சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் குறுந்தொகை

குறுந்தொகை

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே
– தேவகுலத்தார்

சொற்பொருள்:

  • நீர் – கடல்
  • கோல் – கொம்பு

இலக்கணக்குறிப்பு:

  • நிலத்தினும், வானினும், நீரினும் – உயர்வு சிறப்பும்மை
  • கருங்கோல் – பண்புத்தொகை

பிரித்தறிதல்:

  • ஆரளவு – அருமை+அளவு
  • கருங்கோல் – கருமை+கோல்
  • பெருந்தேன் – பெருமை+தேன்

நூல் குறிப்பு:

  • குறுமை + தொகை = குறுந்தொகை
  • குறைந்த அடிகளால் பாடப்பெற்ற பாடல்களின் தொகுப்பே குறுந்தொகை.
  • இந்நூல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
  • இந்நூலை தொகுத்தவர் பூரிக்கோ.
  • பாரதம் பாடிய பெருந்தேவனார் இந்நூலுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடியுள்ளார்.

Leave a Reply