கலித்தொகை

கலித்தொகை

கலித்தொகை

கலித்தொகை

  • திணை = அகத்திணை
  • பாவகை = கலிப்பா
  • பாடல்கள் = 150
  • அடி எல்லை = 11-80
  • பாடியோர் = 5

பெயர்க்காரணம்

  • கலிப்பா வகையால் பாடப்பெற்ற ஒரே தொகை நூல் இதுவே.

கலித்தொகை சிறப்பு

திருத்தகு மாமுனி சிந்தாமணி கம்பன்

விருத்தத் கவி வளமும் வேண்டோம் – திருக்குறளோ

கொங்குவேள் மாக்கதையும் கொள்ளோம், நனி ஆர்வேம்

பொங்கு கலி இன்பப் பொருள்

                                         என்றும் பழம் பெரும் புலவர்களால் பாராட்டப் பெற்றது.

வேறு பெயர்கள்

  • கலி
  • குறுங்கலி
  • கற்றறிந்தோர் ஏத்தும் கலி
  • கல்விவலார் கண்ட கலி
  • அகப்பாடல் இலக்கியம்

உரை, பதிப்பு

கடவுள் வாழ்த்து

  • இந்நூலின் கடவுள் வாழ்த்து பாடியவர் = பாரதம் பாடிய பெருந்தேவனார்
  • இந்நூலில் கடவுள் வாழ்த்து குறிப்பிடும் கடவுள் = சிவபெருமான்

பாடியோர்

பெருங்கடுங்கோன் பாலை; கபிலன் குறிஞ்சி;

மருதனிள நாகன் மருதம்; – அருஞ்சோழன்

நல்லுருந்திரன் முல்லை; நல்லந்துவன் நெய்தல்

கல்விவலார் கண்ட கலி

  • பாலை திணை பாடல்கள் பாடியவர் = பெருங்கடுங்கோ (36 பாடல்கள்)
  • மருதம் திணை பாடல்கள் பாடியவர் = மருதன் இளநாகனார் (36 பாடல்கள்)
  • நெய்தல் திணை பாடல்கள் பாடியவர் = நல்லந்துவனார் (33 பாடல்கள்)
  • குறிஞ்சி திணை பாடல்கள் பாடியவர் = கபிலர் (29 பாடல்கள்)
  • முல்லை திணை பாடல்கள் பாடியவர் = சோழன் நல்லுருந்திரன் (17 பாடல்கள்)

தொகுப்பு

  • இந்நூலை தொகுத்தவர் நல்லந்துவனார்.
  • தொகுப்பிதவர் பெயர் தெரியவில்லை.
  • நூலின் முதலில் உள்ள கடவுள் வாழ்த்தையும் இறுதியில் உள்ள நெய்தற் களியையும் நல்லந்துவனாரே பாடி நூல் முழுவதையும் தொகுத்தார் என்பார் நச்சினார்கினியர்.

கலித்தொகை சிறப்புகள்

  • தொல்காப்பிய விதிப்படி கலிப்பாவால் அகத்திணையை பாடும் ஒரே எட்டுத்தொகை நூல் கலித் தொகை மட்டுமே.
  • பா வகையால் பெயர் பெற்ற நூல்கள் = கலித் தொகை, பரிபாடல்
  • கலித்தொகையின் பாடல்கள் ஓரங்க நாடக அமைப்பை பெற்றுள்ளது.
  • பெண்கள் பிறந்த வீட்டுக்கு உரியவர் அல்லர் என கலித்தொகை கூறுகிறது.
  • பாலை தினையை முதலாவதாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது
  • நூல் முழுவதுமே பாண்டியர்களை பற்றிய குறிப்பே உள்ளது.
  • பிற சங்க நூல்களில் கூறப்படாத, “கைக்கிளை, பெருந்திணை, மடலேறுதல்” போன்றவற்றை கூறியுள்ளது.
  • கலித் தொகையை நல்லந்துவனார் மட்டுமே பாடினார் எனக்கூரியவர் சி.வை.தாமோதரம்பிள்ளை
  • ஏறு தழுவுதல் பற்றி கூறும் ஒரே சங்க நூல் கலித் தொகை மட்டுமே
  • பெருந்திணை, கைக்கிளை பாடல்கள் இடம்பெற்றுள்ள ஒரே சங்க நூல் கலித் தொகை மட்டுமே.
  • காமக் கிழத்தி பேசுவதாக அமைந்த ஒரே சங்க நூல் கலித் தொகை.
  • மகாபாரத கதையை மிகுதியாக கூறும் நூல் இதுவே.

முக்கிய அடிகள்

  • ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்

             போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை

             பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்

             அன்பெனப்படுவது தன்கிளை செறா அமை

             அறிவேனப்படுவது பேதையர் சொல் நோன்றல்

             செரிவேனப்படுவது கூறியது மறா அமை

  • காழ்வரை நில்லாக் கடுங்களிற்று ஒருத்தல்

             யாழ்வரைத் தங்கியாங்கு

  • பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க் கல்லதை

            மலையுளே பிறப்பினும் மலைக்கவைதாம் என்செய்யும்

 

 

 

 

Leave a Reply