அரசியல் நிர்ணயசபையின் அமைப்பு

அரசியல் நிர்ணயசபையின் அமைப்பு

அரசியல் நிர்ணயசபையின் அமைப்பு

  • அரசியல் நிர்ணய சபையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 389 ஆகும்
    • 11 பிரிட்டிஷ் இந்திய மாகணங்களில் இருந்து 292 இடங்கள்
    • சுதந்திர அரசுகளின் 93 இடங்கள்
    • முதன்மை ஆணையர்கள் வசமுள்ள மாகாணத்தில் இருந்து 4 இடங்கள்
  • அரசியல் நிர்ணயசபையின் அமைப்பு – இதில் 296 இடங்கள் பிரிட்டிஷ் இந்தியாவிற்கும் , 93 இடங்கள் சுதந்திர மாகாண அரசகளுக்கும் ஒதுக்கப்பட்டன
  • 296 இடங்களில், 292 இடங்களுக்காண உறுப்பினர்கள் 11 மாகாணங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டனர்
  • 11 மாகாணங்கள் = மதராஸ், பாம்பே, உத்திரப்பிரதேசம், பீகார், மத்திய மாகாணம், ஒரிசா, பஞ்சாப், வடமேற்கு எல்லை, சிந்து, வங்காளம் மற்றும் அஸ்ஸாம்
  • 4 உறுப்பினர்கள், நான்கு முதன்மை ஆணையரின் மாகங்களில் இருந்து, மாகாணத்திற்கு ஒருவர் என தேர்வு செய்யப்பட்டனர்.
  • நான்கு மாகாணங்கள் = டெல்லி, அஜ்மீர்-மேர்வாரா, கூர்க், பலுசிஸ்தான்
  • மாகாணங்கள் மற்றும் இந்திய மாநில மக்கள் தொகை விகிதத்தின் அடிப்படையில் (சுமார் 10 இலட்சம் பேருக்கு ஒரு உறுப்பினர்) உறுப்பினர் இடங்கள், அந்தந்த பகுதியில் உள்ள பெரும்பான்மை சமுதாயங்களைச் சேர்ந்தவர்களுக்கு அமையுமாறு இருந்தது
  • பிரிட்டிஷ் இந்தியாவில் உள்ள 296 இடங்களை, மூன்று பிரிவில் பிரித்தனர். அவை
    • முஸ்லிம்
    • சீக்கியர்கள்
    • பொது (முஸ்லிம், சீக்கியர் அல்லாதவர்கள்)

அரசியல் நிர்ணயசபையின் அமைப்பு

  • ஒவ்வொரு மதத்தினை சார்ந்த உறுப்பினர்களையும், அம்மதத்தை சார்ந்த மக்கள் தேர்வுசெய்து மாகான சட்டமன்றத்திற்கு அனுப்பி வைத்தனர். அதன்படி
    • இந்துக்கள் = 163 பேர்
    • முஸ்லிம்கள் = 80 பேர்
    • தாழ்த்தப்பட்ட பிரிவினர் = 31 பேர்
    • இந்திய கிறித்துவர்கள் = 6 பேர்
    • பழங்குடியினர் = 6 பேர்
    • சீக்கியர்கள் = 4 பேர்
    • ஆங்கிலோ-இந்தியர்கள் = 3 பேர்
    • பார்சிகள் = 3 பேர்
  • சுதந்திர அரசுகளுக்கான 93 இடங்களுக்கான உறுப்பினர்களை, அந்தந்த அரசுகளின் தலைமை பிரிவால் பரிந்துரை செய்து அனுப்பப்பட்டனர்
  • பிரிட்டிஷ் மாகாணங்களில் உள்ள 296 இடங்களுக்கான தேர்தல் 1946-ம் வருடம் ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்றது. இதில் கட்சிகள் பெற்ற வெற்றியானது,
    • இந்திய காங்கிரஸ் = 208 இடங்கள்
    • முஸ்லிம் லீக் = 73 இடங்கள்
    • சுயேச்சை = 15 இடங்கள்
  • இந்த தேர்தலானது நேரடி தேர்தல் அல்ல. மறைமுகத் தேர்தல் முறையாகும்.

அரசியல் நிர்ணயசபையின் அமைப்பு

  • “பிரிவினை திட்டம்” (அல்லது) “டிக்கி பேர்ட் திட்டம்” (அல்லது) “ஜூன் 3 திட்டம்” அல்லது “மவுண்ட்பேட்டன் திட்டத்தின்” படி இந்திய, பாகிஸ்தான் பிரிக்கப்பட்டு, மேற்கு பஞ்சாப், கிழக்கு வங்காளம், வடமேற்கு எல்லை மாகாணம், சிந்து, பலுசிஸ்தான், சில்ஹெட் (அஸ்ஸாம்) ஆகியவை பாகிஸ்தானுடன் சேர்க்கப்பட்டதால் மொத்த “இந்திய” உறுப்பினர்களின் எண்ணிக்கை 299 ஆனது.
  • 299 உறுப்பினர்களில்
    • 9 மாகாணங்களில் = 226 உறுப்பினர்கள்
    • 3 முதன்மை ஆணையர் மாகாணம் = 3 உறுப்பினர்கள் (டெல்லி, அஜ்மீர், கூர்க்)
    • 29 சுதந்திர அரசில் = 7௦ உறுப்பினர்கள்
  • மாகாண வாரியாக உறுப்பினர்கள் எண்ணிக்கையில்,
    • ஒருங்கிணைந்த மாகாணம் = 55 உறுபினர்கள்
    • மதராஸ் மாகாணம் = 49 உறுபினர்கள்
    • பீகார் = 36உறுப்பினர்கள்
    • சுதந்திர அரசில் மிக அதிகபட்சமாக மைசூர் அரசில் – 7 உறுப்பினர்கள் இருந்தனர்

அரசியல் நிர்ணயசபையின் அமைப்பு

  • இந்திய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்கள் அனைவரும் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள் இல்லை.
  • பாதி பேர் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். மீதம் பரிந்துரை செய்து அனுப்பப்பட்டவர்கள்.
  • தேர்தல் ஆனது அனைவரும் வாக்களித்து தேர்வு செய்யப்படவில்லை. 1935-ம் வருட இந்திய அரசு சட்டப்படி, வாக்குரிமையானது சொத்து, வரி செலுத்துதல், மற்றும் கல்வி தகுதி அடிப்படையில் வாக்களிக்கும் உரிமை பெற்றவர்கள் மட்டுமே வாக்களித்து தேர்வு செய்தனர்

அரசியல் நிர்ணயசபையின் அமைப்பு

  • அரசியல் நிர்ணய சபையில், காங்கிரசின் சார்பில் முக்கியத் தலைவர்கள் ஒவ்வொரு அமைப்பு பிரிவிற்கும் இருந்தனர்
    • காங்கிரஸ் = நேரு, படேல், ராஜேந்திர பிரசாத், ராஜாஜி, முன்ஷி
    • பார்சி இனம் = எச்.பி.மோடி
    • மார்வாடி இனம் = டி.பி.கெய்தான்
    • பெண்கள் = விஜயலட்சுமி பண்டிட், துர்காபாய், சரோஜினி நாயுடு
    • ஆங்கிலோ இந்தியர் = பிரான்க் அந்தோணி
    • ஆதிவாசி = ஜெயபால் சிங்
    • பிற்படுத்தப்பட்டோர் = ஹரேந்திர முகர்ஜி
    • கூர்க்கா சமுகம் = ஏ.பகதூர்
  • அரசியல் நிர்ணய சபையில் அணைத்து முக்கிய தலைவர்களும் தேர்வுசெய்யப்பட்ட நிலையில், இதில் இடம்பெறாத ஒரே முக்கிய தலைவர் = மகாத்மா காந்தி மற்றும் முகமது அலி ஜின்னா மட்டுமே.

அரசியல் நிர்ணயசபையின் அமைப்பு

  • அரசியல் நிர்ணயசபையின் அமைப்பு – அதிகாரப்பூர்வ முத்திரையாக “யானை” (Elephant) சின்னம் தேர்வுசெய்யப்பட்டது

Leave a Reply