தருமு சிவராமு

தருமு சிவராமு

தருமு சிவராமு
தருமு சிவராமு

தருமு சிவராமு

  • ஊர் = இலங்கையில் உள்ள திரிகோண மலை
  • இயற்பெயர் = சிவராமலிங்கம்

புனைப்பெயர்கள்

  • பிரமிள்
  • பானுசந்திரன்
  • அரூப்சிவராம்

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

சிறப்பு பெயர்கள்

  • படிமக் கவிஞர்
  • ஆன்மீகக் கவிஞர்

கவிதை நூல்கள்

  • கண்ணாடி உள்ளிருந்து
  • கைப்பிடியளவு கடல்
  • மேல்நோக்கிய பயணம்
  • பிரமிள் கவிதைகள்
  • சூரியன் தகித்த நிறம்
  • காவியம் (புகழ்பெற்ற நூல்)
  • விடிவு

சிறுகதை

  • லங்காபுரிராஜா
  • பிரமிள் படைப்புகள்
  • காடன் கண்டது
  • பாறை
  • நீலம்
  • கோடரி
  • கருடனூர் ரிப்போர்ட்
  • சந்திப்பு
  • அசரீரி
  • சாமுண்டி
  • அங்குலிமாலா
  • கிசுகிசு

நாவல்

  • ஆயி
  • பிரசன்னம்

உரைநடை

  • மார்க்சும் மார்க்சீயமும்
  • வானமற்றவெளி: கவிதை பற்றிய கட்டுரைகள்
  • பாதையில்லாப் பயணம்: ஆன்மீக-மறைமுகஞானப் படைப்புகள்
  • விடுதலையும் கலாச்சாரமும்: மொழிபெயர்ப்புப் படைப்புகள்
  • ஸ்ரீலங்காவின் தேசியத் தற்கொலை
  • காலவெளிக் கதை: அறிவியல் கட்டுரைகள்
  • வெயிலும் நிழலும்: இலக்கிய விமர்சனக் கட்டுரைகள்

தருமு சிவராமு

நாடகம்

  • நட்சத்திரவாசி

தருமு சிவராமு சிறப்புகள்

  • புதுக்கவிதை முன்னோடிகளுள் முக்கியமான ஒருவராக இவர் கருதப்படுகிறார்.
  • ‘படிமக் கவிஞர்’ என்றும் ‘ஆன்மீகக் கவிஞர்’ என்றும் சிறப்பிக்கப்பட்ட இவரது கவித்துவம், இரண்டாயிரமாண்டுத் தமிழ்க் கவிதை வரலாற்றில் தனித்துயர்ந்து நிற்பதாகும்.
  • தி.ஜானகிராமன் இவரை “தமிழின் மாமேதை”, “நவீன தமிழ் இலக்கியத்தின் மாமேதை” என்றும் சிறப்பித்துள்ளார்.
  • “உரைநடையின் அதிகபட்ச சாத்தியத்தை நிறைவேற்றியவர்” என்று சி.சு.செல்லப்பா இவரை பாராட்டியுள்ளார்.
  • “பிரமிள் விசித்திரமான படிமவாதி” என்று சி.சு.செல்லப்பா கூறியுள்ளார்.
  • இளம் வயதிலேயே மௌனியின் கதைத் தொகுப்புக்கு முன்னுரை எழுதிய பெருமை இவருக்குண்டு.
  • “கவிதைக் கோட்பாடுகளும் பாரதி கலையும்” என்ற தலைப்பில் பாரதியை மதிப்பீடு செய்து மிகச் சிறந்த கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.
  • ‘காவியம்’ என்ற கவிதை பிரமிளின் மிகப்புகழ்பெற்ற தமிழின் முக்கியமான கவிதைகளுள் ஒன்று.
  • “பிரமிள் தமிழ்க் கவிதையின் தனிப்பெரும் ஆளுமை” என எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் தனது கட்டுரையில் பதிவு செய்துள்ளார்.
  • “புதுக் கவிதை தொடர்பான அதிகபட்ச பிரக்ஞையும் , மரபின் செழுமையும், சமத்காரப் பண்பும், தனித்துவமான படிம வெளியீட்டு முறையையும் பெற்றவர் பிரமிள்” என விமர்சகர் சங்கர ராம சுப்ரமணியன் பதிவு செய்துள்ளார்.
  • “இன்றைய தமிழ் இலக்கிய நிலையைப் பற்றி விமர்சன ரீதியாக நிர்ணயிக்கும் முதல் கட்டுரை மௌனியின் கதைக்கு பிரமிள் எழுதிய முன்னுரை, ‘எழுத்து’ சஞ்சிகை மூலம் நமக்குக் கிடைத்த விமர்சகர். அவரது நடை சிந்தனைத்துடிப்பு மிக்கது. நுணுக்கமும், ஆழமும், உடையது . அவர் எழுத்து மேல்நாட்டு இலக்கிப் பரிச்சயத்தால் வளம் பெற்றது” எனக் கவிஞர் நகுலன் குறிப்பிட்டுள்ளார்.
  • நியூயார்க் விளக்கு அமைப்பு “புதுமைப்பித்தன்” விருதை இவருக்கு அளித்தது. கும்பகோணம் சிலிக்குயில் “புதுமைப்பித்தன் வீறு” வழங்கியது.

 

 

2 thoughts on “தருமு சிவராமு”

  1. Given a wonderful article about DharmuSivaramu. I am very much interested to read his writings. Can you suggest me a way to get his writings. Thank you. — C.Ramachandran.

Leave a Reply