சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் திருக்குறள்

திருக்குறள்

சொற்பொருள்:

  • அகழ்வாரை – தோண்டுபவரை
  • தலை – சிறந்த பண்பு
  • பொறுத்தல் – பொறுத்துக்கொள்ளுதல்
  • இறப்பு – துன்பம்
  • இன்மை – வறுமை
  • ஒரால் – நீக்குதல்
  • மடவார் – அறிவிலிகள்
  • விருந்து – வீட்டிற்கு புதியவராய் வந்தவர்
  • நிறை – சால்பு
  • ஒறுத்தாரை – தண்டித்தவரை
  • போன்றும் – உலகம் அழியும்வரை
  • நோநொந்து – துன்பத்திற்கு வருந்தி
  • மிக்கவை – தீங்குகள்
  • தகுதியான் – பொறுமையால்
  • துறந்தார் – பற்றற்றவர்
  • இன்னா – தீய

இலக்கான குறிப்பு:

  • பொறுத்தல் – தொழிற்பெயர்
  • அகல்வார், இகழ்வார் – வினையாலணையும் பெயர்
  • மறத்தல், பொறுத்தல் – தொழிற்பெயர்
  • நன்று – குறிப்பு வினைமுற்று
  • விருந்து – பண்பாகு பெயர்
  • ஒரால், நீக்குதல் – தொழிற்பெயர்
  • நீங்காமை – எதிர்மறைத் தொழிற்பெயர்
  • ஒருத்தார் – வினையாலணையும் பெயர்
  • பொதிந்து – வினையெச்சம்
  • வையார் – வினைமுற்று
  • ஒருத்தார், பொறுத்தார் – வினையாலணையும் பெயர்
  • தற்பிறர் – ஏழாம் வேற்றுமைத் தொகை
  • செய்யினும் – இழிவு சிறப்பும்மை
  • நொந்து – வினையெச்சம்
  • அரண், திறன் – ஈற்றுப்போலிகள்
  • விடல் – அல் ஈற்று வியங்கோள் வினைமுற்று
  • இறந்தார் – வினையாலணையும் பெயர்
  • உண்ணாது – வினையெச்சம்

ஆசிரியர் குறிப்பு:

  • இவர் நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப்புலவர், நான்முகனார், மாதானுபாங்கி, பெருநாவலர் என்னும் சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுவார்.
  • இவரின் காலம் கி.மு.31ஆம் நூற்றாண்டு என்று கூறுவர்.

நூல் குறிப்பு:

  • திரு + குறள் = திருக்குறள்
  • திரு = செல்வம், சிறப்பு, அழகு, மேன்மை, தெய்வத்தன்மை எனப் பல பொருள் உண்டு.
  • குறள் = குறுகிய அடி உடையது.
  • இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என முப்பெரும் பிரிவுகளை கொண்டது.
  • அறம் 38 அதிகாரங்களாகவும், பொருள் 70 அதிகாரங்களாகவும், இன்பம் 25  அதிகாரங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
  • இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  • இந்நூலை போற்றிப் பாராட்டிய பாடல்களின் தொகுப்பே திருவள்ளுவ மாலை.

Leave a Reply