சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் திருக்குறள்

திருக்குறள்

சொற்பொருள்:

  • வினை – செயல்
  • காப்பு – காவல்
  • நீரவர் – அறிவுடையார்
  • கேண்மை – நட்பு
  • நவில்தொறும் – கற்கக்கற்க
  • நயம் – இன்பம்
  • நகுதல் – சிரித்தல்
  • கிழமை – உரிமை
  • அகம் – உள்ளம்
  • ஆறு – நல்வழி
  • உய்த்து – செலுத்தி
  • உடுக்கை – ஆடை
  • கொட்பின்றி – வேறுபாடு இல்லாமல்
  • புனைதல் – புகழ்தல்

ஆசிரியர் குறிப்பு:

  • பெயர் = திருவள்ளுவர்
  • வேறுபெயர்கள் = முதற்பாவலர், பொய்யில் புலவர், பெருநாவலர், செந்நாப்போதார்
  • காலம் = கி.மு. 31ம் நூற்றாண்டு

சிறப்பு:

  • பாரதியார் இவரை

“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகல் கொண்ட தமிழ்நாடு” என்றார்.

  • பாரதிதாசன் இவரை

“ வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே” என்றார்.

நூல் குறிப்பு:

  • இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  • குறள் வெண்பாக்களால் ஆனதால், குறள் எனவும், மேன்மை கருதி திரு என்னும் அடைமொழியுடன் திருக்குறள் எனவும் அழைக்கப்பெறுகிறது.
  • இது “உலகப்பொதுமுறை” என போற்றப்படுகிறது.
  • வாயுறை வாழ்த்து, பொதுமறை, பொய்யா மொழி, தெய்வ நூல் முதலிய பெயர்களும் இதற்கு உண்டு.

நூல் சிறப்பு:

  • உருசிய நாட்டில் அணு துளைக்காத கிரெம்ளின் மாளிகையில் உள்ள சுரங்கப் பாதுகாப்புப் பெட்டகத்தில் திருக்குறளும் இடம்பெற்றுள்ளது.
  • இங்கிலாந்து நாட்டுக் காட்சிச்சாலையில் திருக்குறள் விவிலியத்துடன் வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply