடுப்பதற்கு ஓரிடத்தை முறைப்படி தோண்டுதல் ________ ஆகும்? = தொல்லியல் அகழாய்வு
  7. மௌரியர் காலத்தில் ஆட்சிக்கலை மற்றும் பொருளாதாரம் குறித்து கௌடில்யர் எழுதிய நூல் _____________ ஆகும்? = அர்த்தசாஸ்திரம்.
  8. _______________ என்பது பிரிவு அல்லது வகை என்ற பொருளில் செய்யுள்களில் பயன்படுத்தப்பட்ட கருப்பொருள்; மேலும், இது ஒரு வாழ்விடத்தை அதன் தனித்தன்மை வாய்ந்த இயற்கைக்கூறுகளுடன் குறிப்பதாகவும் உள்ளது? = திணை.
  9. கிரேக்கர்கள், ரோமானியர்கள், மேற்கு ஆசியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய மேற்கத்தியர்களை ________________ என்னும் சொல் குறிக்கிறது? = யவனர்.

 

Leave a Reply