கல்கி

கல்கி

கல்கி

கல்கி ஆசிரியர் குறிப்பு

  • கல்கியின் இயற்பெயர் = இரா.கிருஷ்ணமூர்த்தி
  • காலம் = 9 செப்டம்பர் 1899 – 5 திசம்பர் 1954
  • ஊர் = தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறை அருகே புத்தமங்களம்
  • பெற்றோர் = ராமசாமி அய்யர், தையல்நாயகி

கல்கி புனைப்பெயர்கள்

  • கல்கி
  • தேனீ
  • தமிழ்த்தேனீ
  • அகஸ்தியன்
  • லாங்கூலன்
  • ரா.கி
  • குகன்
  • பிராமண இளைஞன்
  • தமிழ்மகன்
  • பெற்றோர்
  • எமன்
  • விவசாயி
  • கர்நாடகம்

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

கல்கி சிறப்பு பெயர்கள்

  • “தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட்” என அழைக்கப்படுபவர் = கல்கி
  • “நாவல் மன்னர்” எனப்படுபவர் = கல்கி

இதழ்

  • கல்கி

கல்கி சிறுகதைகள்

  • சுபத்திரையின் சகோதரன்
  • ஒற்றை ரோஜா
  • தீப்பிடித்த குடிசைகள்
  • புது ஓவர்சியர்
  • வஸ்தாது வேணு
  • அமர வாழ்வு
  • சுண்டுவின் சந்நியாசம்
  • திருடன் மகன் திருடன்
  • இமயமலை எங்கள் மலை
  • பொங்குமாங்கடல்
  • மாஸ்டர் மெதுவடை
  • புஷ்பப் பல்லக்கு
  • பிரபல நட்சத்திரம்
  • பித்தளை ஒட்டியாணம்
  • அருணாசலத்தின் அலுவல்
  • பரிசல் துறை
  • ஸுசீலா எம். ஏ.
  • கமலாவின் கல்யாணம்
  • தற்கொலை
  • எஸ். எஸ். மேனகா
  • சாரதையின் தந்திரம்
  • கவர்னர் விஜயம்
  • நம்பர்
  • ஒன்பது குழி நிலம்
  • புன்னைவனத்துப் புலி
  • திருவழுந்தூர் சிவக்கொழுந்து
  • ஜமீன்தார் மகன்
  • மயிலைக் காளை
  • ரங்கதுர்க்கம் ராஜா
  • இடிந்த கோட்டை
  • மயில்விழி மான்
  • நாடகக்காரி
  • “தப்பிலி கப்”
  • கணையாழியின் கனவு
  • கேதாரியின் தாயார்
  • காந்திமதியின் காதலன்
  • சிரஞ்சீவிக் கதை
  • ஸ்ரீகாந்தன் புனர்ஜன்மம்
  • பாழடைந்த பங்களா
  • சந்திரமதி
  • போலீஸ் விருந்து
  • கைதியின் பிரார்த்தனை
  • காரிருளில் ஒரு மின்னல்
  • தந்தையும் மகனும்
  • பவானி, பி. ஏ, பி. எல்
  • கடிதமும் கண்ணீரும்
  • வைர மோதிரம்
  • வீணை பவானி
  • தூக்குத் தண்டனை
  • என் தெய்வம்
  • எஜமான விசுவாசம்
  • இது என்ன சொர்க்கம்
  • கைலாசமய்யர் காபரா
  • லஞ்சம் வாங்காதவன்
  • ஸினிமாக் கதை
  • எங்கள் ஊர் சங்கீதப் போட்டி
  • ரங்கூன் மாப்பிள்ளை
  • தேவகியின் கணவன்
  • பால ஜோசியர்
  • மாடத்தேவன் சுனை
  • காதறாக் கள்ளன்
  • மாலதியின் தந்தை
  • வீடு தேடும் படலம்
  • நீண்ட முகவுரை
  • பாங்கர் விநாயகராவ்
  • தெய்வயானை
  • கோவிந்தனும் வீரப்பனும்
  • சின்னத்தம்பியும் திருடர்களும்
  • விதூஷகன் சின்னுமுதலி
  • அரசூர் பஞ்சாயத்து
  • கவர்னர் வண்டி
  • தண்டனை யாருக்கு?
  • சுயநலம்
  • புலி ராஜா
  • விஷ மந்திரம்

கல்கி

கல்கி நாவல்கள்

  • கள்வனின் காதலி (1937)
  • தியாகபூமி (1938-1939)
  • மகுடபதி (1942)
  • அபலையின் கண்ணீர் (1947)
  • சோலைமலை இளவரசி (1947)
  • அலை ஓசை (1948) (சாகித்திய அகாதமி விருது பெற்ற நாவல்)
  • தேவகியின் கணவன் (1950)
  • மோகினித்தீவு (1950)
  • பொய்மான் கரடு (1951)
  • புன்னைவனத்துப் புலி (1952)
  • அமரதாரா (1954)
  • விமலா (கல்கியின் முதல் நாவல்)

கல்கி வரலாற்று புதினங்கள்

  • சிவகாமியின் சபதம்
  • பார்த்திபன் கனவு (முதல் நாவல்)
  • பொன்னியின் செல்வன்

கட்டுரை நூல்கள்

  • ஏட்டிக்குப் போட்டி (முதல் நூல் – நகைச்சுவை கட்டுரைகள்)
  • சந்கீதயோகம் (தமிழிசை குறித்த கட்டுரைகள்)

நாடகங்கள்

  • சந்திரகாசன்

கல்கி

கல்கி குறிப்புகள்

  • 1922-இல் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்றதற்காக ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவித்தார்.
  • முதல் கட்டுரை “ஏட்டிக்குப் போட்டி” 1927-இல் வெளியானது.
  • கல்கியின் முதல் நூல் = சாரதையின் தந்திரம் (சிறுகதை தொகுதி)
  • தமிழிசைக்காகக் கல்கி சதாசிவம் மற்றும் எம். எஸ். சுப்புலட்சுமியுடன் இணைந்து பாடுபட்டார் கல்கி.
  • கல்கி எழுதி முடிக்காமல் விட்ட அமரதாரா நாவலை அவர் மறைவுக்குப் பின் எழுதியவர் அவரின் மகள் = ஆனந்தி.
  • கல்கியின் அரசிய குரு = இராஜாஜி
  • “இராஜாஜியின் போர்வாள்” என அழைக்கப்பட்டவர் = கல்கி
  • திரு.வி.காவின் நவசக்தி இதழில் தேனீ என்ற பெயரில் உலக அரசியல் செய்திகளை திரட்டி எழுதினார்.
  • தமிழின் முதல் சரித்திர நாவல் = கல்கியின் “பார்த்திபன் கனவு”
  • கல்கி இதழில் தன் முதல் வரலாற்றுக் கற்பனாவாத நாவலான பார்த்திபன் கனவை எழுதினார்
  • சிறையில் இருந்தபோது கல்கி, “விமலா” என்ற தமது முதல் நாவலை எழுதினார்.
  • கல்கி எழுதிய முதல் நாடகம் = சந்திரகாசன்
  • “கல்கி” என்ற புனைப்பெயரில் கிருஷ்ணமூர்த்தி எழுதிய முதல் கட்டுரை = ஏட்டிக்குப் போட்டி
  • கல்கி வெளியிட்ட முதல் புனைகதைநூல் = எட்டு சிறுகதைகள் கொண்ட “சாரதையின் தந்திரம்” என்னும் தொகுப்பு.
  • கல்கி என்ற பெயரில் அவர் எழுதிய முதல் தொடர்கதை கள்வனின் காதலி
  • கர்நாடகம் என்னும் புனைபெயரில் அவர் எழுதிய இசை விமர்சனக் கட்டுரைகள் புகழ்பெற்றவை.
  • கல்கியை கடுமையாக விமர்சனம் செய்தவர் = சிறுகதை மன்ன புதுமைப்பித்தன் ஆவார்.
  • கல்கியின் தீவிர விமர்சகரான எழுத்தாளர் புதுமைப்பித்தன் அகாலமாய் மரணமடைந்தபோது, நிதி திரட்டி அவர் குடும்பத்தாருக்கு உதவியிருக்கிறார் கல்கி.
  • வரலாற்றுப்புனைவில் கல்கியின் நாவல்களுக்கு முன்னோடி தி.த.சரவணமுத்துப் பிள்ளை எழுதிய மோகனாங்கி என்னும் நாவல்.
  • சர் வால்டர் ஸ்காட், அலெக்ஸாண்டர் டூமா போன்ற எழுத்தாளர்களைத் தனது முன்னோடிகளாக கல்கி குறிப்பிட்டிருக்கிறார்.
  • கல்கியின் சிவகாமியின் சபதம் ராமாயணத்தின் சாயலையும் பொன்னியின் செல்வன் மகாபாரதத்தின் சாயலையும் கொண்டது.
  • கல்கியின் ஆஸ்தான ஓவியர் = மணியம்

கல்கி

கல்கி சிறப்புகள்

  • 1999 இல் இந்திய அரசு சார்பில் கல்கியை போற்றும் வகையில் அவரின் உருவம் பொறித்த தபால் தலை வெளியிட்டது.
  • 1999-ல் கல்கியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி தமிழக அரசு கல்கியின் படைப்புகள் அனைத்தையும் நாட்டுடைமை ஆக்கியது.
  • சாகித்திய காதமி விருது பெற்ற தமிழின் முதல் நாவல் = கல்கியின் “அலை ஓசை”.
  • திரு.வி.க.வின் மீது கொண்ட ஈடுபாட்டால் தம் பெயரைக் கல்கி என வைத்துக் கொண்டார் என்பர்.
  • கல்கி அவதாரம் போல சுதந்திரப்போர் என்னும் பிரளயத்தில் தான் மிதப்பதாக எண்ணி கல்கி என பெயர் வைத்துக்கொண்டதாக கல்கி எழுதியிருக்கிறார்.
  • ஆனந்த விகடனை வெற்றிகரமான பொதுவாசிப்புக்குரிய இதழாக ஆக்கியவர் கல்கி.
  • தமிழிசை இயக்கத்தை நிலைநாட்டியவை கல்கியின் எழுத்துக்கள்.
  • கல்கி எழுதிய கட்டுரைகளே எம்.கே. தியாகராஜ பாகவதர் 1948ல் இறுதியாக அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையில் இருந்து விடுதலையாக உதவின என்று சொல்லப்படுகிறது.
  • கல்கி எழுதிய ’காற்றினிலே வரும் கீதம்’ என்னும் திரைப்படப் பாடல் தமிழிசையின் முதன்மையான பாடலாக கருதப்படுகிறது.
  • கல்கி தமிழிசை இயக்கத்தை ஆதரித்து எழுதிய கட்டுரைகள் சங்கீதயோகம் என்ற பெயரில் நூலாக தொகுக்கப்பட்டுள்ளன.
  • ஜெயமோகன் = ’இந்தியக் காவிய மரபின் சாயலை மேற்கத்திய சாகசக் கதைகளின் சித்தரிப்புடன் இணைத்துத் தன் புனைவுத் தளத்தை உருவாக்கினார்’
  • சுதந்திரப் போராட்டத்தைப் பின்னணியாக கொாண்டு “கல்கி” தீட்டிய “அலை ஓசை” அவருடைய சமூக நாவல்களில் புகழ் பெற்றது. தமது படைப்புகளில் இதுவே தலைசிறந்தது என்பது கல்கியின் கருத்து.
  • கல்கியின் வாழ்க்கை வரலாற்றை சுந்தா (மீனாட்சிசுந்தரம்) பொன்னியின் புதல்வர் என்ற பெயரில் எழுதியிருக்கிறார்.
  • அறிஞர் அண்ணா = “சரித்திரத்தின் பெருமையை அடுப்பறை பெண்களும் எட்டிப்பார்க்கும் நிலையை உருவாக்கியவர் கல்கி” என்றார்.
  • உங்களுடைய எழுத்தில் ஒரு காந்த சக்தி இருக்கிறது’ என்று கல்கியைப் பாராட்டினார் ராஜாஜி…

விருதுகள்

  • “அலை ஓசை” நாவலுக்காக சாகித்திய காதமி விருது (1956)
  • சங்கீத கலாசிகாமணி விருது.

 

 

 

Leave a Reply