சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் மெய்பொருள் கல்வி

மெய்பொருள் கல்வி

கற்பிப்போர் கண்கொடுப் போரே! – அந்தக்
கணக்காயர் உரையினில் இருசெவி சேரே!
நற்பெயர் எடுத்திட வேண்டும்! – நாளும்
நன்றாகப் படித்துநீ முன்னேற வேண்டும்!
– வாணிதாசன்

சொற்பொருள்:

  • பதுமை – உருவம்
  • மெய்பொருள் – நிலையான பொருள்
  • கணக்காயர் – ஆசிரியர்

ஆசிரியர் குறிப்பு:

  • இயற்பெயர்: எத்திராசலு (எ) அரங்கசாமி
  • பெயர்: வாணிதாசன்
  • பிறந்த இடம்: புதுவையை அடுத்த வில்லியனூர்
  • பெற்றோர்: அரங்க திருக்காமு – துளசியம்மாள்

சிறப்பு:

  • “கவிஞரேறு, பாவலர்மணி” என்னும் பட்டங்கள் பெற்றுள்ளார்.
  • தமிழகத்தின் “வேர்ட்ஸ் வொர்த்” என இவரைத் தமிழுலகம் புகல்கிறது.
  • உருசியா, ஆங்கிலம் முதலிய மொழிகளில் இவர் பாடல்கள் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.

காலம்:

  • 22.07.1915 – 07.08.1974

நூல் குறிப்பு:

  • கவிஞர் வாணிதாசன் தமிழ் உலகிற்குப் புனைந்து அளித்துள்ள “குழந்தை இலக்கியம்” என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது.

 

Leave a Reply