சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் கடவுள் வாழ்த்து

 கடவுள் வாழ்த்து

முத்தே பவளமே மொய்த்தபசும் பொற்சுடரே
சித்தேஎன் னுள்ளத் தெளிவே பராபரமே
கண்ணே கருத்தேயென் கற்பகமே கண்ணிறைந்த
விண்ணே ஆனந்த வியப்பே பராபரமே
– தாயுமானவர்

சொற்பொருள்:

  • சுடர் – ஒளி
  • ஆனந்தம் – மகிழ்ச்சி
  • பராபரம் – மேலான பொருள், இறைவன்

ஆசிரியர் குறிப்பு:

  • பெயர் = தாயுமானவர்
  • பெயர் காரணம் = திருச்சி மலைமீது உள்ள இறைவனான தாயுமானவர் அருளால் பிறந்தமையால் இவருக்கு தாயுமானவர் என்று பெயர் சூட்டப்பட்டது.
  • பெற்றோர் = கேடிலியப்பர் – கெசவல்லி அம்மையார்
  • மனைவி = மட்டுவார்குழலி
  • ஊர் = நாகபட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமறைக்காடு(வேதாரண்யம்)
  • நூல் = தாயுமானவர் திருப்பாடல் திரட்டு
  • பணி = திருச்சியை ஆண்ட விஷய ரகுநாத சொக்கலிங்கரிடம் கருவூல அலுவலர்
  • காலம் = கி.பி. 18ம் நூற்றாண்டு
  • நினைவில்லம் = இராமநாதபுரம் மாவட்டம் இலட்சுமிபுரத்தில் உள்ளது

நூல் குறிப்பு:

  • இப்பாடல் “தாயுமானவர் திருப்பாடல் திரட்டு” என்னும் நூலில் “பராபரக்கண்ணி” என்னும் தலைப்பில் உள்ளது.

Leave a Reply