சாலை இளந்திரையன்

சாலை இளந்திரையன்

சாலை இளந்திரையன்

சாலை இளந்திரையன் ஆசிரியர் குறிப்பு

  • இயற்பெயர் = வ.இரா.மகாலிங்கம்
  • ஊர் = நெல்லை மாவட்டம்
  • இவர் திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டிற்கு அருகில் உள்ள சாலை நயினார் பள்ளிவாசல் என்னும் சிற்றூரில் 1930 செப்டம்பர் 6 அன்று வ. இராமையா – அன்னலட்சுமி இணையருக்கு மகனாகப் பிறந்தார்.
  • இவரை இவர்தம் பாட்டி சொக்கன் எனச் செல்லப் பெயரிட்டு அழைப்பார்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

சிறப்பு பெயர்கள்

  • எழுச்சிச் சான்றோர்
  • திருப்புமுனை சிந்தனையாளர்

சாலை இளந்திரையன் கவிதை நூல்கள்

  • அன்னை நீ ஆட வேண்டும்
  • சிலம்பின் சிறுநகை
  • காலநதி தீரத்திலே
  • பூத்தது மானுடம்
  • கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
  • எங்கள் காவியம்
  • வீறுகள் ஆயிரம்
  • நஞ்சருக்கு பஞ்சனையோ?
  • உரைவீச்சு (தமிழக அரசின் பரிசு)
  • நடை கொண்ட படைவேழம்
  • ஏன் இந்த மெத்தனம்?
  • தமிழ் தந்த பெண்கள்

சாலை இளந்திரையன்

கட்டுரைகள்

  • உலகம் ஒரு குடும்பம்
  • சிந்தனைக்கு
  • புரட்சிக் கவிஞரின் கவிதை வளம் (திறனாய்வுக் கட்டுரை)
  • தமிழ்க் கனிகள்
  • தமிழில் சிறுகதை (திறனாய்வு)
  • புதிய தமிழ்க் கவிதை (திறனாய்வு)
  • சிறுகதை செல்வம் (திறனாய்வு)
  • தமிழனே தலைமகன்
  • Some Aspects of Modern Tamil Literature
  • நோய்ப்பட்டு
  • தமிழுக்காக
  • புதுத்தமிழ் முன்னோடிகள்
  • சமுதாய நோக்கு
  • கூட்டின் அமைதி குலைகிறது
  • வெற்றி மலர்கள்
  • எழுச்சி வேண்டும்
  • புதுத்தமிழ் முதல்வர்கள்
  • நம்மை பற்றிய சிந்தனைகள்
  • காலத்தின் கேள்விகள்
  • திருந்திய திருமணம்
  • தமிழ் மாநாடு
  • தமிழ்ப் பண்பாட்டிற்கு ஒரு இயக்கம்
  • மக்கள் நாயக மரபுகள்
  • உள்ளது உள்ளபடி
  • காவல் துப்பாக்கி
  • வெடிப்புகள் உடைப்புகள்
  • பொறுத்தது போதாதா?
  • ஏழாயிரம் எரிமலைகள்
  • நாளுக்கு நல்லபடி
  • தமிழுக்காக
  • ஒராசிரியர் பள்ளிகள்
  • புதிய கல்விக்கொள்கை
  • கணீரென்று வாழுங்கள்
  • தமிழின் ஒரே கவிஞன்
  • தமிழ் தமிழன் தமிழ்நாடு
  • கேள்விகள் ஆயிரம்
  • புரட்சி முழக்கம் (தமிழக அரசின் பரிசு)

கடிதங்கள்

  • களத்திலே கடிதங்கள் (எழுத்து சீர்திருத்தம் தொடர்பாக)
  • இரண்டு குரல்கள்

சாலை இளந்திரையன் குறிப்புகள்

  • எழுத்துச் சீர்திருத்த மாநாடு, அறிவியக்க மாநாடு, விழிப்புணர்ச்சி மாநாடு, தமிழ் எழுச்சி மாநாடு ஆகிய மாநாடுகளை நடத்தியவர்
  • உலகத்தமிழ் ஆராய்சிக் கழகம், இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றம், அறிவியக்கப் பேரவை, டில்லித் தமிழ்ச் சங்கம், இளகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் ஆகியவை தோன்ற காரணமாய் இருந்தவர்.
  • தனிநாயகம் அடிகள் உள்ளிட்டோருடன் இணைந்து உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தை நிறுவ உதவி புரிந்தார்.
  • 1968 ஆம் ஆண்டில் இந்தியப் பல்கலைக் கழக தமிழாசிரியர் மன்றம் என்னும் அமைப்பை உருவாக்கச் சாலை இளந்திரையன் உந்துசக்தியாக இருந்தார்.
  • 1980 ஆம் ஆண்டில் தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக் கழகத்தை நிறுவத் தமிழக அரசு பேராசிரியர் முனைவர் வ. சுப. மாணிக்கம் தலைமையில் சாலை இளந்திரையன் உள்ளிட்ட எண்மரைக்கொண்ட வல்லுநர் குழு அமைத்தது.
  • சாலை இளந்திரையன் கருத்துக்குப் பெரியாரையும், கவிதைக்குப பாவேந்தரையும் வழிகாட்டியாகக் கொண்டார்.
  • 1991 ஆம் ஆண்டில் பாரதிதாசன் நூற்றாண்டு நிறைவு விழாவில் இவருக்குப் பாரதிதாசன் விருது வழங்கப்பட்டது.

 

 

Leave a Reply