சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்

முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்

சொற்பொருள்:

  • மதி – அறிவு
  • அமுதகிரணம் – குளிர்ச்சியான ஒளி
  • உதயம் – கதிரவன்
  • மதுரம் – இனிமை
  • நறவம் – தேன்
  • கழுவிய துகளர் – குற்றமற்றவர்
  • சலதி – கடல்
  • புவனம் – உலகம்
  • மதலை – குழந்தை
  • பருதிபுரி – கதிரவன் வழிபட்ட இடம்(வைதீஸ்வரன் கோவில்)

ஆசிரியர் குறிப்பு:

  • பெயர் – குமரகுருபரர்
  • பெற்றோர் – சண்முகசிகாமணிக் கவிராயர், சிவகாமி சுந்தரியம்மை
  • ஊர் – திருவைகுண்டம்
  • இயற்றிய நூல்கள் – கந்தர்கலிவெண்பா, மதுரை மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை, நீதிநெறி விளக்கம் முதலியன.
  • சிறப்பு – தமிழ், வடமொழி, இந்துஸ்தானி ஆகிய மொழிகளில் புலமை மிக்கவர். திருப்பணந்தாளிலும், காசியிலும் தம்பெயரால் மேடம் நிறுவி உள்ளார்.
  • இறப்பு – காசியில் இறைவனடி சேர்ந்தார்.
  • காலம் – பதினேழாம் நூற்றாண்டு.

நூல் குறிப்பு:

  • 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று பிள்ளைத்தமிழ்.
  • இறைவனையோ நல்லாரையோ பாட்டுடைத் தலைவராகக் கொண்டு அவரைக் குழந்தையாகக் கருதிப் பாடப்பெருவது பிள்ளைத்தமிழ்.
  • பத்து பருவங்கள், பருவத்திற்கு பத்து பாடல் என நூறு பாடல்கள் கொண்டது.
  • இது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இருவகைப்படும்.
  • ஆண்பாற் பிள்ளைத்தமிழின் பருவங்கள் = காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர்.
  • பெண்பாற் பிள்ளைத்தமிழ் பருவங்கள் = காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்மானை, கழங்கு(நீராடல்), ஊசல்.
  • புள்ளிருக்குவேளூரில் (வைதீஸ்வரன் கோவில்) எழுந்தருளியுள்ள முருகப்பெருமானின் பெயர் முத்துக்குமாரசுவாமி.
  • அவர் மீது பாடப்பட்டதால் இது முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் என பெயர் பெற்றது.

Leave a Reply