சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் மு.வரதராசனாரின் கடிதம்

மு.வரதராசனாரின் கடிதம்

தம்பிக்கு என்ற கடிதத்தில் அன்புள்ள எழில் என்று தொடங்கி,

  • தமிழரின் ஒற்றுமை
  • தனி ஒருவர் உயர்வு இன உயர்வு ஆகாது
  • தமிழ்மொழி ஒன்றே தமிழரைப் பிணைந்து ஒற்றுமைப்படுத்தும்
  • ஆட்சிமொழி என்றால் சட்டசபை முதல் நீதிமன்றம் வரை தமிழ் வழங்க வேண்டும்.
  • கல்விமொழி என்றால் எவ்வகை கல்லூரிகளிலும் எல்லாப் பாடங்களையும் தமிழிலே கற்பிக்க வேண்டும்.
  • கடிதம், பணவிடை, விளம்பரப் பலகை, விற்பனைச் சீட்டு முதலியவை எல்லாம் தமிழில் எழுத வேண்டும்.
  • சாதிசமய வேறுபாடுகளை மறக்க கற்றுகொள்; மாறாக முடியாவிட்டால் புறக்கணிக்கக் கற்றுக்கொள்.
  • வெளிநாட்டுத் துணியை மறுப்பது போல தமிழ்நாட்டுக்கும் தமிழ்மொழிக்கும் நன்மை செய்யாத செய்தித்தாள்களை விலக்கு.
  • தமிழர் நடத்தும் கடைகளையும் தொழிற்கூடங்களையும் போற்று.
  • தமிழர் கடை தொலைவில் இருந்தாலும், விலை கூடுதலாக இருந்தாலும், ஏதேனும் குறை இருந்தாலும் அங்கேயே சென்று வாங்கு.
  • கூடிய வரையில் தமிழ்நாட்டில் தமிழ்த் தொழிலாளர்களால் செய்யப்பட்ட பொருள்களையே வாங்கு.
  • தமிழரிடையே பகையையும் பிரிவையும் வளர்க்கும் எந்தச் செயலையும் செய்யாதே, பேசாதே, எண்ணாதே.
  • கொள்கைகள், கட்சிகள், இயங்ககளைவிட நாட்டு மக்களின் நன்மையே பெரிது.
  • தலைமை உன்னைத் தேடி வந்தால் வரட்டும்; நீ அதைத் தேடி அலையாதே.
  • தொண்டுக்கு முந்து; தலைமைக்கு ஓய்ந்து
  • ஒவ்வொருவரும் ஆணையிடுவதற்கு விரும்பிகிறார். அடங்கி ஒழுகுவதற்கு யாரும் இல்லை. அதனால் தான் வீழ்ச்சி நேர்ந்தது.

Leave a Reply