சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் சீட்டுக்கவி

சீட்டுக்கவி

சொற்பொருள்:

  • கந்துகம் – பந்து
  • கோணம் – வாட்படை
  • குந்தம் – சூலம்
  • கொடை – வேனிற்காலம்
  • பாடலம் – பாதிரிப் பூ
  • மா – மாமரம்
  • சடிலம் – சடை
  • கிள்ளை – கிலி
  • கந்தருவம், கந்துகம், கோணம், கொக்கு, கொடை, குந்தம், பாடலம், சடிலம், கிள்ளை – குதிரை

இலக்கணக்குறிப்பு:

  • எழுதி, புரந்து – வினையெச்சம்
  • படித்த, தீர்த்த – பெயரெச்சம்
  • பாடாத, பறவாத, சூடாத – எதிர்மறைப் பெயரெச்சம்
  • விடல் – தொழிற்பெயர்

ஆசிரியர் குறிப்பு:

  • அந்தக்கவி வீரராகவர் காஞ்சிபுரம் மாவட்டம் பூதூரில் பிறந்து பொன் விளைந்த கலதூரில் வாழ்ந்தவர்.
  • தந்தை = வடுகநாதர்.
  • இவர் பிறவியிலே கண் பார்வை அற்றவர்.
  • எனினும் கேள்வியறிவின் வாயிலாக கல்வி பயின்றார்.
  • இவர் ஏடுகள் எழுதாமல் தன் மனத்திலேயே எழுதிப் படித்தார் என அவரே கூறுகிறார்.
  • இலங்கை சென்று பரராசசேகர மன்னனை பாடி ஒரு யானை, போற்பந்தம், ஓர் ஊர் ஆகியவற்றைப் பரிசிலாகப் பெற்று ஊர் திரும்பினார்.

படைத்த நூல்கள்:

  • திருக்கழுக்குன்றப் புராணம், திருக்கழுக்குன்ற மாலை, சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ், திருவாரூர் உலா, சந்திரவாணன் கோவை.

நூல் குறிப்பு:

  • இப்பாடல் தனிப்பாடல் திரட்டு எனும் நூலில் இடம்பெற்றுள்ளது.
  • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த புலவர் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பே இந்நூல்.
  • இதில் 110 புலவர்கள் பாடிய 1113 பாடல்கள் உள்ளன.

சீட்டுக்கவி:

  • புலவர், பெரும்பாலும் அரசர் முதலான கொடையாளர்களுக்குத் தாம் விரும்பும் பொருளைப் பெறவேண்டி, ஒலைச்சீட்டில் கவியாக எழுதி அனுப்புவர். அக்கவிதைக்கு சீட்டுக்கவி எனப் பெயர்.
  • இதற்கு ஓலைத்தூக்கு, ஓலைப்பாசுரம் என்னும் வேறு பெயர்களும் உண்டு.

Leave a Reply