பெருந்தலைவர் காமராஜர்

பெருந்தலைவர் காமராஜர்

பெருந்தலைவர் காமராஜர்

புகழுரைகள்

  • தன்னலமற்ற தலைவர்
  • கர்மவீரர்
  • கல்விக்கண் திறந்த முதல்வர்
  • ஏழைப்பங்காளர்

பெருந்தலைவர் காமராஜர் இளமைப் பருவம்

  • விருதுநகர் மாவட்டத்தில் குமாரசாமி, சிவகாமி இனையார்க்கு மகனாய் 19௦03ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 15ஆம் நாள் பிறந்தார்.
  • காமராசரின் தாத்தா நாட்டாண்மைக்காரர்.
  • இவருக்கு பன்னிரண்டு வயதிலேயே கல்வியில் நட்டமில்லாமல் போயிற்று.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

பெருந்தலைவர் காமராஜர் அரசியலில் ஈடுபாடு

  • காமராசர் நாள்தோறும் செய்தித்தாள்களை படித்தும், அரசியல் கூட்டங்களில் தலைவர்களின் சொற்பொழிவுகளைக் கேட்டும் தம்முடைய அரசியல் அறிவை வளர்த்துக் கொண்டார்.
  • “மெய்கண்டான் புத்தகசாலை” என்ற நூல் நிலையத்திற்கு சென்று அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து திறமையாக பேசவும் கற்று கொண்டார்.
  • இளம் வயதிலேய காங்கிரசில் சேர்ந்தார்.
  • பதினோரு ஆண்டுகள் சிறையில் இருந்தார்.
  • அவரது தன்னலமற்ற உழைப்பைக் கண்டு தலைவர் சத்தியமூர்த்தி அவரை கட்சியின் செயலாளர் ஆக நியமித்தார்.
  • காமராசரின் அரசியல் குரு சத்தியமூர்த்தி.

தலைவர்களை உருவாக்குபவர்

  • 1939ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக் காங்கிரசுக் கட்சியின் தலைவர் ஆனார்.
  • 12 ஆண்டுகள் அப்பதவியில் இருந்தார்.
  • பலர் ஆட்சி அமைக்க இவர் காரணமாக இருந்ததால் இவரை “தலைவர்களை உருவாக்குபவர்” எனப் போற்றப்பட்டார்.

பெருந்தலைவர் காமராஜர்

முதலமைச்சர் காமராசர்

  • 1954இல் இராஜாஜி முதலமிச்சர் பதவியில் இருந்து விலகியதும் காமராசர் அப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
  • 1963இல் தாமாக பதவி விலகும்வரை அப்பதவியில் திறம்படச் செயலாற்றினார்.
  • காமராசர் ஆட்சிக் காலத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் தொழில்துறை அமைச்சராகவும், சி.சுப்பிரமணியம் கல்விஅமைச்சராகவும் பணியாற்றினார்.

தொழில் முன்னேற்றம்

  • காமராசர் முதலமைச்சராக இருந்த பொது இரண்டாவது, மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
  • கிண்டி, அம்பத்தூர், இறநிபெட்டை முதலிய இடங்களில் பெரிய தொழிற்பேட்டைகளும், மாவட்டந்தோறும் சிறிய தொழிற்பேட்டைகளும் அமைக்கப்பட்டன.
  • இவர் காலத்தில் கூட்டுறவு இயக்கம் சிறப்பாக நடைபெற்றது.
  • நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத் தொழிற்சாலை, இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை, கிண்டி அறுவைசிகிச்சைக் கருவித் தொழிசாலை, சர்க்கரை ஆலை, ஆவடி இரயில்வே வாகனத் தொழிற்சாலை, மேட்டூர் காகிதத் தொழிற்சாலை முதலியன இவரது காலத்தில் தொடங்கப்பெற்றன.

பெருந்தலைவர் காமராஜர் கல்விப் புரட்சி

  • காமராசர் காலத்தில் கட்டாயக் கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டது.
  • “தெருதோரும் தொடக்கப்பள்ளி, ஊர் தோறும் உயர்நிலைப்பள்ளி” என்பதே அவரது நோக்கமாக அமைந்தது.
  • பள்ளி வேலைநாட்களை 180இல் இருந்து 200ஆக உயாத்தினார்.
  • தொடக்கப்பள்ளியில் மதிய உணவுத் திட்டம் இவரால் தொடங்கப்பட்டது.
  • ஈராண்டுகளில் மபள்ளிச் சீரமைப்பு மாநாடுகள் 133 நடத்தி, பல கொடி ரூபாய் மதிப்புள்ள நன்கொடைகள் பெற்று பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை பொருட்கள் வாங்கப்பட்டன.
  • மருத்துவக்கல்லூரி முதலான தொழிற்கல்லூரிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு வட்டியில்லாக் கடனளிக்க ஏற்பாடு செய்தார்.

பெருந்தலைவர் காமராஜர் சமுக முன்னேற்ற திட்டங்கள்

  • தஞ்சாவூர்ப் பண்ணையாள் பாதுகாப்புச் சட்டத்தை திருத்தி, சாகுபடி செய்யும் தொழிலாளிக்கு அறுபது விழுக்காடு பங்கு கிடைக்க வழிவகை செய்தார்.
  • நிலசீர்திருத்தம் இவரால் கொண்டுவரப்பட்டது.
  • நிலா உச்ச வரம்பு முப்பது ஏக்கர் எனக் குறைக்கப்பட்டது.
  • மக்கள் நலத்திட்டங்களில் ஓய்வூதியம் முக்கியமானது.

பெருந்தலைவர் காமராஜர்

காமராசர் திட்டம்

  • 1962ஆம் ஆண்டு சீனப்படையெடுப்புக்கு பின், காங்கிரசுக் கட்சியின் செல்வாக்கு சரியத் தொடங்கியது.
  • கட்சியை வலுப்படுத்த மூத்த தலைவர்கள் அமைச்சர் பதவியில் இருந்து விலகி கட்சிப்பணியில் ஈடுபட வேண்டும் எனக் காமராசர் திட்டம் ஒன்றை கொண்டுவந்தார். அத்திட்டமே “காமராசர் திட்டம்” எனப்படும்.

அகில இந்திய காங்கிரசுத் தலைவர்

  • புவனேஸ்வர் நகரில் 1963ஆம் ஆண்டில் கூடிய காங்கிரசு மாநாட்டில் காமராசர் அகில இந்தியக் காங்கிரசுத் தலைவராகப் பதவி ஏற்றார்.
  • லால் பகதூர் சாஸ்த்ரி, இந்திரா காந்தி போன்றோரை பிரதமர் பதவியில் அமர வைத்தார்.

காமராசருக்கு செய்த சிறப்புகள்

  • காமராசரக்கு நடுவண் அரசு “பாரதரத்னா விருது” அளித்துச் சிறப்பித்து, நாடாளுமன்றத்தில் இவருக்கு ஆளுயர வெண்கலச்சிலையை நிறுவியது.
  • தமிழக அரசு இவரின் பெயரால் “மதுரை காமராசர் பல்கலைக்கழகம்” எனப் பெயர் சூட்டியது.
  • கன்னியாகுமரியில் காமராசர் மணி மண்டபம் கட்டப்பட்டது.
  • சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் சிலை அமைத்து சிறப்பித்தது.
  • காமராசர் வாழ்ந்த சென்னை இல்லம் நினைவு இல்லமாக ஆக்கப்பட்டது.
  • அவரின் விருதுநகர் இல்லமும் அரசுடைமை ஆக்கி நினைவு இல்லமாக்கப்பட்டது.
  • தேனாம்பேட்டையில் காமராசர் அரங்கம் நிறுவப்பட்டது.
  • காமராசர் பிறந்த நாளான சூலை 15ஆம் நாள் ஆண்டுதோறும் “கல்வி வளர்ச்சி நாளாக” தமிழக அரசு அறிவித்துள்ளது.
  • இவரை “கல்விக் கண் திறந்தவர்” எனத் தமிழுலகம் போற்றுகிறது.

பெருந்தலைவர் காமராஜர் மறைவு

  • 1975ஆம் ஆண்டு காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் இரண்டாம் நாள் இவ்வுலக வாழ்வி நீத்தார்.

 

 

 

தமிழ்ப்பணி

தமிழ்த்தொண்டு

2 thoughts on “பெருந்தலைவர் காமராஜர்”

  1. காமராஜர் 1975 இவ்வுலக வாழ்வி நீத்தார் என வேறு சில guide களில் குறிப்பிடப்பட்டுள்ளது எது சரி..,

Leave a Reply