சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் திருவிளையாடல்புராணம்

திருவிளையாடல்புராணம்

சொற்பொருள்:

  • வையை நாடவன் – பாண்டியன்
  • உய்ய – பிழைக்க
  • இறந்து – பணிந்து
  • தென்னவன் குலதெய்வம் – சொக்கநாதன் (அ) சுந்தரபாண்டியன்
  • இறைஞ்சி – பணிந்து
  • சிரம் – தலை
  • மீனவன் – மீன் கொடியை உடைய பாண்டியன்
  • விபுதர் – புலவர்
  • தூங்கிய – தொங்கிய
  • பொற்கிழி – பொன்முடிப்பு
  • நம்பி – தருமி
  • பைபுள் – வருத்தம்
  • பனவன் – அந்தணன்
  • கண்டம் – கழுத்து
  • வழுவு – குற்றம்
  • சீரணி – புகழ் வாய்ந்த
  • வேணி – செஞ்சடை
  • ஓரான் – உணரான்
  • குழல் – கூந்தல்
  • ஞானப்பூங்கோதை – உமையம்மை
  • கற்றைவார் சடையன் – சிவபெருமான்
  • உம்பரார் பத்தி – இந்திரன்
  • நுதல் – நெற்றி
  • ஆய்ந்த நாவலன் – நக்கீரன்
  • காய்ந்த நாவலன் – இறைவன்

இலக்கணக்குறிப்பு:

  • உரைத்து, இரந்து – வினையெச்சம்
  • சொல்லி, இறைஞ்சி – வினையெச்சம்
  • மகிழ்ச்சி – தொழிற்பெயர்
  • தூங்கிய, ஆய்ந்த – பெயரெச்சம்
  • நேர்ந்து – வினையெச்சம்
  • கொண்டு, வைத்து – வினையெச்சம்
  • தேரா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  • புனைமலர் – வினைத்தொகை
  • பற்றுவான், அஞ்சான் – வினையாலணையும் பெயர்
  • குற்றம் – தொழிற்பெயர்
  • தேய்ந்த, பாய்ந்த, ஆய்ந்த, காய்ந்த – பெயரெச்சம்
  • விழுந்து – வினையெச்சம்
  • வம்மை – பண்புத்தொகை

ஆசிரியர் குறிப்பு:

  • பரஞ்சோதி முனிவர் நாகை மாவட்டம் திருமறைக்காடு(வேதாரண்யம்) என்னும் ஊரில் பிறந்தவர்.
  • தந்தை – மீனாட்சி சுந்தர தேசிகர்
  • மதுரை நகரத்தார் வேண்டுகோளுக்கு இணங்க, திருவிளையாடல்புராணம் இயற்றினார்.
  • இந்நூலை சிவபெருமான் திருக்கோவிலின் எதிரே உள்ள அறுகால் பீடத்தில் அரங்கேற்றினார்.
  • இவர், திருவிளையாடல் போற்றிக்கலிவெண்பா, மதுரைப் பதிற்றுபத்துதந்தாதி ஆகிய நூல்களையும், வேதாரண்ய புராணம் என்னும் மொழிபெயர்ப்பு நூலையும் இயற்றினார்.

நூல் குறிப்பு:

  • திருவிளையாடல் புராணம், கந்தபுராணத்தின் ஒரு பகுதியான ஆலாசிய மான்மியத்தை அடிப்படையாக கொண்டது.
  • இந்நூல் மதுரைக்காண்டம்(18 படலம்), கூடற்காண்டம்(30 படலம்), திருவாலவாய்க்காண்டம்(16 படலம்) என்னும் முப்பெரும் பகுதிகளை உடையது.
  • இந்நூலின் 3363 விருதப்பாக்கள் உள்ளன.
  • இந்நூலில் இறைவனின் 64 திருவிளையாடல்கள் கூறப்பட்டுள்ளன.
  • ந.மு.வேங்கடசாமி இந்நூலுக்கு உரை எழுதியுள்ளார்.

Leave a Reply