பரிதிமாற் கலைஞர்

பரிதிமாற் கலைஞர்

பரிதிமாற் கலைஞர்

வாழ்க்கைக்குறிப்பு

  • இயற் பெயர் = சூரிய நாராயண சாஸ்திரி.
  • ஊர் = மதுரை அடுத்துள்ள விளாச்சேரி
  • பெற்றோர் = கோவிந்தசிவனார், இலட்சுமி அம்மையார்.
  • தம் பெற்றோருக்கு மூன்றாவது மகனாக,1870ஆம் ஆண்டு சூலைத் திங்கள் ஆறாம் நாள் பிறந்தார்.
  • இவர், தனது தந்தையிடம் வடமொழி கற்றார்
  • இவர் தமிழ் கற்றது = மகாவித்துவான் சபாபதியிடம்

பரிதிமாற்கலைஞர் சிறப்பு பெயர்கள்

  • தமிழ் நாடக பேராசிரியர்
  • திராவிட சாஸ்திரி (சி.வை.தாமோதரம்பிள்ளை)
  • தனித் தமிழ் நடைக்கு வித்திட்டவர்

பரிதிமாற் கலைஞர் நூல்கள்

  • பாவலர் விருந்து
  • தனிப்பாசுரத் தொகை
  • தமிழ் மொழி வரலாறு
  • சித்திரக்கவி
  • மதிவாணன்(புதினம்)
  • உயர்தனிச் செம்மொழி(கட்டுரை)
  • முத்ராராட்சசம் என்ற வடமொழி நூலை தமிழில் மொழிப்பெயர்த்துள்ளார்
  • தமிழ் புலவர் சரித்திரம்
  • தமிழ் வியாசங்கள்

பதிப்பித்த நூல்கள்

  • தமிழ் வியாசகங்கள்(கட்டுரை தொகுப்பு) 
  • சயம்கொண்டாரின் கலிங்கத்துப்பரணி (1898)
  • மகாலிங்கையர் எழுதிய இலக்கணச்சுருக்கம் (1898)
  • புகழேந்திப்புலவரின் நளவெண்பா (1899)
  • உத்தரகோச மங்கை மங்களேசுவரி பிள்ளைத்தமிழ் (1901)

பரிதிமாற் கலைஞர் நாடகங்கள்

  • ரூபாவதி அல்லது காணாமல் போன மகள்(நாடக நூல்)
  • கலாவதி(நாடக நூல்)
  • மானவிசயம்(நாடக நூல், களவழி நாற்பது தழுவல்)
  • நாடகவியல்(நாடக இலக்கண நூல்)
  • சூர்பநகை(புராண நாடகம்)

இதழ்கள்

  • ஞானபோதினி (மு.சி. பூர்ணலிங்கம் என்பவருடன் இணைந்து நடத்தியது)
  • விவேக சிந்தாமணி

பரிதிமாற்கலைஞர் TNPSC

  • சென்னை கிறித்துவக் கல்லோர்ரியில் தமிழ் பேராசிரியராகப் பணி புரிந்தவர்
  • எப்.ஏ (A – First Examination in Arts ) தேர்வில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று “பாஸ்கர சேதுபதி மன்னரிடம்” உதவித்தொகை பெற்றார்
  • சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் பி.ஏ பயின்று, தமிழிலும் வேதாந்த தத்துவ சாத்திரத்திலும் பல்கலைக்கழக அளவில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று தங்கப் பதக்கம் வென்றார்
  • 1893 ஆம் ஆண்டு சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் உதவித் தமிழ் ஆசிரியராக பணியாற்றத் தொடங்கி, பின்பு தலைமைத் தமிழாசிரியராகப் பதவி உயர்வு பெற்றார்.
  • மறைமலை அடிகளின் ஆசிரியர்
  • சோனட் என்ற 14 அடி ஆங்கிலப் பாட்டைப் போன்று பல பாடல்கள் எழுதி “தனிப்பாசுரத்தொகை” என்னும் நூலை வெளியிட்டார்
  • “அங்கம்” என்ற நாடக வகைக்கு மானவிசயம் என்ற நாடக நூலை படைத்தார்
  • கலாவதி, ரூபாவதி எனும் பெண் பாத்திரங்களில் தனது நாடகங்களில் தாமே நடித்தார்
  • சி.வை.தாமோதரப் பிள்ளையின் வேண்டுகோளுக்கு இணங்க “மதிவாணன்” என்ற புதினம் படைத்தார்
  • இவர் 33 ஆவது வயதில் இவ்வுலக வாழ்வை நீத்தார்
  • நவம்பர் 2, 1903-இல் பரிதிமாற் கலைஞர் மறைந்தார். 33 ஆண்டுகளே வாழ்ந்து இவர் மறைந்தபோது இவரது பேராசிரியர் மில்லர் (ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர்) பின்வருமாறு புலம்பி அழுதுள்ளது அவரது ஆளுமைக்குச் சான்றாகும்

பரிதிமாற்கலைஞர் சிறப்பு

  • சூரிய நாராயண சாஸ்திரி என்ற தம் பெயரை தனிப்ப்பசுரத் தொகை என்னும் நூலை வெளியிடும் போது பரிதிமாற் கலைஞர் என மாற்றிக் கொண்டார்
  • இவரின் தனிப்பாசுரத் தொகை என்னும் நூலினை ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்
  • இவரின் தமிழ்ப்புலமையும் கவிபாடும் திறனையும் கண்டு சி.வை.தாமோதரம்பிள்ளை இவருக்கு “திராவிட சாஸ்திரி” என்ற பட்டம் வழங்கினார்.
  • உயர்தனிச் செம்மொழி (classical language), தகுந்தவை தங்கி நிற்றல் (survival of the fittest) என்ற கலைச் சொற்களைப் படைத்தவர்
  • முதன் முதலில் தமிழை உயர்தனிச் செம்மொழி என அறிவித்தவர்
  • தமிழை “உயர்தனிச் செம்மொழி” என்று முதன் முதலில் தன பேச்சின் மூலம் கூறியவர் இவரே. பின்னாளில் 2004 ஆம் ஆண்டு நடுவண் அரசு தமிழ் மொழியை உயர்தனிச் செம்மொழியாக அறிவித்தது
  • இவரது பதின்மூன்று நூல்களும் 2006 டிசம்பர் 2 அன்று தமிழக அரசால் அரசுடமையாக்கப்பட்டன
  • 2007 ஆம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு அஞ்சல் தலை வெளியிட்டது

1 thought on “பரிதிமாற் கலைஞர்”

Leave a Reply