சமசீர் கல்வி 10 ஆம் வகுப்பு பாட புத்தகம் நிற்க நேரமில்லை

நிற்க நேரமில்லை

இன்றிளைப் பாறுவம் என்றிருந்தால் – வழி
என்னென்ன வாகுமோ ஓரிரவில்
சென்றிளைப் பாறுக முற்றிடத்தே – தம்பி
தேன்வந்து பாயும் உன் நெஞ்சிடத்தே!
சாதனைப் பூக்களை ஏந்துமுன்னே – இங்கு
நல்லசெடி இளைப் பாறிடுமோ?
வேதனை யாவும் மறந்ததுபார் – செடி
வெற்றி கொண்டேந்திய பூவினிலே
– சாலை இளந்திரையன்

சொற்பொருள்:

  • செத்தை – குப்பைகூளம்
  • இளைப்பாறுதல் – ஓய்வெடுத்தல்

ஆசிரியர் குறிப்பு:

  • சாலை. இளந்திரையனின் பெற்றோர் இராமையா, அன்னலட்சுமி.
  • இவர் திருநெல்வேலி மாவட்டம் சாலைநயினார் பள்ளிவாசல் என்னும் இடத்தில பிறந்தார்.
  • தில்லிப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவாரக இருந்தார்.
  • உலகத்தமிழ் ஆராய்சிக் கழகம், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், தில்லித் தமிழ் எழுத்தாளர் சங்கம், உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் தோன்றக் காரணமாக இருந்தவர்.
  • 1991இல் “பாவேந்தர் விருதினை” பெற்றவர்.
  • காலம் = 06.09.1930 – 04.10.1998.

நூல் குறிப்பு:

  • இப்பாடல் “பூத்தது மானுடம்” என்னும் கவிதைத் தொகுப்பில் இல்லது.
  • மேலும் இவர் புரட்சி முழக்கம், உரை வீச்சு போன்ற நூல்களை படைத்துள்ளார்.

நூலகம்:

  • ஒரு மனிதன் ஆண்டுக்கு 2000 பக்கங்களாவது படித்தால் தான் அன்றாட உலக நடப்புகளைத் அறிந்த மனிதனாகக் கருதப்படுவான் என யுனெஸ்கோ கூறியுள்ளது.
  • கிரீஸ் நகர அரசுகளே முதன் முதலாக மக்களுக்கான நூல் நிலையங்களை அமைத்தன.
  • இந்தியாவில் உள்ள நூலகங்களில் கல்கத்தா தேசிய நூலகம் முதன்மையானது.
  • புத்தகச்சாலை, ஏடகம், சுவடியகம், சுவடிச்சாலை, வாசகசாலை, படிப்பகம், நூல்நிலையம், பண்டாரம் என நூலகம் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது.
  • ஆங்கிலத்தில் “லைப்ரரி” என்னும் சொல் நூலகத்தை குறிக்கின்றது.
  • இலத்தின் மொழியில் “லிப்ரா” என்னும் சொல்லிற்குப் புத்தகம் என்பது பெயர்.
  • இந்தியாவிலேயே முதன் முறையாகத் தமிழக அரசுத் தான் 1948ஆம் ஆண்டு சென்னை பொது நூலகச் சட்டத்தை இயற்றியது.
  • தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை “புத்தகப்பூங்கொத்து” என்னும் வகுப்பறை நூலகத் திட்ட்டத்தை தொடங்கியுள்ளது.
  • இந்திய நூலகத் தந்தை  = சீர்காழி சீ.இரா.அரங்கநாதன்.

Leave a Reply