பாரதிதாசன்

பாரதிதாசன்

பாரதிதாசன்

பாரதிதாசன் வாழ்க்கைக் குறிப்பு

  • இயற் பெயர் = சுப்புரத்தினம்
  • பெற்றோர் = கனகசபை, இலட்சுமி அம்மையார்
  • மனைவி = பழநி
  • ஊர் = புதுச்சேரி
  • காலம் = 29.04.1891-21.04.1964

பாரதிதாசன் சிறப்புப் பெயர்கள்

  • புரட்சிக்கவி  (அறிஞர் அண்ணா)
  • புரட்சிக்கவிஞர்  (பெரியார்)
  • பாவேந்தர்
  • புதுவைக்குயில்
  • பகுத்தறிவு கவிஞர்
  • தமிழ்நாட்டு இரசுல் கம்சதேவ்
  • இயற்க்கை கவிஞர்

புனைப் பெயர்கள்

  • பாரதிதாசன் பல்வேறு புனைப் பெயர்களில் தனது கவிதைகளை எழுதி வெளியிட்டுள்ளார். அவையாவன,
    • கண்டழுதுவோன்
    • கிறுக்கன்
    • கிண்டல்காரன்
    • பாரதிதாசன்

பாரதிதாசன் இயற்றிய நூல்கள்

  • இசை அமுது
  • பாண்டியன் பரிசு
  • எதிர்பாராத முத்தம்
  • சேரதாண்டவம்
  • அழகின் சிரிப்பு
  • புரட்சிக்கவி
  • குடும்ப விளக்கு
  • இருண்ட வீடு
  • குறிஞ்சித்திட்டு
  • கண்ணகி புரட்சிக்காப்பியம்
  • மணிமேகலை வெண்பா
  • காதல் நினைவுகள்
  • கழைக்கூத்தியின் காதல்
  • தமிழச்சியின் கத்தி
  • இளைஞர் இலக்கியம்
  • சுப்பிரமணியர் துதியமுது
  • சுதந்திரம்
  • தமிழியக்கம் (ஒரே இரவில் எழுதியது)

உரைநடை நூல்கள்

  • திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார்
  • சஞ்சீவி பர்வதத்தின் சாரல்

பாரதிதாசன் நாடகங்கள்

  • சௌமியன்
  • நல்ல தீர்ப்பு
  • பிசிராந்தையார் (சாகித்ய அகாடமி விருது பெற்றது)
  • சக்திமுற்றப் புலவர்
  • அமைதி ஊமை (தங்கக் கிளி பரிசு)
  • இரணியன் அல்லது இணையற்ற வீரன்
  • சௌமியன்
  • படித்த பெண்கள்
  • இன்பக்கடல்
  • நல்லதீர்ப்பு
  • அம்மைச்சி
  • ரஸ்புடின்
  • அமைதி

பாரதிதாசன் நடத்திய இதழ்கள்

  • குயில்
  • முல்லை (முதலில் தொடங்கிய இதழ்)

பாரதிதாசன் பற்றிய தகவல்

  • பதினாறு வயதில் புதுவை அரசினர் கல்லூரியில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார்
  • பாரதியின் மீது கொண்ட பற்றின் காரணமாக தம்மை தாசன் ஆக ஆக்கிக்கொண்டார்
  • அகவல், எண் சீர்விருத்தம், அறுசீர் விருத்தம் ஆகியவை இவருடைய பாடல்களில் மிகுதியாகப் பயன்படுத்தி உள்ளார்
  • பாரதியின் வேண்டுகோளுக்கு இணங்க இவர் பாடிய “எங்கெங்கு காணினும் சக்தியடா’ என்ற பாடலைக் கேட்ட அவர், அக்கவிதையைத் தாமே, “ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியின் கவிதா மண்டலத்தைச் சேர்ந்த கனகசுப்புரத்தினம் எழுதியது” எனச் சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பினார்
  • பிரபல எழுத்தாளரும், திரைப்படக் கதாசிரியரும், பெரும் கவிஞரான இவர், அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக, 1954-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • தந்தை பெரியாரின் விரத் தொண்டராகவும் விளங்கினார். மேலும் அவர் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். அதன் காரணமாகக் கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றினை தனது பாடல்கள் மூலம் பதிவு செய்தார்
  • தொடக்க கல்வி கற்றது = திருப்புளி சாமியாரிடம்
  • இவர் தமிழ் பயின்றது = புலவர் பு.அ.பெரியசாமியிடம்
  • இவரின் கவித்திறன் கண்டு “நாவலர் சோமசுந்தர பாரதியார்” தலைமையில் அறிஞர் அண்ணா அவர்கள் இவருக்கு “புரட்சிக்கவி” என்ற பட்டத்தையும் 25000 ரூபாய் நன்கொடையும் அளித்தார்
  • வ.ரா.வின் அழைப்பின் பேரில் “இராமனுஜர்” என்னும் படத்திற்கு  திரைப்படப்பாடல் எழுதினார்
  • நகைச்சுவை உணர்வு மிக்கவர். நன்கு பாடுவார். உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதில் அதிக கவனம் செலுத்துவார். சிலம்பம், குத்துச்சண்டை, குஸ்தி பயின்றார். வீடு என்று இருந்தால் கோழி, புறா, பசு மூன்றும் இருக்க வேண்டும் என்பார். அவற்றை தானும் வளர்த்துவந்தார்.

பாரதிதாசன் சிறப்பு

  • புதுமைபித்தன் = அறிவுக் கோயிலைக் கட்டி அதில் நம்மைக் குடியேற்ற விரும்புகின்ற பேரறிஞன்
  • கு.ப.இராசகோபாலன் = பாரதிக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஓர் உண்மையான கவி
  • சிதம்பரநாத செட்டியார் = அவர் தம் பாடல்களைப் படிக்கின்ற அந்நியனும் தமிழனாகி விடுவான்
  • வி.ஆர்.எம்.செட்டியார் = புரட்சிக்கவி அவர், புதிய கவிதையை சிருஷ்டி செய்கிறார்; இயற்கையாகவே செய்கிறார்; தமிழ் மொழியில் புதியவளைவும், நெளிவும் மெருகும் ஏற்றுகிறார்; அவர் இசை வெறியில் கவிதைக் கனலுடன் பாடும்போது நாம் எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் சலிப்பின்றிக் கேட்டு இன்புறலாம். இது உண்மை! மறுக்க  முடியாத உண்மை
  • திரு.வி.க = குயிலின் பாடலும் மயிலின் ஆடலும் வண்டின் யாழும் அருவியின் முழவும் இனிக்கும், பாரதிதாசன் பாட்டும் இனிக்கும்
  • சுரதா = தடையேதும் இல்லை இவர் நடையில், வாழைத் தண்டுக்கோ தடுக்கின்ற கனுக்களுண்டு
  • 1990ஆம் ஆண்டு தமிழக அரசு இவரின் நூல்களை எல்லாம் நாட்டுடைமை ஆக்கியது
  • 2001 – அக்டோபர் மாதம் 9ஆம் தேதி, சென்னை தபால் துறை மூலமாக ஒரு நினைவு அஞ்சல்தலை அவரது பெயரில் வெளியிடப்பட்டது.

பாடல்கள்

  • நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து
    நிலாவென்று காட்டுகின்றாய் ஒளிமுகத்தை
    கோலம் முழுவதும் காட்டிவிட்டால் காதற்
    கொள்ளையிலே இவ்உலகம் சாமோ?
  • எல்லார்க்கும் எல்லாம்  என்று இருப்பதான
    இடம்நோக்கி நகர்கிறது இந்தவையம்
  • கல்லாரைக் காணுங்கால் கல்விநல்காக்
    கசடர்குத் தூக்குமரம் அங்கே உண்டாம்
  • தமிழுக்கு அமுதென்று பேர் – இன்பத்
    தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
  • தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடாதே
  • எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
    மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு
  • நல்ல குடும்பம் பல்கலைக் கழகம்

 

1 thought on “பாரதிதாசன்”

Leave a Reply