சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் புறநானூறு

புறநானூறு

நெல்லும் உயிரன்றே; நீரும்உயி ரன்றே;
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;
அதனால் யான்உயிர் என்பது அறிகை
வேன்மிகு தானை வேந்தர்க்குக் கடனே;
– மோசிகீரனார்

சொற்பொருள்:

  • அறிகை – அறிதல் வேண்டும்
  • தானை – படை
  • கடனே – கடமை

ஆசிரியர் குறிப்பு:

  • மோசிகீரனார், தென்பாண்டி நாட்டிலுள்ள “மோசி” என்னும் ஊரில் வாழ்தவர்.
  • “கீரன்” என்னும் குடிப்பெயரை உடையவர்.
  • உடல் சோர்வினால் அரசுக்குரிய முரசுக் கட்டிலில் உறங்கியபோது, “சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை” என்ற அரசனால் கவரிவீசப் பெற்ற பெருமைக்குரியவர்.
  • இவர் பாடிய பாடல்கள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகியவற்றுள் உள்ளன.

நூல் குறிப்பு:

  • புறம் + நான்கு + நூறு = புறநானூறு.
  • இந்நூல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
  • இது புறம் பற்றிய நானூறு பாடல்களின் தொகுப்பு.
  • புறம் என்பது மறம் செய்தலும் அறம் செய்தலும் ஆகும்.

Leave a Reply