சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் உமர் கய்யாம் பாடல்கள்

உமர் கய்யாம் பாடல்கள்

அன்பு சியின் அயலாரும்
அண்டி நெருங்கும் உறவினராம்;
அன்பு நீங்கின் உறவினரும்
அகன்று நிற்கும் அயலரவாம்;
தும்ப நோயை நீக்கிடுமேல்
துவ்வா விடமும் அமுதமாகும்;
துன்ப நோயை ஆக்கிடுமேல்
தூய அமுதம் விடமாமே!

சொற்பொருள்:

  • பகர்வது – சொல்வது
  • தெளிவீரே – தெளியுங்கள்
  • துவ்வா – நுகராத
  • அகன்று – விலகி
  • ஆழி – கடல்

இலக்கணக்குறிப்பு:

  • நோக்கா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  • நோக்கி – வினையெச்சம்
  • துவ்வா விடம் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

ஆசிரியர் குறிப்பு:

  • கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை கன்னியாகுமரி மாவட்டம் தேரூரில் பிறந்தவர்.
  • இவரது பெற்றோர் = சிவதாணு, ஆதிலட்சுமி அம்மையார்.
  • இவர் உமர்கய்யாம் பாடல்களை தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார்.
  • உமர்கய்யாம் பதினொன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாரசீக கவிஞர்.
  • இவரின் முழுப்பெயர் கியதுதின் அபுல்பாத் உமர்கய்யாம் என்பது.

இயற்றிய நூல்கள்:

  • மலரும் மாலையும், மருமக்கள் வழி மான்மியம், குழந்தைச் செல்வம், ஆசிய ஜோதி

நூல் குறிப்பு:

  • இந்நூல் இம்மை மறுமை பற்றி ரூபாயத் என்னும் பெயரில் உமர்கய்யாம் எழுதிய செய்யுளின் மொழிபெயர்ப்பு.
  • கவிமணி இதனை மொழிபெயர்த்துள்ளார்.
  • இதில் 115 பாடல்கள் உள்ளன.
  • ரூபாயத் என்பது நான்கடிச் செய்யுள்.

Leave a Reply