சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் இராணி மங்கம்மாள்

இராணி மங்கம்மாள்

இராணி மங்கம்மாள்:

  • மதுரையை ஆண்டு வந்த சொக்கநாத நாயக்கரின் மனைவி இராணி மங்கம்மாள்.
  • இராணி மங்கம்மாளின் கணவர் இறந்த போது அவர் மகன் அரங்க கிருஷ்ணமுத்துவீரப்பன் இளம் வயதினனாக இருந்தான். அவனுக்கு துணையாக இருக்க வேண்டும் என்னும் கடமை உணர்வினால் இராணி மங்கம்மாள் உடன்கட்டை ஏறவில்லை.

மகனுக்கு அரசும் அறிவுரையும்:

  • மங்கம்மாள், தனது மகன் அரங்க கிருட்டினமுத்துவீரப்பனுக்குத் திருமணம் செய்வித்த பின்னர் முடிசூட்டினார்.
  • “அரசாட்சியை அடக்கத்தோடும் தந்திரத்தோடும் நாம் நோக்கவேண்டும்; முன்கோபமும் அதன் விளைவும் அரசியலில் ஒருபோதும் வெற்றியைத் தராது. பகைவரை எதிர்கொள்ள எப்போதும் ஆய்த நிலையில் இருப்பதோடு மிகுந்த பொறுமையுடனும் செயல்பட வேண்டும்” என அறிவுரை கூறினார்.
  • முத்துவீரப்பன், “நேர்மையை காட்டிலும் உயர்ந்த தெய்வம் இல்லை” என்ற கொள்கையுடன் ஆட்சி புரிந்தான்.

மங்கம்மாள் ஆட்சிப் பொறுப்பேற்றல்:

  • முத்துவீரப்பன் இறந்த சில நாட்களில் அவன் மனைவி சின்னமுத்தம்மாள் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்து, சில நாட்களில் அவரும் இறந்தார்.
  • கி.பி.1688ஆம் ஆண்டு பெயரன் விசயரங்கச் சொக்கநாதன் பெயரளவில் அரியணை ஏற்றப்பட்டான்.
  • பாட்டி மங்கம்மாள் காப்பாட்சியாளராக ஆட்சிப் பொறுப்பினை ஏற்றார்.

முகலாயர்களுக்கு பணிதல்:

  • முகலாய பேரரசர் அவுரங்கசீப் தனது தக்கான நடவடிக்கை மேற்கொண்டிருந்த நேரம் மங்கம்மாள் பெரும் செல்வம் அவர்களுக்கு கொடுத்து தனது ஆட்சியை காப்ற்றிக்கொண்டார்.
  • முகலாயரின் உதவியோடு மராத்தியர்களிடம் இழந்த சில பகுதிகளை மீட்டார்.

திருவிதாங்கூர் போர்:

  • தளபதி நரசயப்பர் தலைமையில் மங்கம்மாள் அனுப்பிய படை திருவிதாங்கூர் மன்னர் இரவிவர்மாவை தோற்கடித்து வெற்றி பெற்றனர்.

தஞ்சைப் போர்:

  • தளபதி நரசய்ப்பர் தலைமையில் சென்ற படை தஞ்சை மராத்திய மன்னர் ஷாஜியை தோற்கடித்து, தஞ்சை அமைச்சர் பாலாஜி பண்டிதரிடம்  இருந்து பெரும் பொருள்களை பெற்றுவந்தது.

மைசூர் போர்:

  • மைசூர் மன்னர் சிக்கதேவராயன் காவிரியின் குறுக்கே அணைகட்டிய பொது, அவரை மங்கம்மாள் எதிர்த்தார்.
  • மங்கம்மாளுக்கு துணையாக தஞ்சை மராட்டியர் உதவினர்.
  • அச்சமயம் பெரும் மழைப் பொழிவால் அணைகள் உடைந்தன. சிக்கல் தற்காலிகமாக முடிவடைந்தது.

சமயக் கொள்கை:

  • ஒவ்வொருவரும் தாம் சிறந்ததாக கருதும் சமயத்தைக் கைக்கொண்டு வாழவிடுவதே தருமம் என்ற கொள்கையை மங்கம்மாள் பின்பற்றினார்.
  • சமயத் தொடர்பாக சிறை வைக்கப்பட்ட மெல்லோ பாதிரியாரை விடுதலை செய்து, போசேத் என்ற குருவைத் தம் அரசவையில் வரவேற்று விருந்தோம்பினார்.

அறச்செயல்கள்:

  • மதுரையில் பெரிய அன்னச் சத்திரம் கட்டினார்.
  • இவர் பல சாலைகளை அமைத்தார். கன்னியாகுமரிக்கும் மதுரைக்கும் இடையே அமைந்த நெடுச்சாலை, “மங்கம்மாள் சாலை” எனப்படுகிறது.
  • ஆணித்திங்களில் “ஊஞ்சல் திருவிழா” நடத்தினார்.

Leave a Reply