பொது தமிழ் பகுதி ஆ ஐஞ்சிறுங் காப்பியம்

ஐஞ்சிறுகாப்பியங்கள்

பொருளடக்கம்

  1. நாக குமார காவியம்
  2. உதயன குமார காவியம்
  3. யசோதர காவியம்
  4. நீலகேசி
  5. சூளாமணி

ஐஞ்சிறுகாப்பியங்கள்

  • ஐஞ்சிறுகாப்பியங்கள் அனைத்தும் சமணக் காப்பியங்கள்
  • ஐஞ்சிறுகாப்பியங்கள் இலக்கணம் கூறும் நூல் = தண்டியலங்காரம்
  • ஐஞ்சிறுகாப்பியங்கள் என்ற வழக்கத்தை ஏற்படுத்தியவர் = சி.வை.தாமோதரம்பிள்ளை
  • நாக குமார காவியம் = ஆசிரியர் பெயர் தெரியவில்லை
  • உதயன குமார காவியம்   = ஆசிரியர் பெயர் தெரியவில்லை
  • யசோதர காவியம்   = வெண்ணாவலூர் உடையார் வேள்
  • நீலகேசி  = ஆசிரியர் பெயர் தெரியவில்லை
  • சூளாமணி   = தோலாமொழித்தேவர்

ஐஞ்சிறுகாப்பியங்கள் அட்டவணை:

நூல் சமயம் பாவகை ஆசிரியர் அமைப்பு
நாக குமார காவியம் சமணம் விருத்தம் 5 சருக்கம், 170 பாடல்
உதயன குமார காவியம் சமணம் விருத்தம் 6 காண்டம், 369 பாடல்
யசோதர காவியம் சமணம் விருத்தம் வெண்ணாவலூர் உடையார் வேள் 5 சருக்கம், 320 பாடல்
நீலகேசி சமணம் விருத்தம் 10 சருக்கம், 894 பாடல்
சூளாமணி சமணம் விருத்தம் தோலாமொழித்தேவர் 12 சருக்கம்,  2330 விருதப்பாக்கள்

நாககுமார காவியம்

நாககுமாரகாவியத்தின் உருவம்:

  • ஆசிரியர் = பெயர் தெரியவில்லை
  • காலம் = கி.பி.16ஆம் நூற்றாண்டு
  • பாடல்கள் = 170
  • சருக்கம் = 5
  • பாவகை = விருத்தப்பா
  • சமயம் = சமணம்

பெயர்க்காரணம்:

  • கதைத் தலைவன் நாககுமாரன் பற்றிக் கூறுவதால் நூல் இப்பெயர் பெற்றது.

வேறு பெயர்:

  • நாகபஞ்சமி கதை

பொதுவான குறிப்புகள்:

  • நாகபஞ்சமி நோன்பின் சிறப்பைக் கூறும் நூல்.
  • மனதையும் போகத்தையும் மிகுதியாக கூறும் சமண நூல்.
  • 519 பெண்களை மணக்கிறான் தலைவன்
  • இந்நூலை “சொத்தை நூல்” என்கிறார் மது.ச.விமலானந்தம்

மேற்கோள்:

  • அரனின்றிப் பின்னை ஒன்றுமுயிர்க்கு அரணில்லை என்றும்
    மறமின்றி உயிர்க்கு இடர்செய் மற்றொன்றும் இல்லைஎன்றும்
    திறமிகு உணர்ந்து தேறித் தீக்கதிப் பிறவிக்கு அஞ்சி
    மறம் இதை விட்டு அறத்தில் வாழுமின் உலகத்தாரே

உதயணகுமார காவியம்

உதயனகுமார காவியத்தின் உருவம்:

  • ஆசிரியர் = பெயர் தெரியவில்லை
  • காலம் = கி.பி.15ஆம் நூற்றாண்டு
  • பாடல்கள் = 369
  • காண்டம் = 6

காண்டங்கள்:

  • உஞ்சைக் காண்டம்
  • இலாவண காண்டம்
  • மகத காண்டம்
  • வத்தவ காண்டம்
  • நரவாகன காண்டம்
  • துறவுக் காண்டம்

வேறு பெயர்:

  • உதயணன் கதை

பொதுவான குறிப்பு:

  • இந்நூலின் மூலநூல் = பெருங்கதை
  • கதைத்தலைவன் = உதயணன்
  • உதயணனை “விச்சை வீரன்” என்றும் கூறுவர்.
  • உதயணன் யாழின் பெயர் = கோடபதி
  • “பெயர் தான் காவியம், ஆனால் காவியம் என்பது இம்மியும் இல்லை” என்பார்  மது.ச.விமலானந்தம்

மேற்கோள்:

  • வீணை நற்கிழத்தி நீ, வித்தக உருவி நீ
    நாணின் பாவை தானும் நீ, நலன்திகழ்மணியும் நீ
    காண என்றன் முன்பாய்க் காரிகையே வந்து, நீ
    தோணி முகம் கட்டு எனச் சொல்லியே புலம்புவான்

யசோதர காவியம்

யசோதர காவியத்தின் உருவம்:

  • ஆசிரியர் = வெண்ணாவலூர் உடையார் வேள்
  • காலம் = 13ஆம் நூற்றாண்டு
  • பாடல்கள் = 320
  • சருக்கங்கள் = 5
  • பாவகை = விருத்தம்
  • சமயம் = சமணம்

பொதுவான குறிப்புகள்:

  • வடமொழியில் எழுதப்பட்ட உத்திர புராணத்தில் இருந்து இதன் கதை எடுக்கப்பட்டது என்றும், புட்பதத்தார் எழுதிய யசோதர சரிதத்தின் தழுவல் என்றும் கூறுவர்.
  • “மாளவ பஞ்சம்” என்னும் கருநாடக இசை பற்றி கூறப்பட்டுள்ளது.

மேற்கோள்:

  • யான் உயிர் வாழ்தல் எண்ணி எளியவர்
  • தம்மைக் கொல்லின் வான்உயிர் இன்பமே
    அல்லால் வருநெறி திரியும் அன்றி
    ஊன்உயிர் இன்பம் எண்ணி எண்ணாமல்
    மற்றொன்றும் இன்றி மானுடர்வாழ்வு மண்ணில்
    மரித்திடும் இயல்பித்ரு அன்றோ

நீலகேசி

நீலகேசியின் உருவம்:

  • ஆசிரியர் = பெயர் தெரியவில்லை
  • காலம் = 6ஆம் நூற்றாண்டு
  • பாடல்கள் = 894
  • சருக்கம் = 10
  • பாவகை = விருத்தம்
  • சமயம் = சமணம்

வேறு பெயர்:

  • நீலகேசி தெருட்டு
  • நீலம்(யாப்பருங்கல விருத்தியுரை)

பெயர் காரணம்:

  • நீலம் = கருமை, கேசம் = கூந்தல்
  • கேசி = கூந்தலை உடையவள்
  • நீலகேசி = கரிய கூந்தலை உடையவள்

பொதுவான குறிப்புகள்:

  • நீலகேசி என்றால் கருத கூந்தலை உடையவள் என்று பொருள்
  • இந்நூல் குண்டலகேசி என்னும் நூலிற்கு எதிராக எழுதப்பட்டது.
  • நூலுக்கு உரை எழுதியவர் = திவாகர வாமன முனிவர்.
  • இவரின் உரை “சமய திவாகரம்” எனப்படுகிறது.

மேற்கோள்:

  • கோறல் பொய்த்தல் கொடுங்களவு
    நீங்கிப் பிறர் மனைகண்மேல்
    சேரல் இன்றிச் செலும் பொருள்மேல்
    சென்ற சிந்தை வேட்கையினை
    ஆறு கிற்பின் அமர் உலகம்
    நுன்கண் கடியதாம் என்றாள்

சூளாமணி

சூளாமணியின் உருவம்:

  • ஆசிரியர் = தோலாமொழித் தேவர்
  • காலம் = கி.பி.பத்தாம் நூற்றாண்டு
  • பாடல்கள் = 2330
  • சருக்கம் = 12
  • பாவகை = விருத்தம்
  • சமயம் = சமணம்

பெயர்க்காரணம்:

  • மிக்க ஒளியையும் சிறப்பினையும் உடையது சூளாமணி. ஆற்றல்களும் சிறப்புகளும் கொண்டு திவிட்டனும் விசயனும் சூளாமணி போல் ஒளிர்ந்தமையால் நூல் இப்பெயர் பெற்றது.

பொதுவான குறிப்புகள்:

  • நூல் ஆசிரியர் தோலாமொழித் தேவரின் இயற் பெயர் வர்த்தமான தேவர்.
  • இந்நூலின் முதல் நூல் = வடமொழியில் உள்ள ஆருகத மாபுராணம்
  • சூளாமணியின் கதை நாயகன் திவிட்டன்
  • நூலை முதலில் பதிப்பித்தவர் சி.வை.தாமோதரம்பிள்ளை
  • “விருதப்பாவை கையாள்வதில் இவர் சீவக சிந்தாமணி ஆசிரியரையும் மிஞ்சிவிட்டார்” என்கிறார் மு.வரதராசனார்
  • “சிந்தாமணியை விடச் செப்பமான நடையை உடையது சூளாமணி” என்று கி.வா.ஜகன்னாதன் கூறுகிறார்.
  • “சிந்தாமணியிலும் கூட இத்தகைய ஓடமும் இனிமையும் இல்லை” என்கிறார் தெ.பொ.மீ

மேற்கோள்:

  • ஆணை துரப்ப அரவு உரை ஆழ்குழி
    நானவிர் பற்றுபு நாளும் ஒருவன் ஓர்
    தேனின் அழிதுளி நக்கும் திறத்தது
    மானுடர் இன்பம் மதித்தனை கோல் நீ

1 thought on “பொது தமிழ் பகுதி ஆ ஐஞ்சிறுங் காப்பியம்”

Leave a Reply