கவியரசு கண்ணதாசன்

கவியரசு கண்ணதாசன்

கவியரசு கண்ணதாசன்
கவியரசு கண்ணதாசன்

கவியரசு கண்ணதாசன் வாழ்க்கைக் குறிப்பு

  • இயற்பெயர் = முத்தையா
  • ஊர் = இராமநாதபுரம் மாவட்டம் சிறுகூடல்பட்டி
  • பெற்றோர் = சாத்தப்பன், விசாலாட்சி
  • காலம் = 1927-1981

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

கண்ணதாசன் புனைப் பெயர்

  • காரை முத்துப் புலவர்
  • வணங்காமுடி
  • கமகப்பிரியா
  • பார்வதிநாதன்
  • துப்பாக்கி
  • ஆரோக்கியசாமி

கண்ணதாசன் சிறப்புப் பெயர்கள்

  • கவியரசு
  • கவிச்சக்ரவர்த்தி
  • குழந்தை மனம் கொண்ட கவிஞர்

கண்ணதாசன் படைப்புகள்

  • மாங்கனி
  • ஆட்டனத்தி ஆதிமந்தி
  • கவிதாஞ்சலி
  • பொன்மலை
  • அம்பிகா
  • அழகு தரிசனம்
  • பகவாத் கீதை விளக்கவுரை
  • ஸ்ரீ கிருஷ்னகவசம்
  • அர்த்தமுள்ள இந்துமதம்
  • பாரிமலைக் கொடி
  • சந்தித்தேன் சிந்தித்தேன்
  • அனார்கலி
  • தெய்வ தரிசனம்
  • இயேசு காவியம்(இறுதியாக எழுதிய காப்பியம்)
  • பேனா நாட்டியம்

கண்ணதாசன் நாவல்கள்

  • சேரமான் காதலி(சாகித்ய அகாடமி விருது)
  • குமரிக் காண்டம்
  • வேலன்குடித் திருவிழா
  • விளக்கு மட்டுமா சிவப்பு
  • ஆயிரங்கால் மண்டபம்
  • சிங்காரி பார்த்த சென்னை
  • ஊமையான் கோட்டை
  • இராஜ தண்டனை
  • சிவகங்கைச் சீமை

தன் வரலாறு நூல்கள்

  • வனவாசம்
  • மனவாசம்

கண்ணதாசன் நடத்திய இதழ்கள்

  • தென்றல்
  • கண்ணதாசன்
  • சண்டமாருதம்
  • முல்லை
  • தென்றல் திரை
  • கடிதம்
  • திருமகள்
  • திரைஒளி
  • மேதாவி

கண்ணதாசன் குறிப்பு

  • திரைப்படத் துறையில் ஏறத்தாழ 35 ஆண்டுகள் பாடல்கள் எழுதியுள்ளார்
  • இவர் கடைசியாக எழுதிய பாடல்  ஏசுதாஸ் குரலில் அமைந்த கண்ணே கலைமானே பாடலாகும்
  • சேலம் மாவட்டம் சலகண்டாபுரம் (சலங்கை) பா.கண்ணன் என்ற நாடக ஆசிரியரின் தாசன்.
  • 1949ஆம் ஆண்டு “கலங்காதிரு மனமே” என்ற பாடலை எழுதி, திரைப்படப் பாடலாசிரியரானார்.
  • திரையுலகிலும் இலக்கிய உலகிலும் சிறந்து விளங்கியவர் கண்ணதாசன்.
  • இவர் சிறந்த கவியரங்கக் கவிஞராகவும் பேச்சாளராகவும் திகழ்ந்தவர்.
  • தன் திரைப்படப் பாடல்கள் வழியாக எளிய முறையில் மெய்யியலை மக்களிடையே கொண்டு சேர்த்தவர்.
  • சேரமான் காதலி என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்.
  • இவர் தமிழக அரசின் அரசவைக் கவிஞராகவும் சிறப்பிக்கப்பட்டிருந்தார்.

கண்ணதாசன் சிறப்பு

கவியரசு கண்ணதாசன்
கவியரசு கண்ணதாசன்
  • தமிழக அரசின் ஆஸ்தான கவிஞராக இருந்தார்.
  • சௌந்திரா கைலாசம் = தடுமாறு போதையிலும் கவிபாடும் மேதை அவன்

மேற்கோள்

  • காலைக் குளித்தெழுந்து
    கருஞ்சாந்துப் பொட்டுமிட்டு
    கருநாகப் பாம்பெனவே
    கார்கூந்தல் பின்னலிட்டு
  • போற்றுபவர் போற்றட்டும்; புழுதி வாரித்
    தூற்றுபவர் தூற்றட்டும்; தொடர்ந்து செல்வேன்
  • வீடு வரை உறவு, வீதி வரை மனைவி
    காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ?
  • மலை கூட ஒரு நாளில் தேனாகலாம்
    மணல் கூடச் சிலநாளில் பொன்னாகலாம்
    ஆனாலும் அவையாவும் நீயாகுமா?
    அம்மாவென் ரழைக்கின்ற சேயாகுமா?

 

 

Leave a Reply