சுதந்திர சட்டத்தால் ஏற்பட்ட மாற்றங்கள்

சுதந்திர சட்டத்தால் ஏற்பட்ட மாற்றங்கள்

சுதந்திர சட்டத்தால் ஏற்பட்ட மாற்றங்கள்

சுதந்திர சட்டத்தால் ஏற்பட்ட மாற்றங்கள்

  • இந்தய அரசியல் நிர்ணய சபையுடன் இணையாமல் இருந்த சுதேச அரசுகளின் பிரதிநிதிகள் சிறுகச்சிறுக தங்களை இந்திய அமைப்புடன் இணைத்துக் கொண்டனர்
  • 1947 , ஏப்ரல் 28-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், 6 சுந்தந்திர அரசுகள் தங்களை இந்திய அரசியல் நிர்ணய சபையுடன் இணைத்துக்கொண்டன. அவை = பரோடா, பிக்கனேர், ஜெய்பூர், பாட்டியாலா, ரேவா மற்றும் உதய்பூர்
  • 1947 ஜூன் 3 திட்டத்தின் படி (மவுண்ட்பேட்டன் திட்டம்) இந்தியா இரண்டாக பிரிக்கப்பட்டு, அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களும் பிரிந்தனர்
  • சுதேச அரசுகளின் பிரதிநிதிகள், முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த இந்தியாவில் உள்ள மாகாண பிரதிநிதிகள் ஆகியோர் நிர்ணயசபை கூட்டத்தில் கலந்துக்கொண்டனர்
  • இந்தியச் சுதந்திரச் சட்டம் 1947-ஆள் இந்தய அரசியல் நிர்ணய சபையில் ஏற்பட்ட மாற்றங்கள்
    • இந்திய அரசியல் நிர்ணய சபையானது ஒரு முழுமையான இறையாண்மை மிக்க அவையாக மாறியது. அது மக்கள் விருப்பப்படும் எந்தவொரு அரசியல் அமைப்பினையும் உருவாக்க முடியும் என்றது.
    • பிரிட்டிஷ் அரசால் இந்தியாவிற்கு என்று உருவாக்கப்பட்ட எந்தவொரு சட்டத்தையும் மாற்ற, நீக்க, சேர்க்க போன்ற அதிகாரங்களை அரசியல் நிர்ணயசபைக்கு வழங்கப்பட்டது
    • அரசியல் நிர்ணயசபை ஒரு மத்திய சட்டமன்றமாகவும் (பாராளுமன்றம்) செயல்பட்டது. அதாவது இரண்டு செயல்கள் ஒருங்கே நடைபெற்றது
      • சுதந்திர இந்தியாவிற்கான அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்குதல்
      • நாட்டிற்கான சாதாரன சட்டங்களை செயல்படுத்துதல்
    • இவ்விரு செயல்களும் ஒரே அவையில் வெவ்வேறு நாட்களில் நடைபெற்றன
      • ஒன்று, இந்த அவை சுதந்திர இந்தியாவின் முதல் பாராளுமன்றமாகவும் செயல்பட்டது. அவ்வாறு செயல்படும் நேரத்தில் அவையின் தலைவராக முதல் சபாநாயகர் ஜி.வி.மவ்லாங்கர் செயல்பட்டார்.
      • சுதந்திர சட்டத்தால் ஏற்பட்ட மாற்றங்கள்
        • அரசியல்நிர்ணயசபை, முதல் முறையாக 1947, நவம்பர் 17-ம் நாள் பாராளுமன்றமாக செயல்பட துவங்கியது. பாராளுமன்றத்தின் முதல் சபாநாயகராக ஜி.வி.மவ்லாங்கர் தேர்வு செய்யப்பட்டார்.
      • மற்றொன்று, இந்திய அரசியல் நிர்ணய சபையாக இவ்வவை செயல்படும் பொழுது, அவையின் தலைவராக டாக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமை தாங்கினார்
    • இவ்விரு செயல்களுமே, 1949 நவமபர் 26-ம் தேதி வரை ஒருங்கே நடைபெற்றன. அதாவது அரசியல் நிர்ணய சபை இந்திய சட்டங்களை உருவாக்கும் வரை.
    • முஸ்லிம் லீகினை சேர்ந்த உறுபினர்கள் பாகிஸ்தான் தனி நாடானதால், அரசியல் நிர்ணயசபையை விட்டு வெளியேறினர். அவ்வாறு வெளியேறியவை = மேற்கு பஞ்சாப், கிழக்கு வங்காளம், வடமேற்கு எல்லை மாகாணம், சிந்து, பலுசிஸ்தான், அசாமின் சில்ஹெட்
    • சுதந்திர சட்டத்தால் ஏற்பட்ட மாற்றங்கள்
      • சுதந்திர சட்டத்தால் ஏற்பட்ட மாற்றங்கள் படி, காபினெட் மிசன் திட்டத்தின் படி உருவாக்கப்பட்ட இந்திய நிர்ணயசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 389 ஆனது, குறைந்து 299 உறுப்பினர்கள் உடைய அவை ஆனது
        • மாகாணத்தில் 296 இருந்து 229 ஆனது
        • சுதந்திர அரசில் 93-ல் இருந்து 7௦ ஆனது
      • 229 உறுபினர்களை கொண்ட மாகாணங்களில், மிக அதிகபட்சமாக
        • ஒருங்கிணைந்த மாகாணம் = 55 உறுப்பினர்கள்
        • மதராஸ் மாகாணம் = 49 உறுப்பினர்கள்
        • பீகார் மாகாணம் = 36 உறுப்பினர்கள்
      • 7௦ உறுபினர்களை கொண்ட சுதேச அரசில்
        • மைசூர் = 7 உறுப்பினர்கள்
        • திருவாங்கூர் = 6 உறுப்பினர்கள்

Leave a Reply