சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் உழவின் சிறப்பு

உழவின் சிறப்பு

“மேழி பிடிக்கும்கை வேல்வேந்தர் நோக்கும்கை
ஆழி தரித்தே அருளும்கை – சூழ்வினையை
நீக்கும்கை என்றும் நிலைக்கும்கை நீடுழி
காக்கும்கை காராளர் கை
– கம்பர்

சொற்பொருள்:

  • மேழி – கலப்பை, ஏர்
  • வேந்தர் – மன்னர்
  • ஆழி – மோதிரம், சக்கரம், கடல்
  • காராளர் – மேகத்தை ஆளுகின்றவர்களாகிய உழவர்.

ஆசிரியர் குறிப்பு:

  • இயற்பெயர் = கம்பர்
  • பிறந்த ஊர் = தேரழுந்தூர், மயிலாடுதுறைக்கு அண்மையில் உள்ளது.
  • தந்தை பெயர் = ஆதித்தன்
  • போற்றியவர் = சடையப்ப வள்ளல்
  • இயற்றிய நூல்கள் = கம்பராமாயணம், சடகோபர் அந்தாதி, ஏரெழுபது, சரஸ்வதி அந்தாதி, திருக்கை வழக்கம்
  • சிறப்பு = கல்வியில் பெரியவர் கம்பர், கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்.
  • காலம் = 12ஆம் நூற்றாண்டு

Leave a Reply