சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் திருக்குறள்

திருக்குறள்

சொற்பொருள்:

  • புரை – குற்றம்
  • பயக்கும் – தரும்
  • சுடும் – வருத்தும்
  • அன்ன – அவை போல்வன
  • எய்யாமை – வருந்தாமல்
  • அகம் – உள்ளம்

ஆசிரியர் குறிப்பு:

  • திருவள்ளுவர் சுருங்க சொல்லி விளங்க வைப்பதில் வல்லவர்.

சிறப்பு பெயர்கள்:

  • நாயனார், முதற்பாவலர், நான்முகனார், மாதானுபாங்கி, செந்நாப்போதார், பெருநாவலர்

நூல் குறிப்பு:

  • மனிதன் மனிதனாக வாழ, மனிதன் மனிதனுக்குக் கூறிய அறவுரை தான் திருக்குறள்.
  • இந்நூல் அறத்துப்பால், பொருட்ப்பால், இன்பத்துப்பால் என்னும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டது.
  • இதில், நூற்று முப்பது மூன்று அதிகாரங்கள் உள்ளன.
  • ஒவ்வோர் அதிகாரத்திற்கும் பத்துக் குறட்பாக்கள் என ஆயிரத்து முந்நூற்று முப்பது குறட்பாக்கள் உள்ளன.
  • இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  • இது 107 மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.

Leave a Reply