சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் கம்பராமாயணம்

கம்பராமாயணம்

தாதுகு சோலை தோறும் சண்பகக் காடு தோறும்
போதவிழ் பொய்கை தோறும் புதுமணத் தடங்கள் தோறும்
மாதவி வேலிப் பூக வணந்தொரும் வயல்கள் தோறும்
ஓதிய உடம்பு தோறும் உயிரென உலாய தன்றே
– கம்பர்

சொற்பொருள்:

  • தாது – மகரந்தம்
  • பொது – மலர்
  • பொய்கை – குளம்
  • பூகம் – கமுகம்

ஆசிரியர் குறிப்பு:

  • பெயர் – கம்பர்
  • ஊர் – நாகை மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள தேரழுந்தூர்.
  • ஆதரித்தவர் – சடையப்ப வள்ளல்
  • இயற்றியவை – சடகோபர் அந்தாதி, ஏரெழுபது, சிலை எழுபது, சரஸ்வதி அந்தாதி, திருக்கை வழக்கம்.
  • காலம் – கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு என்றும் பன்னிரெண்டாம் நூற்றாண்டு என்றும் கூறுவர்.
  • கம்பர், வடமொழியில் வால்மீகி எழுதிய இராமாயணத்தைத் தழுவித் தமிழில் காப்பியம் இயற்றினார்.
  • இயற்றிய அந்நூலுக்கு “இராமாவதாரம்” எனப் பெயரிட்டார்.
  • அதுவே கம்பராமாயணம் என் வழங்கப்படுகிறது.
  • எனவே, இது வழிநூல் எனப்படுகிறது.
  • கதை மாந்தரின் வடசொற் பெயர்களைத் தொல்காப்பிய முறைப்படி தமிழ்ப்படுத்திய பெருமைக்குரியவர் கம்பர்.

நூல் குறிப்பு:

  • கம்பராமாயணம் ஆறு காண்டங்களை உடையது.
  • அவை பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காடம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் ஆகும்.
  • இப்பாடல் பால காண்டத்தில் உள்ளது.
  • தற்போதைய உத்திரபிரதேச மாநிலத்தில் பாயும் சரயு நதியின் வளம் இதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply